தோழியருக்கான நட்சத்திர பலன்கள்-ஜூன் 16 முதல் 30 வரை



அசுவினி: எந்த விஷயத்திலும் நேர்மறை விஷயங்களை பார்க்கும் உங்களுக்கு இந்த காலகட்டத்தில் மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். மனக்கவலை குறையும். 2ல் புதன், ராகு - 3ல் சூரியன், சுக்கிரன் - 4ல் செவ்வாய் - 8ல் கேது - 10ல் சனி(வ) - 11ல் குரு(அ) என கிரக நகர்வுகள் இருக்கிறது. எல்லாவகையிலும் சாதகமான பலன் கிடைக்க பெறுவீர்கள். தன்னம்பிக்கை ஏற்படும். நல்ல பெயர் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்தில் வெளிநபர்களால் ஏதாவது குழப்பம் ஏற்படலாம். சொந்த விஷயங்களுக்கு அடுத்தவர் ஆலோசனைகளை கேட்பதை தவிர்ப்பது நல்லது.  கணவன், மனைவி ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசுவதன் மூலம் இடைவெளி குறையும். எதிலும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. மேன்மை அடைய எதிலும் கூடுதல் கவனத்துடன்  இருப்பது  அவசியம்.

பரணி: பக்குவமான அணுகுமுறையால் வெற்றி காணும் உங்களுக்கு இந்த காலகட்டத்தில் நட்சத்ரநாதன் சுக்கிரன் ராசிக்கு சுகஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். நல்ல யோகமான பலன்களைப் பெற போகிறீர்கள். 2ல் புதன், ராகு - 3ல் சூரியன், சுக்கிரன் - 4ல் செவ்வாய் - 8ல் கேது - 10ல் சனி(வ) - 11ல் குரு(அ) என கிரக பயணம் இருக்கிறது. பணவரத்து அதிகரிக்கும். மனதில் ஏதாவது ஒரு கவலை உண்டாகும். சொத்துக்கள் சம்பந்தமான காரிய அனுகூலம் ஏற்படும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கக் கூடும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும்.  குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே உறவு பலப்படும். பிள்ளைகள் மகிழ்ச்சியடைய தேவையானவற்றை செய்வீர்கள். காரிய அனுகூலம் உண்டாகும்.

கார்த்திகை: கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் திறமை உடைய  உங்களுக்கு இந்த காலகட்டத்தில் நட்சத்ராதிபதி சூரியன் சஞ்சாரம் உங்களுக்கு சாதகமான அமைப்பைக் காட்டுகிறது. வழக்கு சம்பந்தமான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். மனதிருப்தியுடன் செயலாற்றுவீர்கள். புத்திசாதூரியம் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதன் மூலம் மற்றவர்களிடம் மதிப்பு கூடும் பாராட்டு கிடைக்கும். உடல்சோர்வு நீங்கும். வாழ்வில் முன்னேற்றம் காண புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். உற்சாகமாக செயல்பட்டு வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பீர்கள். புதிய பொறுப்புகள் கிடைக்கும்.

ரோகிணி: இந்த காலகட்டத்தில் எடுத்த காரியத்தை எப்படியும் செய்து முடித்து விடுவீர்கள். ராசியில் புதன், ராகு - 3ல் சூரியன், சுக்கிரன் - 4ல் செவ்வாய் - 8ல் கேது - 10ல் சனி(வ) - 11ல் குரு(அ) என கிரக இருப்பு இருக்கிறது. சுப செலவுகள் ஏற்படும். வேலை காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். பெரியோர் நேசம் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும். வாக்கு வன்மையால் சிறப்பாக நடக்கும். புத்தி சாதூரியத்தால் எடுத்த வேலையை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே  இருந்த மனவருத்தம்  நீங்கும். காரியங்களில் இருந்த பின்னடைவு நீங்கும். புத்திசாதூரியம் வெளிப்படும்.

