சுவாமி ஜாலியானந்தா





க‘‘கையில ஒரு கோடி கூட இல்ல... அழகா ஒரே ஒரு சிஷ்யை இல்ல... ஆனாலும் அந்த ஆதீனம் பதவி கிடைக்குமான்னு நீங்க கேக்கறது உங்களுக்கே ஓவரா இல்லையா குருவே?’’

ஃ‘‘யோவ்... சீக்கிரமா போட்டோ எடுய்யா! எவ்ளோ நேரம்தான் ஆணி செருப்புல நிக்கற மாதிரி, சும்மா பாவ்லா பண்ணிட்டு தொங்கறது?’’

ங‘‘காலையிலேர்ந்து எழுந்திரிக்காம புலித்தோல்ல உட்கார்ந்து தியானம் பண்றேனா? செருப்படி விழும் நாயே! எவனோ புலித்தோல் மேல ஃபெவிகுவிக் கொட்டி வச்சிட்டான்டா...’’


க‘‘ஆசிரமத் திறப்பு விழா பத்திரிகையைப் பார்த்து ஏன் வயித்தெரிச்சல் படறீங்க? பிக்பாக்கெட் அடிச்சுட்டிருந்த நீங்க ஆசிரமம் தொடங்கலாம்... பிச்சையெடுத்துக்கிட்டு இருந்த நான் ஆசிரமம் ஆரம்பிக்கக் கூடாதா?’’

ஃ‘‘இப்படி பேட்டை ரவுடி மாதிரி முதுகுல தண்டத்த சொருகி எடுத்து ஃபிலிம் காட்டினாத்தான் சீடர்களுக்கு பயம் இருக்கும்!’’