| கறிவேப்பிலை வடகம்
 
 
என்னென்ன தேவை?
 கறிவேப்பிலை விழுது, ஜவ்வரிசி விழுது - தலா 1/2 கப்,
 அரிசி மாவு - 1 கப், உப்பு - தேவைக்கு,
  பச்சைமிளகாய் விழுது - 2 டீஸ்பூன்,
 தண்ணீர் - 4 கப்.
 
 எப்படிச் செய்வது?
 
 பாத்திரத்தில் தண்ணீர், உப்பு போட்டு கொதிக்க வைத்து, பச்சைமிளகாய் விழுது, ஜவ்வரிசி விழுது, கறிவேப்பிலை விழுது, அரிசி மாவு சேர்த்து கைவிடாமல் கிளறி வெந்ததும் இறக்கவும். பின்பு கரண்டியால் எடுத்து சுத்தமான துணி அல்லது பிளாஸ்டிக் ஷீட்டில் ஊற்றி வெயிலில் 4 அல்லது 5 நாட்கள் நன்கு காயவைத்து எடுக்கவும்.
 
 
 |