அனுஷ்காவை விரட்டிய ரசிகர்கள்!



சமீபத்தில் ஐதராபாத் ராஜீவ்காந்தி விமான நிலையத்தில் அனுஷ்காவை அடையாளம் கண்டுகொண்ட சில ரசிகர்கள், திடீரென்று அவரைச் சூழ்ந்து கொண்டு, ‘செல்ஃபி’ எடுக்க முயன்றிருக்கிறார்கள். அவ்வளவுதான், அம்மணியின் முகம் அஷ்டகோணலாகி விட்டதாம்.

 ‘யாரும் செல்ஃபி எடுக்க வேண்டாம். பிளீஸ்’ என்று பெரிய கும்பிடு போட்டபடி ஓட்டமெடுத்திருக்கிறார். விடாமல் விரட்டிய ரசிகர்களை, போலீஸ் விரட்டியதால், அனுஷ்கா தப்பித்தார்.