கூரிய புத்தி சாதுர்யத்தால் நறுக்கு தெரித்தாற்போல் பேசும் விருச்சிகராசி நேயர்களே! இம்மாதம் அரசின் உதவிகள் கிடைக்கப் பெறுவது, உயர் பதவிகள் கிடைத்தல், திருமண நிச்சயம், சிந்தனையில் தெளிவு என்று பல நற்பலன்களுடன் தொடங்குகிறது. 3ம் தேதிமுதல் 6ம் தேதி வரையிலும் 21ம் தேதிமுதல் 24ம் தேதி வரையிலும், உறவினர்கள் வரவால் வீடு கலகலப்பாக இருக்கும்.
திருமணத்திற்கு காத்திருப்பவர்களுக்கு 6, 8, 19, 20, 21 தேதிகளில் புதன், சந்திரன், செவ்வாய் சேர்க்கையால் விவாக விஷயங்கள் பலிதமாகும், பல்துறை வியாபாரிகளுக்கு 19 முதல் 21ம் தேதிவரை நல்ல லாபம் கிடைக்கும். 25ம் தேதிக்கு பிறகு சனியால் கடன் தொந்தரவுகள் அதிகமாகும்.
மாணவர்களுக்கு: சூரியனால் தெளிவாகப் புரிந்து கொள்ளும் திறன், திருப்பிச் சொல்லி நினைவாற்றலை வலுப்படுத்திக் கொள்ளுதலால் இம்மாத தேர்வுகளில் முழுவெற்றி கிட்டும். சிலசமயம், சனி பார்வை பெறும் சூரியனால் மனம் ஒருநிலையில் இல்லாமல் இருக்கும். செடி வளர்க்கவும். தேர்வு முடிந்ததும் நல்ல வேலை பெறும் வாய்ப்பினை புதன், குரு அளிப்பார்கள்.
விவசாயிகளுக்கு: சகோதரர்கள் வழியில் நஷ்டப்பட வேண்டிவரும். சிநேகிதர்களுடன் சேர்ந்து கூட்டாக முடிவெடுத்து விவசாயத்தில் ஈடுபடுவதைப் பற்றி ஆலோசிப்பீர்கள். சுக்கிரன், குரு, கேது அமைப்புகள் நூதனமான பலன்களை பூமி மூலம் வழங்குவார்கள், குறிப்பாக மூலிகைகளை பயிரிடுவதால் அதிக லாபம் கிடைக்கும். பூங்கொத்து தயாரிக்கத் தேவையான சிறந்தவகை பூக்களை வளர்த்தல் அதிக லாபம் தரும்.
உத்யோகஸ்தர்களுக்கு: சனி அமைப்பினால் அலுவலக செயல்களில் கவனம் செலுத்த இயலாமல், அதனலேயே வேலையில் கெட்ட பெயர் ஏற்படக்கூடும். ஆனால் சுக்கிரன்-கேது அமைப்பினால் பதவியுயர்வை எதிர்பார்த்திருப்பவருக்கு, வாகன வசதியுடன் உயர் பதவி கிடைக்கும். துர்க்கை அருள் பெறுதல் நலம். புதன் அமைப்பினால் ரியல் எஸ்டேட் துறையினர் லாபமடைவார்கள்.
பெண்களுக்கு: 8, 10 தேதிகளில் கணுக்காலில் வலி உண்டாகும். குடும்பத்தில் விரோதமான சூழ்நிலை தோன்றும். வீடுகட்டும் முயற்சி பலனளிக்கும். துர்க்கையை இந்த மாதம் 24ம் தேதி முதல் 26ம் தேதிக்குள் தரிசிப்பீர்கள். குடும்பத்தில் எதிர்பார்த்திருக்கும் புத்திர விருத்தி 14ம் தேதி வாக்கில் தெரியவரும்.
அரசியல்வாதிகளுக்கு:புதன் கிழமைகள் மிகுந்த பலன் தரும். அரசுவழி செயல்பாடுகள் தங்கள் எண்ணப்படி நடப்பதும், அதனால் தொண்டர்கள் உற்சாகமடைவதும், சக தலைவர்களால் பாராட்டு பெறுவதும் இந்த மாதத்தில் நிகழும். தலைமையினால் தங்களின் அதிகாரம் அதிகரிக்கும்.
பெரியவர்களுக்கு: தங்கள் வயதிற்கேற்ற சாந்தி ஹோமங்கள் செய்து கொள்வீர்கள். மனைவி, குழந்தைகளுடன் சந்தோஷப்படுதலும், நல்ல வீட்டிற்கு குடிபெயர்வதுமாக இம்மாதம் குதூகலமாயிருக்கும்.
அச்சாரங்கள்: 12ம் தேதி காலை 7:30 மணிக்குள்ளும் 22ம் தேதி காலை 8 மணிக்குள்ளும், 25ம் தேதி மதியம் 12 மணிக்குள்ளும் புதிய ஒப்பந்தங்கள் செய்ய நன்மை தரும்.
எச்சரிக்கை: 15ம் தேதி காலை 9:53 முதல் 17ம் தேதி பகல் 1:54 வரை எதிலும் கவனமாக இருப்பது நல்லது.
பரிகாரம்: சிவன் கோயில் சென்று வாருங்கள். மாதத்தின் முன்பாதியில் ஒருமுறை ரமணாச்ரமம் சென்று வழிபட்டு வருதல் நலம் தரும்.