பாகற்காய் வற்றல்



என்னென்ன தேவை?

பாகற்காய் - 1 கிலோ,
உப்பு, மிளகாய்த்தூள் - தேவைக்கு,
எலுமிச்சம் பழம் - 2.

எப்படிச் செய்வது?

பாகற்காயை வட்ட வட்டமாக நறுக்கி உப்பு, எலுமிச்சைச்சாறு விட்டு பிசறி வைக்கவும். 1 மணி நேரம் கழித்து பிழிந்து நீரை வடித்து மிளகாய்த்தூள் பிசறி வெயிலில் நன்றாக காயவைத்து பத்திரப்படுத்தவும். எண்ணெயில் வறுத்து அப்படியே சாப்பிடலாம். குழம்பிலும் போடலாம்.