மிருகசீரிஷம்: எடுத்த பணிகளை செவ்வனே செய்து முடிக்கும் திறன் கொண்ட உங்களுக்கு இந்த காலகட்டத்தில் எல்லாவகையிலும் நன்மை உண்டாகும். அடுத்தவர்களுக்கு உதவுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். கோபத்தால் சில்லறை சண்டைகள் ஏற்படலாம். பணவரத்து கூடும். காரிய அனுகூலம் உண்டாகும். மந்த நிலை மாறும். புத்தி சாதூரியத்தால் வேலைகளை திறமையாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். குடும்பத்தில் நிம்மதி காணப்படும். விருந்து நிகழ்ச்சியில் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். உதவி கேட்டு உங்களை நாடி வருபவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வீர்கள்.

திருவாதிரை: எந்த ஒரு வேலையையும் பொறுப்புடன் செய்து முடிக்கும் உங்களுக்கு இந்த காலகட்டத்தில் முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். ராசியில் சூரியன், சுக்கிரன் - 2ல் செவ்வாய் - 6ல் கேது - 8ல் சனி(வ) - 9ல் குரு(அ) - 12ல் புதன், ராகு என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்திருக்கிறது. எதிர்பார்த்த தகவல்கள் நல்ல தகவலாக வரும். விருப்பங்கள் கைகூடும். நண்பர்கள் மத்தியில் மரியாதையும், அந்தஸ்தும் உயரும். மற்றவர்களிடம் பேசும்போது கோபத்தை குறைத்து பேசுவது நல்லது. பணவரத்து இருக்கும். வாழ்வில் முன்னேற்றம் காணப்படும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான நிலை காணப்படும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும்.

புனர்பூசம்: துணிச்சலாக காரியங்களில் ஈடுபடும் துணிச்சல் ராணிகளான உங்களுக்கு இந்த காலகட்டத்தில் நட்சத்ரநாதன் குருவின் சஞ்சாரத்தால் வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படும். லாபம் கிடைக்கும். மனதில் மகிழ்ச்சி ஏற்படும்படியான காரியங்கள் நடக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் உண்டாகும். மனோ தைரியம் அதிகரிக்கும். புத்தி தெளிவு உண்டாகும். குடும்பத்தில் சந்தோஷமான நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே  இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பிள்ளைகள் மனம் மகிழும்படி நடந்து கொள்வீர்கள். விருப்பங்கள் கைகூடும். அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். மதிப்பு மரியாதை கூடும்.

பூசம்: எதிலும் நன்மை தீமைகள் பற்றி ஆலோசித்து முடிவு எடுக்கும் உங்களுக்கு இந்த காலகட்டத்தில் நட்சத்ரநாதன் சனி அனுகூலமாக சஞ்சரிக்கிறார். ராசியில் செவ்வாய் - 5ல் கேது - 7ல் சனி(வ) - 8ல் குரு(அ) - 11ல் புதன், ராகு - 12ல் சூரியன், சுக்கிரன் என கிரக நகர்வுகள் இருக்கிறது. வீடு - மனை - வாகனம் சம்பந்தமான காரியங்களில் எதிர்பார்த்த பலன்கள் கிட்டும். எதிர்பார்த்தபடி எதுவும் நடக்கும். மனமகிழும்படியாக எல்லாம் நடந்து முடியும். கொடுக்கல், வாங்கலில் இருந்த சுணக்க நிலை மாறும். பணவரத்து இருக்கும். உங்களுக்கு நற்பெயர் கிடைப்பதில் எந்த இடையூறும் இருக்காது. குடும்பத்தில் இருந்து வந்த மனம் நோகும்படியான சூழ்நிலைகள் மாறும். கணவன்-மனைவிக்கிடையே எதிர்பாராத மனவருத்தம் ஏற்பட்டு நீங்கும்.

