உணவால் இணைவோம்!



பரபரப்பாக ஓடிக்கொண்டு இருக்கும் இந்த காலக்கட்டத்தில், வேலைக்கு போகும் பெண்கள் மட்டும் இல்லாமல் பேச்சலர்களும் வீட்டில் இன்ஸ்டென்ட் முறையில் சமைக்கவே விரும்புகிறார்கள். வேலையை முடித்துவிட்டு களைப்பாக வரும் போதே, அடுப்படியில் நின்று சமைக்க வேண்டுமா என்று நினைக்கும் போது, அது அவர்களை மேலும் சோர்வடைய செய்து விடுகிறது.

இவர்களின் தேவையை அறிந்துதான் ஆச்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான பத்மாசிங் ஐசக் பல வகையான இன்ஸ்டென்ட் மிக்ஸ்களை அறிமுகம் செய்துள்ளார். உணவு தர பரிசோதனைக்கூடம் மூலம் பரிசோதனை செய்யப்பட்டு இயற்கை முறையில் விளைவிக்கும் பொருட்களை கொண்டு தயாரிக்கப்படுகிறது.

இதில் காலை சிற்றுண்டி மட்டும் இல்லாமல், ஆரோக்கிய பானம், இனிப்பு மிக்ஸ், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கான டிபன் பாக்ஸ் மிக்ஸ், இரவு நேரத்தில் செய்யக்கூடிய உணவு வகை மிக்ஸ்கள் என அனைத்து வகைகளும் உள்ளன. தோழியர்களே உங்கள் சமையலை எளிதாக்கி உணவால் குடும்பத்துடன் இணையுங்கள்...

தொகுப்பு:ப்ரியா மோகன்