பிடி கொழுக்கட்டை



தேவையான பொருட்கள்

அரிசி ரவை - 1 கப், தேங்காய் - 4 டேபிள் ஸ்பூன், சிவப்பு மிளகாய் - 3,
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்,
கடுகு - 1/2 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, எண்ணெய் - 4 டீஸ்பூன்,
பெருங்காயம் - 1/4 டீஸ்பூன், உப்பு - தேவைக்கு, தண்ணீர் - 3 கப்.

செய்முறை

ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயம் முதலியவற்றை போட்டு தாளிக்கவும். பருப்பு நன்கு சிவந்ததும் பொடியாக கிள்ளிய மிளகாய், கறிவேப்பிலை போடவும். பின் 3 கப் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கொதிக்க விடவும். உப்பு கரைந்தவுடன் அரிசி ரவை, தேங்காய்த் துருவல் சேர்த்து நன்கு கிளறவும்.

அடுப்பை குறைத்து வைத்து வாணலியை ஒரு மூடியால் மூடி வேக விடவும். நன்கு வெந்ததும் இறக்கி ஆற விடவும். ஆறியவுடன் கையால் பிடி கொழுக்கட்டையாகப் பிடித்து ஆவியில் 10 முதல் 15 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.