ஆயில்யம்: இந்த காலகட்டத்தில் உங்களுக்கு பேச்சின் இனிமையால் காரியம் கைகூடும். ராசியில் செவ்வாய் - 5ல் கேது - 7ல் சனி(வ) - 8ல் குரு(அ) - 11ல் புதன், ராகு - 12ல் சூரியன், சுக்கிரன் என கிரகங்களின் சுற்று இருக்கிறது. எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். புதிய பொறுப்புகள் சிலருக்கு கிடைக்கலாம். வெளிநாடு முயற்சிப்பவர்களுக்கு அனுகூலம் கிடைக்கும். குடும்பத்தில் சகஜநிலை காணப்படும். உறவினர்கள் மூலம் நல்ல தகவல் வந்து சேரும். கணவன் மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். மற்றவர்கள் ஆலோசனை கேட்டு உங்களை நாடி வருவார்கள். உங்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேருவார்கள். கூடுதல் கவனத்துடன் செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும்.

மகம்: இந்த காலகட்டத்தில் எல்லாவகையிலும் நல்லதே நடக்கும். 4ல் கேது - 6ல் சனி(வ) - 7ல் குரு(அ) - 10ல் புதன், ராகு - 11ல் சூரியன், சுக்கிரன் - 12ல் செவ்வாய் என கிரக நகர்வுகள் இருக்கிறது. நட்சத்ராதிபதி கேதுவின் சஞ்சாரம் அனுகூலமான பலன் தரும். பணவரத்து அதிகரிக்கும். எதிர்ப்புகள் விலகும்.  நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். விரும்பிய காரியங்களை செய்து சாதகமான பலன் கிடைக்க பெறுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.  தேவையான பண உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும்.  உறவினர்கள் - நண்பர்கள் மூலம் நன்மை நடக்கும்.

பூரம்: எந்த காரியம் செய்தாலும் அதில் முன்னேற்றம் காண வேண்டும் என்ற ஆர்வம் கொண்ட உங்களுக்கு இந்த காலகட்டத்தில் வீணாக மனதை உறுத்திக் கொண்டிருந்த கவலை நீங்கும். 4ல் கேது - 6ல் சனி(வ) - 7ல் குரு(அ) - 10ல் புதன், ராகு - 11ல் சூரியன், சுக்கிரன் - 12ல் செவ்வாய் என கிரக அமைப்பு இருக்கிறது. எவ்வளவு திறமையுடன்  செயல்பட்டாலும் சிறிது தடங்கல்கள் ஏற்படலாம். முன் திட்டமிடல் அவசியம். அடுத்தவருக்கு உதவிகள் செய்யும் போது கவனம் தேவை. காரியங்களில் இருந்த இழுபறியான நிலை மாறும். பணவரத்து திருப்தி தரும். பணிகளில் முழுமூச்சுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பீர்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மன வருத்தம் நீங்கும். குழந்தைகளின் எதிர்காலத்திற்கான திட்டங்களை செயல்படுத்துவீர்கள். புதிதாக வீடு - மனை வாங்குவதற்கான வேலைகளைத் தொடங்குவீர்கள்.

உத்திரம்: குடும்பத்தில் அக்கறை காட்டும் நீங்கள் எப்போதுமே சரியான பாதையை தேர்ந்தெடுப்பவர்கள். இந்த காலகட்டத்தில் கிரக சூழ்நிலை உங்களுக்கு நல்ல பலனை அள்ளித்தரும் நிலையில் இருக்கிறது. நீண்ட நாட்களாக இருந்து வந்த உடல் உபாதை மறையும். நட்சத்ரநாதன் சூர்யன்  சஞ்சாரம் எல்லாவற்றிலும் இருந்து வந்த மனக்கவலையை நீக்கும். திட்டமிட்டபடி காரியங்களை செய்து முடிப்பீர்கள். எந்த ஒரு வேலையை செய்வதாய் இருந்தாலும் தகுந்த முன்னேற்பாடுகள் தேவை. குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் வருகை இருக்கும். கணவன் -மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.  பிள்ளைகளின் முன்னேற்றத்தில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.

