மார்கழி உற்சவம்!



மார்கழி மாதம் துவங்கினாலே சென்னையில் உள்ள அனைத்து சபாக்களிலும் இசை, நாடகம் மற்றும் நடன கச்சேரிகள் என நிரம்பி வழியும். இதற்கான டிக்கெட்டுகளை ஆன்லைன் முறையில் பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம் என்கிறார் MDnD நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான கல்யாணசுந்தரம். MDnD என்பது இசை, நடனம் மற்றும் நாடகத்தினை குறிக்கும்.
இந்திய கலை நிகழ்ச்சிகளுக்கான உலகளாவிய இணையதளமாக செயல்பட்டு வரும் இத்தளம், மார்கழி சங்கீத சீசன் குறித்து டிக்கெட்டுகள் பற்றிய விவரங்களை தங்களின் www.mdnd.in இணையத்தில் வெளியிட்டுள்ளனர். மேலும், தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்பம் காரணமாக இசைப் பிரியர்கள் உலகில் எங்கிருந்தும் இசை, நடனம் மற்றும் நாடக நிகழ்வினை கண்டு ரசிக்கும்படி இத்தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

ரசிகர்கள் சீசன் டிக்கெட்டுகள், தினசரி டிக்கெட்டுகள், சபாக்களில் செயல்படும் கேண்டீன் உணவுகள் என அனைத்து நிகழ்வுகளுக்கான டிக்கெட்டுகளை ஒரே நேரத்தில் வாங்கலாம். அதே போல் வெவ்வேறு சபாக்களில் நடைபெறும் நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகளையும் பெறலாம். 

இணையத்தில் நாரதகான சபா, கலாக்ஷேத்ரா அறக்கட்டளை, கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ், பிரம்ம கான சபா, ஸ்ரீபார்த்தசாரதி சுவாமி சபா, மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் கிளப், நாத சுதா, இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி, பாரத் கலாச்சார், சார்சூர் கலை அறக்கட்டளை, ஸ்ரீதியாக பிரம்மகான சபா, அப்பாஸ் கல்ச்சுரல், கர்நாடகா  குளோபல் போன்ற சபாக்களில் நடைபெறும் நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகளை பெற்றுக்ெகாள்ளலாம்.  

இந்த வருடம் மேலும் புதிய அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது. ஹாட் டீல்ஸ் இணைப்பின் மூலம் டிக்கெட்டுடன் இசை நடன நூல்களை பெறலாம். அடுத்த 30 நாட்களில் நடைபெறவுள்ள நிகழ்வுகளின் விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம். பதிவு செய்யப்பட்ட கலைஞர்கள் தங்களின் நிகழ்ச்சி குறித்து தேதியினை பதிவு செய்து கொள்ளலாம். முதல் முறையாக 15 முதல் 25 வயதிற்குட்பட்டவர்களுக்கு ‘ஆனந்த மார்கழி’ தொடர் மூலம் கச்சேரி நடத்தப்படுகிறது. 

வரவிருக்கும் கச்சேரிகளுக்கு முன்பதிவு செய்பவர்கள், உணவு டோக்கன்களை ஆன்லைன் முறையில் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சலுகை மற்றும் முன்னுரிமை வசதிகள் உண்டு. இணையத்தில் இசை, நடனம் அல்லது நாடகத்தை குறித்து பார்வையாளர்கள் தங்களின் கருத்துக்களை பதிவிடலாம்’’ என்று தெரிவித்தார் கல்யாணசுந்தரம்.

பிரியா மோகன்