பொடி தோசை



என்னென்ன தேவை?

பச்சரிசி - 3 கப்,
புழுங்கலரிசி - 1 கப்,
உளுத்தம்பருப்பு - 1/2 கப்,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு.

பொடி செய்ய...

தனியா, கருப்பு உளுந்து, கடலைப்பருப்பு தலா - 1 டேபிள்ஸ்பூன்,
பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்,
எள்ளு - 1 டீஸ்பூன்,
காய்ந்தமிளகாய் - 8,
உப்பு - தேவைக்கு, துருவிய கொப்பரை - 1 டேபிள்ஸ்பூன்.

எப்படிச் செய்வது?
 
முதலில் எள்ளை வெறும் கடாயில் வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு 1/2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, மற்ற பொருட்களையும் சிவக்க வறுத்து கடைசியாக கொப்பரையை போட்டு அடுப்பை அணைத்துவிட வேண்டும். (பருப்பு சூட்டிலேயே கொப்பரை வறுபட்டு விடும்). ஆறியவுடன், உப்பு சேர்த்து சற்று கரகரப்பாக பொடித்து வைத்துக் கொள்ளவும்.
 
தோசை...
 
பச்சரிசி, புழுங்கலரிசி, உளுந்து மூன்றையும் சேர்த்து 3 மணி நேரம் ஊறவைத்து நைசாக அரைக்கவும். இத்துடன் உப்பு போட்டுக் கரைத்து ஒருநாள் இரவு புளிக்க வைக்கவும். மறுநாள் தோசைக்கல்லில் தோசை வார்த்து, உடனேயே மேலே பொடியை பரவலாக தூவி, கரண்டியில் எண்ணெய் தொட்டு மேலே லேசாக தடவி விட்டு வெந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும். அடுப்பை மிதமான தணலில் எரிய விடவும். இந்த ேதாசையை திருப்பிப் போடக் கூடாது.