ஹஸ்தம்: அடக்கத்தோடும், அன்புடனும் பழகும் உங்களுக்கு இந்த காலகட்டத்தில் தைரியமாக எந்த காரியத்தையும் செய்து முடிப்பீர்கள். சகோதரர்கள் மூலம் நன்மை உண்டாகும்.  3ல் கேது - 5ல் சனி(வ) - 6ல் குரு(அ) - 9ல் புதன், ராகு - 10ல் சூரியன், சுக்கிரன் - 11ல் செவ்வாய் என கிரகங்களின் சஞ்சாரம் இருக்கிறது. பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். கணவன் -மனைவிக்கிடையே சுமூக உறவு இருக்க விட்டு கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகள் கல்வியில் அக்கறை காட்டுவீர்கள். மனத்துணிவு அதிகரிக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி திருப்திகரமாக இருக்கும். காரிய வெற்றிக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். எதிலும் வெற்றி பெற கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

சித்திரை: நூதனமான காரியங்களில் ஈடுபாடு உடைய நீங்கள் எதிலும் வேகமானவர்கள். இந்த காலகட்டத்தில் எந்த காரியத்தையும் மிக அழகாக நேர்த்தியாக செய்து முடிப்பீர்கள்.  செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். பகைவர்களால் ஏற்படும் சிறு தொல்லைகளை சமாளிக்க வேண்டி இருக்கும்.  புதிய நண்பர்களுடன் பழகும்போது கவனம் தேவை. கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். வீடு மனை சம்பந்தமான முயற்சிகள் சாதகமான பலன் தரும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையில் வாக்குவாதங்கள் ஏற்படலாம். அடுத்தவர்களின் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. தெய்வபக்தி அதிகரிக்கும்.

ஸ்வாதி: எந்த இக்கட்டான நிலையையும் சமாளிக்கும் திறமை உடைய உங்களுக்கு இந்த காலகட்டத்தில் ஆக்கப்பூர்வமான யோசனைகள் தோன்றினாலும் அதை செயல்படுத்துவதில் தாமதம் உண்டாகும். 2ல் கேது - 4ல் சனி(வ) - 5ல் குரு(அ) - 8ல் புதன், ராகு - 9ல் சூரியன், சுக்கிரன் - 10ல் செவ்வாய் என கிரகங்களின் பயணம் இருக்கிறது. பேச்சை கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது.  மற்றவர்களுடன் கருத்து வேற்றுமை ஏற்படாமல் கவனமாக இருப்பது நல்லது.  வேலைப்பளு இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து போவது நன்மை தரும். பிள்ளைகளின் நலனில் அக்கறை தேவை. வீண் பேச்சை குறைப்பது நல்லது. மனதிற்கினிய சம்பவங்கள் நடைபெறும்.

விசாகம்: பார்வையாலேயே மற்றவர்களை பணிய வைக்கும் திறமை உடைய உங்களுக்கு இந்த காலகட்டத்தில் எதிர்ப்புகள் விலகும். பணவரத்து திருப்தி தருவதாக இருக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். வாகனங்களை ஓட்டி செல்லும் போது கவனம் தேவை. பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது அவசியம். தனிமையாக இருக்க நினைப்பீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த குழப்பம் அகலும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை வந்து நீங்கும். உறவினர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது.  பிள்ளைகளை
அனுசரித்து செல்வது நன்மை தரும். சக உறவினர்களுடன் இருந்த மனவருத்தம்  நீங்கும். காரியங்களில் இருந்த தடைகள் நீங்கி நல்லபடியாக முடிப்பீர்கள். பணிகளை திட்டமிட்டு செய்வது நல்லது.

