அஞ்சலி....‘அங்காடித் தெரு’வில் சேர்மக்கனியாக இதயம் கனக்க வைத்தவர்... ‘எங்கேயும் எப்போது’மில் மணிமேகலையாக மனதில் இடம்பிடித்தவர்...
தோழிகளுக்குப் பிடித்த டாப் 5 ஹீரோயின் பட்டியலில் அஞ்சலி நிச்சயம் இருப்பார். தன் மனம் கவர்ந்த 5 பெண்களைப் பற்றி இங்கே பேசுகிறார் அவர்.
1
இந்திரா காந்திவீட்டைக் கட்டி மேய்ப்பதே பெண்களுக்குப் பெரிய போராட்டமான, சவாலான காரியம். அப்படியிருக்கையில் நாட்டை சமாளித்து, ஆண்களின் உலகமாக இருந்த அரசியலுக்குள் புரட்சியையும் மலர்ச்சியையும் உண்டாக்கிய ‘போல்ட் அண்ட் பியூட்டி ஃபுல்’ லேடி. பெயரைக் கேட்டாலே தேசப்பற்று பற்றிக் கொள்ளும் யாருக்கும்... அவர்தான் இந்திரா!
2
அன்னை தெரசா‘அன்னை’ என்கிற பெயருக்கு அர்த்தம் சேர்க்கிற ஒரே ஆத்மா! தனக்கென ஒற்றைக் காசைக் கூட சேர்த்து வைக்காமல், தான் நேசித்த மக்களுக்காகவே வாழ்ந்து, அவர்களுக்கே எல்லாவற்றையும் விட்டுச் சென்ற அதிசயப் பிறவி! அமைதியால் புரட்சி செய்த தெரசா எனக்கு மட்டுமில்லை, தலை முறைகள் தாண்டியும் பலருக்கும் ஆதர்சப் பெண்மணி!
3
கிரண் பேடிஆண்களை மட்டுமே அழகாகவும் கம்பீரமாகவும் காட்டிய காக்கிச்சட்டைக்கு புது அடையாளம் தந்தவர். காக்கியின் மேல் மக்களுக்கு மரியாதையையும் மனிதாபிமானத்தையும் ஏற்படுத்தியவர். போலீஸ் கேரக்டரில் நடிக்கிற வாய்ப்பு வந்தால், என்னுடைய இன்ஸ்பிரேஷன் லேடி... கிரண் பேடி!
4
ஸ்ரீதேவிகுழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, அத்தனை ‘சினிவுட்’களிலும் கனவுக்கன்னியாக தன் கொடியைப் பறக்க விட்ட பவர்ஃபுல் ஹீரோயின். நடிக்க வருகிற அத்தனை பெண்களின் பிரமிப்புப் பட்டியலிலும் இவர் நிச்சயம் இருப்பார். ‘ஸ்ரீதேவி பண்ணின மாதிரி ஒரு கேரக்டர்’ என்பது அத்தனை பேரின் கனவிலும் கட்டாயம் இருக்கும். ஹேட்ஸ் ஆஃப் டூ யு மேடம்!
5
என் அம்மா பாரதி தேவி‘தன்னால் எல்லா இடங்களிலும் இருக்க முடியாது என்பதற்காகத்தான் தாயைப் படைத்தார் கடவுள்’ என எங்கேயோ படித்த ஞாபகம்... என் அம்மா எனக்கு அப்படித்தான். அம்மா என்றால் அன்பு என்பதற்கான உதாரண மனுஷி. எங்கேயும் எப்போதும் எனக்கு எல்லாமும் ஆனவர் என் அம்மா! ஐ லவ் யூ மை டியர்!