நியூஸ் வே



முதுபெரும் தலைவர்களே சமூக வலைத்தளங்களில் உற்சாகமாக இணைந்திருக்க, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மட்டும் இதுவரை ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கம் வரவில்லை. ஆனாலும் தங்கள் கட்சியின் சோஷியல் மீடியா குழுவினரை அடிக்கடி கூப்பிட்டு நிலவரம் விசாரிக்கிறார். ஃபேஸ்புக்கில் பி.ஜே.பி பக்கத்தைவிட காங்கிரஸ் பக்கத்துக்கு அதிக வரவேற்பு இருக்கிறதாம்!

பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் சைவத்துக்கு மாறி வருகிறார்கள். இதில் லேட்டஸ்ட், அலியா பட். ‘‘இந்த ஆண்டு வெயிலின் சூடு தாங்காமல் இறைச்சி யைத் தவிர்த்தேன். இப்போது சைவ உணவு எனக்கு மகிழ்ச்சி தருகிறது. அதனால் நிரந்தரமாக மாறுகிறேன்’’ என்கிறார் அலியா.

ஷ்ரத்தானந்த் யோகாச்சார்யா என்பவர் தகவல் உரிமைச் சட்டத்தில் கேட்ட ஒரு கேள்வியில் மத்திய சட்ட அமைச்சகம் ஆடிப் போயிருக்கிறது. மத்திய அமைச்சர்களும் பல மாநில அமைச்சர்களும் இந்தியில் பதவிப் பிரமாணம் எடுக்கும்போது ‘இறைவனின் பெயரால்’ என்பதற்கு ‘ஈஷ்வர் கி நாம்’ என சொல்வார்கள். ‘‘அந்த ஈஸ்வரன் யார்?’’ என்பதே ஷ்ரத்தானந்த் கேள்வி.

செல்போனில் ரிங் டோனாகவோ, விளம்பரங்களிலோ தேசிய கீதத்தை பயன்படுத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது. இங்கல்ல, வங்க தேசத்தில்! இப்படிச் செய்வது தேசிய கீதத்தை அவமானப்படுத்துவது போல இருக்கிறதாம்!

கொள்ளை கும்பலால் ரயிலிலிருந்து தூக்கி எறியப்பட்டு, அந்த விபத்தில் தனது காலை இழந்த வீராங்கனை அருணிமா சின்ஹா. சற்றும் மனம் தளராமல் செயற்கைக் காலைப் பொருத்திக்கொண்டு எவரெஸ்ட் சிகரத்தை எட்டிப் பிடித்தார். ‘செயற்கைக் காலோடு எவரெஸ்ட்டை தொட்ட முதல் இந்தியர்’ என்ற பெருமை பெற்ற இவரின் வாழ்க்கை இப்போது படமாகிறது. ஃபர்ஹான் அக்தர் இயக்கும் இந்தப் படத்தில் அருணிமாவாக நடிக்கப் போவது யார் என்பது மட்டும் இன்னும் முடிவாகவில்லை!  
ரஜினி - ரஞ்சித் இணையும் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைப்பது உறுதியாகிவிட்டது. சமீபத்தில் தனது ஃபேமிலியுடன் ரஜினியைச் சந்தித்து ஆசி பெற்றிருக்கிறார் சந்தோஷ் நாராயணன். ‘‘உங்க மியூசிக் கேட்டிருக்கேன். நல்லா பண்ணுவீங்கன்னு தெரியும். ஆல் தி பெஸ்ட்!’’ என அவரை உற்சாகமூட்டியிருக்கிறார் ரஜினி.

சந்திரபாபு நாயுடுவின் ஓராண்டு ஆட்சி நிறைவு பெற்றதை அடுத்து, சிரித்த முகத்தோடு இருக்கும் அவரது புகைப்படம் ஒன்று ஆந்திராவின் எல்லா அரசு அலுவலகங்களிலும் மாட்டுவதற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

வித்யா பாலன் இப்போது டாக்டர் வித்யா பாலன். கடந்த 10 ஆண்டுகளாக இந்தித் திரைப்படங்களில் பெண்களைப் பெருமைப்படுத்தும் வேடங்களில் நடித்ததற்காக அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது அகமதாபாத்தின் ராய் பல்கலைக்கழகம். ‘‘என் 9 வயதில் அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்தபோது நான் டாக்டர் ஆக ஆசைப்பட்டேன். விதி என்னை நடிகை ஆக்கியது. இப்போது இப்படியாவது டாக்டர் ஆகியிருக்கிறேன்’’ என நெகிழ்கிறார் வித்யா.

‘அச்சம் என்பது மடமையடா’ படத்திற்காக 15 நாட்கள் கேரளாவிற்கு போகிறார் சிம்பு. இந்தப் படம் முடிந்த பிறகு இன்னும் ஒரு படம் செய்யலாம் என சிம்பு கேட்க, ‘ஓகே’ சொல்லிவிட்டார் கௌதம்.

