கவிதைக்காரர்கள் வீதி



Kungumam magazine, Kungumam weekly magazine, Tamil Magazine Kungumam, Tamil magazine, Tamil weekly magazine, Weekly magazine


  பகை

சிநேகமாக சிரிக்கும்
குழந்தையைப்
பார்க்கும்போது,
மறந்தே போகிறது
அதன் குடும்பத்தோடு
எனக்கிருந்த பகை!

 ஏ.மூர்த்தி,
புல்லரம்பாக்கம்.

அழகு

கோலத்தை விடவும்
கூடுதல் அழகு,
அதனை
மிதிப்பதைத் தவிர்த்து
ஒதுங்கி நடைபோடும்
குழந்தையின்
பிஞ்சுப் பாதங்கள்!
வீ.சிவசங்கர்,
கள்ளக்குறிச்சி.

தேடல்

விடுமுறை நாளில்
தெருவெங்கும் தேடியும்
சிக்காத குழந்தையை
வீட்டுக்கு
அழைத்து வந்தது,
பலூன்காரர் சத்தம்!
 ப.உமாமகேஸ்வரி,
நெய்வேலி.

பிரிவு

அறுந்த கயிற்றை
முடிக்கலாம்...
ஆனால்
முடிச்சு
வடுவாகவே இருக்கும்!
 சிக்ஸ்முகம்,
கள்ளியம்புதூர்.

சந்தேகம்

மனிதனின்
மன ஓட்டுக்குள்
மறைந்திருக்கும்
ஆமை..!
 பி.என்.ஜெய்சங்கர்,
திருவாரூர்.

ஞாபகம்

மரணம் வரும்வரையிலும்
வாழ்ந்துகொண்டுதான்
இருக்கிறது,
தோற்றுப் போன அந்த
முதல் காதல்!
வைகை ஆறுமுகம்,
வழுதூர்.