அனுஷம்: அஞ்சா நெஞ்சமும், கம்பீரமான பேச்சும் உடைய நீங்கள் உழைப்பின் மீது நம்பிக்கை கொண்டவர்கள். இந்த காலகட்டத்தில் அனைத்து விஷயங்களும் அனுகூலமாக நடக்கும். ராசியில் கேது - 3ல் சனி(வ) - 4ல் குரு(அ) - 7ல் புதன், ராகு - 8ல் சூரியன், சுக்கிரன் - 9ல் செவ்வாய் என கிரகங்களின் ஸ்தானம் இருக்கிறது.  மற்றவர்கள் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. வெளி வட்டார தொடர்புகளில் கவனம் தேவை. அலைச்சல் அதிகரிக்கும். எடுக்கும் வேலைகளை முடிக்க வேகம் காட்டுவீர்கள். குடும்பத்தில் இருப்பவர்களால் டென்ஷன் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையில் கருத்து வேற்றுமை வராமல் இருக்க மனம் விட்டு பேசுவது நல்லது.  பிள்ளைகள்  நலனில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.  எதிலும் திருப்தியான சூழல் நிலவும்.


கேட்டை: அமைதியும், கருணையும் கொண்ட உங்களுக்கு இந்த காலகட்டத்தில் சுபச் செலவுகள் உண்டாகும். ராசியில் கேது - 3ல் சனி(வ) - 4ல் குரு(அ) - 7ல் புதன், ராகு - 8ல் சூரியன், சுக்கிரன் - 9ல் செவ்வாய் என கிரக அமைப்பு இருக்கிறது. மற்றவர்களால் அனுகூலம் ஏற்படும். அடுத்தவர்கள் கடனுக்கு பொறுப்பேற்காமல் இருப்பது நல்லது. எந்த ஒரு காரியமும் வேகமாக நடக்கும். எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது  நல்லது. அவர்களின் நலனுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். கணவன், மனைவிக்கிடையில் திடீர் இடைவெளி ஏற்படலாம். பிள்ளைகள் அறிவு திறன் கண்டு ஆனந்தப்படுவீர்கள். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். உடல் ஆரோக்கியம் சீரடையும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கூடும்.

மூலம்: எதை எப்படி செய்ய வேண்டும் என்பதை நன்கு உணர்ந்த உங்களுக்கு இந்த காலகட்டத்தில் பணவரவு அதிகமாகும். 2ல் சனி(வ) - 3ல் குரு(அ) - 6ல் புதன், ராகு - 7ல் சூரியன், சுக்கிரன் - 8ல் செவ்வாய் - 12ல் கேது என கிரக இருப்பு இருக்கிறது. சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அதை செய்ய முடியாத சூழ்நிலை வரும். எதிலும் ஈடுபடாமல் ஒதுங்கி சென்றாலும் மற்றவர்கள் விடாமல் வம்புக்கு இழுப்பார்கள். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த சில காரியங்கள் நடந்து முடியும். லாபம் கூடும். வாக்கு வன்மையால் காரியங்களை சாதித்து கொள்வீர்கள். குடும்பத்தில் எதிர்பார்த்த சுமுகமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவி இருவரும் சேர்ந்து எடுக்கும் முடிவுகள் நல்ல பலன் தருவதாக இருக்கும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும். பணவரத்து திருப்தி தரும் விதத்தில் இருக்கும்.

பூராடம்: பார்த்தால் பசு பாய்ந்தால் புலி என்பதற்கேற்ப சாதுவாக காணப்படும் உங்களுக்கு முன்கோபம் அதிகமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் எடுத்த காரியத்தை எப்பாடுபட்டாவது செய்து முடிப்பீர்கள். 2ல் சனி(வ) - 3ல் குரு(அ) - 6ல் புதன், ராகு - 7ல் சூரியன், சுக்கிரன் - 8ல் செவ்வாய் - 12ல் கேது என கிரக அமைப்பு இருக்கிறது.  சாதாரணமாக பேசினாலும் மற்றவர்கள் அதில் குறை காண்பார்கள். பணவரத்து கூடும். செயல் திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே  இடைவெளி குறைய மனம் விட்டு பேசுவது நல்லது. பிள்ளைகள் எதிர்கால நலனுக்காக பாடுபட வேண்டி இருக்கும்.  உங்களுக்கு எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். தெய்வ பக்தி அதிகரிக்கும்.

