எல்லோருக்கும் தலைமையாகத் திகழவேண்டும் என்ற முனைப்புள்ள மகரராசி நேயர்களே! தொடர்ச்சியான சிரமங்களால் இடமாற்றம் செய்யும் எண்ணமும், பதவி உயர்வு பற்றிய சிந்தனைகளும், எதிரிகளின் தொல்லை எண்ணங்களுடன் இம்மாதம் தொடங்குகிறது. 25ம் தேதிக்குப் பிறகு சனியின் அமைப்பினால் எண்ணிய செயல்கள் ஈடேறும். புதன்கிழமைகளில் அரசு உதவிகளிலும் 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை இடம் விற்பனை, வாங்குதல் ஆகியவைகளில் லாபமும் பெறலாம். ராகு உறவினர்களின் உதவியையும் அரசின் சகாயத்தையும் உறுதி செய்வதோடு, கொடுத்த வாக்கை காப்பாற்றச் செய்வார்.
மாணவர்களுக்கு: பாக்கெட் உணவுப் பண்டங்களை தவிர்த்து விடுங்கள். பரீட்சை நேரத்தில் யாரேனும் படிக்கச் சொல்லி ஊக்குவிக்க வேண்டும் என்பதை கேது, சுக்கிரன் அமைப்பு சுட்டிக் காட்டுகிறது. சூரியன், செவ்வாய் அமைப்பு, இடமாற்றிக் கொண்டிராமல் ஓரிடத்தில் அமர்ந்து படித்தால் எளிய வெற்றி கிட்டும் என்பதை தெரிவிக்கிறது.
விவசாயிகளுக்கு: தோட்டத்திற்கு தடையில்லா நிர்வாகத்தினை குரு, சுக்கிரன் அமைப்பு உறுதி செய்கிறது. பசு மாடுகள் வாங்குவதை தற்போது குறைத்துக் கொள்ளுங்கள். பங்குனி மாதம் முழுவதும் அவற்றால் நஷ்டம் ஏற்படும். தானியங்களால் நல்ல லாபமும் நிலப் பிரச்னைகளில் முழு வெற்றியையும் புதன் அருள்வான்.
உத்யோகஸ்தர்களுக்கு: வெளிநாடு செல்ல வேண்டும் என்ற முயற்சியால் காலம், பணம் தற்போது விரயமாகும். கேது, செவ்வாய் அமைப்பால் அலுவலகத்தில் ஒருவருக்கொருவர் உதவி புரியாத நிலை ஏற்படும். எதிரிகளின் வலிமை அதிகரிக்கும். அரசாங்க உத்யோகஸ்தர்களுக்கு பாராட்டுதல்களும் ஊதிய உயர்வுடன் கூடிய பணி உயர்வும் கிடைக்கும். ஆண்டாள் சந்நதியில் பிரார்த்தனை செய்வதும் திருச்சி உறையூர் நாச்சியாரை சேவிப்பதும் உயர்வு தரும். வியாபாரிகளுக்கு கிழக்கு திசை பிரயாணம் லாபம் தரும்.
பெண்களுக்கு: குரு, சுக்கிரன் அமைப்பால் நல்ல ஆடைகள் கிடைக்கும். தங்கள் விருப்பம்போல் வாகனம் வாங்கி மகிழ்வீர்கள். அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் விரும்பத்தகாத அதிகாரியின் கீழ்பணிபுரிய நேரிடும். செவ்வாயின் அமைப்பு தொழில் முறை நஷ்டங்களையும் இடமாற்ற எண்ணத்தையும் ஏற்படுத்தும். வீடுமாறும் எண்ணமிருந்தால் உடனே செயல்படுத்துங்கள்.
அரசியல்வாதிகளுக்கு: மேற்கு, தென்மேற்கு திசை பிரயாணமும் தலைமையை சந்தித்தலும் விரும்பிய உயர்வுகள் பெற்று திரும்புதலும் சாத்தியமாக குரு உதவி புரிவார். தங்கள் விருப்பம்போல் சுதந்திரமாக செயல்படுவதையும் அரசு அதிகாரிகளின் உதவிகள் தங்கள்பால் திரும்புவதையும் சூரியன்-சனி அமைப்பு உறுதி செய்கிறது.
பெரியவர்களுக்கு: இம்மாதம் சனி சூரியன் அமைப்பு தலைவலியையும் புத்தி தடுமாற்றத்தையும் இட மாற்றத்தையும் காட்டுகிறது. புராணங்கள் கேட்பது ஸ்திர புத்தியை அளிக்கும்.
அச்சாரங்கள்: 10ம் தேதி 12.00 மணி வரையிலும் (ராகு காலம் நீங்கலாக), 12ம் தேதி காலை 7 மணிக்குள்ளும் 24ம் தேதி காலை 9.00 மணிக்கு முன்பும் புதிய ஒப்பந்தங்கள் செய்யலாம்.
எச்சரிக்கை: 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை பிரயாணங்களில் எச்சரிக்கை தேவை. அதிக அளவில் பசு மாடு வைத்திருப்பவர்கள் பாதுகாப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
பரிகாரம்: சிதம்பரம் நடராஜரையும் கோவிந்தராஜ பெருமாளையும் ஒருங்கே தரிசித்திடுங்கள். ‘வந்தே சம்பும் உமாபதிம்’ ‘வசுதேவசுதம் தேவம்’ என்ற ஸ்லோகங்களை சொல்வதும் நலம் தரும்.