ஜெயம் ரவி, நயன்தாரா நடித்து வரும் ‘தனியொருவன்’, ஃபிலிமில் எடுக்கப்படும் கடைசி படம் என்று சொல்லப்படுகிறது. சினிமா டிஜிட்டல் மயமாகிவிட்டதால் சென்னையில் ஃபிலிம் லேப்கள் மூடப்பட்ட நிலையில், இந்தப் படத்தின் ஃபிலிம் பிராசஸிங்கிற்காக மும்பை செல்ல இருக்கிறார்களாம்.

ஆர்யாவுக்கு நாளுக்கு நாள் சைக்கிளிங் ஆர்வம் அதிகரிப்பதைப் போல காமெடி சென்ஸும் எகிறுகிறது. ராஜேஷ் டைரக்‌ஷனில் ‘வி.எஸ்.ஓ.பி’ படத்தின் டப்பிங் வேலையில் இருப்பவர், ‘‘இப்போது நான் காமெடி கிங் ராஜேஷுடன்தான் இருக்கிறேன். மாடுலேஷன், மாடுலேஷன்னு என்னை சாவடிக்கிறான்!’’ என ஜாலி ட்வீட் செய்திருக்கிறார்.

அஜித் மட்டும்தான் முன்பு எல்லோருக்கும் பிரியாணி விருந்து கொடுப்பார். இப்போது ப்ரியா ஆனந்தும் அந்த வழியைப் பின்பற்ற ஆரம்பித்துவிட்டார். இப்போது தன் படப்பிடிப்பின் கடைசி நாளில் தன் செலவில் பிரியாணி ரெடி செய்து தன் கைப்படவே பரிமாறுகிறார். பிரியா(ணி) ஆனந்த்!

கமலின் ‘தூங்காவனம்’ ஒரு த்ரில்லர். ஒரு லேட் நைட் பார்ட்டியில் அசம்பாவிதமாக ஒரு கொலை நடந்துவிடுகிறது. அது எப்படி நடந்திருக்கும்? என்பதை அங்கு இருந்த முக்கியமானவர்கள் தனித்தனியாக விவரிக்கிறார்கள். கடைசியில் நடந்தது என்ன என்பதுதான் த்ரில்லரின் முடிச்சு.

‘‘திருமணம் பண்ணிக்கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது சரியா?’’ என டாப்ஸியிடம் கேள்வி நீட்டினால், ‘‘லிவிங் டுகெதர் பத்தி கேட்கறீங்
களா? இந்த விஷயத்தில் நான் ‘ஓகே கண்மணி’!’’ எனப் பச்சைக்கொடி பதில் வருகிறது.

‘எந்திரன்’, ‘என் ராசாவின் மனசிலே’, ‘திமிரு’, ‘அமரன்’, ‘அரண்மனை’, ‘சண்டக்கோழி’, ‘சிகப்பு ரோஜாக்கள்’ என வெற்றிப் படங்களின் 2ம் பாக வேலைகள் ஆரம்பித்துவிட்டன. அதோடு ‘உலகம் சுற்றும் வாலிபன்’ இரண்டாம் பாகத்தை எடுக்கலாமா, அதில் அஜித் அல்லது விஜய்யை நடிக்க வைக்கலாமா... என முயற்சிகள் நடந்து வருகின்றன.

ஐ.பி.எல் ஃபைனலில் இந்தப் பொண்ணு பரிசு கொடுக்க வந்தாலும் வந்தது. இந்தியா வில் பாதி இளைஞர்கள் மனசைக் காணோம். யெஸ் பேங்க் ஓனரின் மகள் ராக்கி கபூர் டான்டன்தான் அந்த திடீர் அழகு வி.வி.ஐ.பி. தன் பெயரில் ஹாஷ்டேக் டிரெண்டிங் எல்லாம் உருவாக்கியிருக்கும் ரசிகர்களுக்கு ராக்கியே நன்றி சொல்லி பேட்டி கொடுத்தார்.

‘எல்லாம் சரி, இந்த அழகு தேவதைக்கு துபாய் தொழிலதிபரோடு கல்யாணம் ஆகிடுச்சே!’ எனக் கவலைப்பட்ட நெட் ஜொள்ளர்கள், ராக்கியின் தங்கை ரோஷ்னி கபூர் பக்கம் கவனத்தைத் திருப்பினார்கள். பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர், ஹோட்டல் வராந்தாவில் ஒரு பெண்ணோடு லிப் லாக் செய்தார் என்ற கிசுகிசுவில் சிக்கியிருப்பவர் இந்த ரோஷ்னிதான். அதுவும் போச்சா?

‘சண்டக்கோழி 2’ படம் டிராப் என்று கிளம்பிய கிசுகிசுவிற்கு விஷாலும், லிங்குசாமியும் ஃபுல் ஸ்டாப் வைத்துவிட்டார்கள். ஜூலையில் ஷூட்டிங் செல்கிறார்கள். விஷாலின் ஜோடியாக அக்‌ஷரா கமிட் ஆகிறார் என தகவல்.

சிவப்பு நிறத்தில் ரேஞ்ச் ரோவர் கார் வாங்கியிருக்கிறார் ஸ்ருதி ஹாசன். இது அவரின் ஒரு வருடக் கனவாம்! இந்தக் கார் மும்பையில் பயன்
படுத்த மட்டும்!