மைசூர்பாகு



தேவையான பொருட்கள்

கடலை மாவு - 1 கப், சர்க்கரை - 2 கப், தண்ணீர் - 1 கப், நெய் - 3 கப்.

செய்முறை

கடலை மாவை 2 மேஜைக்கரண்டி நெய்யில் பச்சை வாசனை போகும் வரை வறுக்கவும். சர்க்கரையை தண்ணீருடன் கலந்து கம்பிப்பதம் வரை கொதிக்கவிடவும். அடுப்பின் மற்றொரு பக்கத்தில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சுட வைக்கவும். சூடான தண்ணீருக்குள் நெய் பாத்திரத்தை வைத்து, நெய் சூடாக இருக்குமாறு செய்யவும்.

அடுப்பு ‘சிம்’மிலேயே இருக்க வேண்டும். இப்போது, தயாராக உள்ள சர்க்கரைப்பாகில், வறுத்த கடலை மாவை சிறிது சிறிதாகக் கொட்டிக் கைவிடாமல் கிளற வேண்டும். கடலை மாவு வெந்தவுடன் தயாராக உள்ள நெய்யைச் சிறிது சிறிதாகக் கொட்டிக் கிளற வேண்டும். சிறிது நேரம் கழித்து, நுரைத்துப் பொங்கி மேலே எழும்பி வரும்போது உடனேயே தயாராக நெய் தடவி வைத்துள்ள தட்டில் கொட்டி விடவும். ஆறியபின் துண்டாக்கவும்.