உத்திராடம்: அதிகார தோரணையும், கம்பீரமான தோற்றமும் கொண்ட உங்களுக்கு இந்த காலகட்டத்தில் பணவரத்து திருப்தி தரும். நக்ஷத்ரநாதன் சூர்யனின் சஞ்சாரத்தால் எதிர்பாராத திருப்பம் உண்டாகும். சிந்தித்து செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.  அவர்களிடம் கவனமாக பழகுவது நல்லது. வருமானம் வழக்கம் போல் இருக்கும். திட்டமிட்டு செய்யும் காரியங்கள் நல்ல பலன் தரும். குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். உறவினர்களுடன்  அனுசரித்து செல்வதும், வாக்குவாதத்தை தவிர்ப்பதும்
நல்லது.  பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வது நல்லது. எடுத்த காரியத்தை வெற்றிகரமாக
செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும்.


திருவோணம்: விருந்தினரை உபசரிப்பதில் மகிழ்ச்சியடையும் உங்களுக்கு இந்த காலகட்டத்தில் அனைத்து விஷயங்களிலும் நன்மை ஏற்படும். ராசியில் சனி(வ) - 2ல் குரு(அ) - 5ல் புதன், ராகு - 6ல் சூரியன், சுக்கிரன் - 7ல் செவ்வாய் - 11ல் கேது என கிரக அமைப்பு இருக்கிறது. கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். மற்றவர்களின் பிரச்சனைகளுக்கு வலிய சென்று உதவுவீர்கள். கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். உறவினர்களுடன்  அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய பாடுபடுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே வெளியில் சொல்ல முடியாத மனக்குறைகள் வரலாம்.  பிள்ளைகள்  கல்வி மற்றும் அவர்கள் எதிர்காலம் பற்றிய கவலை ஏற்பட்டு நீங்கும்.  எந்த விஷயத்திலும் இருந்து வந்த மந்த நிலை மாறும்.

அவிட்டம்: மற்றவர்களிடம் இருந்து ரகசிய தகவல்களை தெரிந்து கொள்ளும் திறமை கொண்ட உங்களுக்கு இந்த காலகட்டத்தில் உடல் ஆரோக்கியம் அடையும். நக்ஷத்ரநாதன் செவ்வாய் பாதசார சஞ்சாரத்தால் நன்மைகள் நடக்கும். திட்டமிட்டு  எதையும்  செய்வது நல்லது. மனதில் வீண்கவலைகள் உண்டாகக் கூடும். அடுத்தவரை நம்பி எதையும் ஒப்படைப்பதை தவிர்ப்பது நல்லது. சுபச்செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் இறுக்கமான சூழ்நிலை காணப்படும். மனதில் இருப்பதை வெளியில் சொல்லாமல் செய்கையில் காட்டுவீர்கள். கணவன், மனைவிக்கிடையில் இணக்கமான போக்கு காணப்படும். எதையும் திட்டமிட்டு செய்வது நன்மை தரும். உங்களுடைய ஆக்கப்பூர்வமான செய்கைகளால் நன்மையே நடக்கும். வீண்
அலைச்சல் குறையும். காரிய தடை நீங்கும்.

சதயம்: வேகமாக செயல்படும் குணம் கொண்ட உங்களுக்கு இந்த காலகட்டத்தில் நிலுவையில் இருந்த பணம் வந்து சேரும். ராசியில் குரு(அ) - 4ல் புதன், ராகு - 5ல் சூரியன், சுக்கிரன் - 6ல் செவ்வாய் - 10ல் கேது - 12ல் சனி(வ) என கிரகங்களின் அமைப்பு இருக்கிறது. நீண்ட நாட்களாக வாங்க திட்டமிட்ட வாகனம் சொத்து மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். முயற்சிகள் சாதகமான பலன் தருவதாக இருக்கும். எதிர்பாராத அதிர்ஷ்டமும் கிடைக்கலாம். உடல் ஆரோக்யம் உண்டாகும். தெய்வ பக்தி அதிகரிக்கும். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கும். உதவியும், ஆலோசனையும் கிடைக்கும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் வருகை அதனால் நன்மையும் இருக்கும். கணவன், மனைவிக் கிடையில் நெருக்கம் அதிகரிக்கும்.  பிள்ளைகளின் அறிவுதிறன் அதிகரிக்கும்.

பூரட்டாதி: வாழ்க்கையில் முன்னேற்றமடைய வேண்டும் என்ற எண்ணத்தில் கடுமையாக உழைக்கும் உங்களுக்கு இந்த காலகட்டத்தில் மற்றவர்களுடன் இருந்த பகை அகலும். முடங்கிக் கிடந்த காரியங்கள் அனைத்தும் வேகம் பிடிக்கும். நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள், நண்பர்கள் உங்களுக்கு கை கொடுப்பார்கள். மனதில் இருந்து வந்த சஞ்சல மனநிலையில் மாற்றம் இருக்கும். தருமசிந்தனை உண்டாகும். பணநெருக்கடி குறையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எடுக்கும் பணிகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். கணவன் மனைவிக்கிடையே இருந்த குழப்பங்கள் நீங்கும். பிள்ளைகள் கல்வியில் அக்கறை காண்பிப்பீர்கள். நண்பர்கள் உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

உத்திரட்டாதி: எத்தனை இடையூறுகள் வந்தாலும் எதிர்த்து நின்று காரிய வெற்றி காணும் உங்களுக்கு இந்த காலகட்டத்தில் எந்த ஒரு காரியத்திலும் சரியான முடிவுக்கு வர முடியாமல் இருந்த தடுமாற்றம் நீங்கும். 3ல் புதன், ராகு - 4ல் சூரியன், சுக்கிரன் - 5ல் செவ்வாய் - 9ல் கேது - 11ல் சனி(வ) - 12ல் குரு(அ) என கிரகங்களின் ஓட்டம் இருக்கிறது. மற்றவர்களின் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடியாத நிலை உண்டாகி அவர்களுடன் பகை ஏற்படலாம். சாமர்த்தியமாக எதையும் சமாளிக்கும் துணிச்சல் வரும். பணவரத்து திருப்தி தரும். எதிர்ப்புகள் குறையும். போட்டிகள் குறையும். நீண்ட நாட்களாக இருந்து வந்த மனக்கிலேசங்களில் தெளிவான நிலை ஏற்படும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். எந்த இக்கட்டான சூழ்நிலையையும் மனஉறுதியுடன் சமாளித்து வெற்றி காண்பீர்கள். எதிர்ப்புகள் நீங்கும்.

ரேவதி: எப்போதும் சுறுசுறுப்பாக செயலாற்றும் உங்களுக்கு இந்த காலகட்டத்தில் நிதானமாக எந்த முடிவையும் எடுப்பீர்கள். பணவரத்து மனமகிழ்ச்சியை தரும். 3ல் புதன், ராகு - 4ல் சூரியன், சுக்கிரன் - 5ல் செவ்வாய் - 9ல் கேது - 11ல் சனி(வ) - 12ல் குரு(அ) என கிரகங்களின் பாதசாரம் இருக்கிறது. நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனை குறையும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். எந்த ஒரு காரியமும் சாதகமாக முடியும். விருப்பமானவர்களுடன் சந்திப்பு ஏற்படும். நட்சத் ராதிபதி புதன் சஞ்சாரம் வாக்குவன்மை நன்மையை தரும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். கணவன், மனைவிக்கிடையில் நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படும். உங்களது
முயற்சிகளுக்கு இருந்த முட்டுக்கட்டைகள் அகலும்.  

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர்