நியூஸ் வே



* குழந்தை ஆராத்யா பிறந்த பிறகு ஐஸ்வர்யா ராய் ரீஎன்ட்ரி கொடுக்கப் போகும் படமாக மணிரத்னத்தின் அடுத்த படத்தைச் சொன்னார்கள். ஆனால் நாகார்ஜுனா இன்னும் தெளிவாக முடிவைச் சொல்லாமல் இருக்க, மகேஷ் பாபு தனது தேதிகளை வேறு படத்துக்குக் கொடுத்து விட்டார். இதனால் மணியின் படம் தள்ளிப் போக, சஞ்சய் குப்தா இயக்கும் 'ஜஸ்பா’ படத்தில் நடிக்க தேதி கொடுத்திருக்கிறார் ஐஸ். இதுதான் அசல் ரீஎன்ட்ரி!  

* பால்கி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் இந்திப் படத்தில் இளையராஜாவின் இசையில் ஒரு பாடலைப் பாடியிருக்கிறார் அமிதாப். ‘‘அந்த அருமையான இசையில் எனது குரல் இசைந்தது நான் செய்த பாக்கியம்’’ என இளையராஜாவைக் கொண்டாடுகிறார் அமிதாப்.

* வெளியூர் ஷூட்டிங் போகும்போது காஜல் அகர்வால் லக்கேஜில் அவசியம் இடம் பிடிக்கும் சில பொருட்கள்... எலெக்ட்ரிக் குக்கர், மிக்ஸி, தோசைக்கல் போன்ற சில சமையல் அயிட்டங்கள். உடல் எடையை கூட்டவோ, குறைக்கவோ செய்யாத ஸ்பெஷல் டயட் ஒன்றைப் பின்பற்றுகிறாராம் காஜு. அதை சமைக்கத்தான் இத்தனையும்!

* திடீரென அம்மா நடிகை கேரக்டருக்கு போட்டி வலுத்து விட்டது. ‘‘குழந்தைகள் வளர்ந்து விட்டதால் நடிக்க ரெடி’’ என மும்பையிலிருந்து தூது விட்டுக்கொண்டிருக்கிறார் மாளவிகா. ‘திருஷ்யம்’ கன்னட ரீமேக்கில் நடித்த நவ்யா நாயருக்கு கன்னட வாய்ப்புகள் குவிந்தாலும், தமிழில் சான்ஸ் கேட்டு வருகிறார். இன்னொரு பக்கம் மீனாவும் மேக்கப் பாக்ஸை தூசு தட்டி வைத்திருக்கிறார்.

* நாகேஷ் பேரன் கஜேஷ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். விஜயகாந்த் நடித்த ‘தென்னவன்’ படத்தை இயக்கிய நந்தகோபால் இயக்கும் இப்படத்தில் கஜேஷ் ஜோடியாக அறிமுகமாகிறார் புதுமுகம் டிம்பிள். கஜேஷுக்கு தனது ஸ்டைல் நடனத்தையும் கற்றுக் கொடுத்திருக்கிறாராம் அப்பா ஆனந்த்பாபு.

* இந்தி ‘குயினை’ தமிழில் ரீமேக்கும் மம்பட்டியான், நாயகி வேஷத்துக்கு சமந்தாவை அணுகியிருக்கிறார். ‘‘இந்தக் கதை எனக்கு செட் ஆகாது’’ என தயக்கம் காட்டுகிறாராம் பியூட்டி குயின்.

* மதன்கார்க்கி பள்ளிப் பருவத்தில் நிறைய நாடகங்களில் நடித்தவர். கதாநாயகன் அவதாரம் எடுத்த கவிஞர்கள் பட்டியலில் அவரையும் சேர்க்க சில இயக்குனர்கள் முயற்சி எடுக்கின்றனர். ‘‘நடிகனாகி விட்டால் கூடுதல் புகழும், பொருளும் கிடைக்கும் என்றாலும் கவிஞனாக கிடைத்து வரும் நிம்மதி பறி போய்விடும்’’ என்று மறுத்து விடுகிறார்.

* தனது சொந்த பேனரில் ஆர்யா நடிக்கவுள்ள படத்தை ஆர்யாவின் நண்பேன்டா இயக்குனர் ராஜேஷ் எம். இயக்குகிறார். ‘‘இந்தக் கதைக்கு யார் செட் ஆவாங்க’’ என்று இயக்குனர் கொடுத்த ஹீரோயின் லிஸ்ட்டில் தமன்னாவின் பெயரை டிக் அடித்திருக்கிறார் ஆர்யா. அடுத்த கிசுகிசுவுக்கு கியர் போட்டாச்சு.

* திருமணங்களுக்கு போனால் மணமக்களை வாழ்த்திவிட்டு விருந்து உண்ணாமல் திரும்பும் பழக்கம் உள்ளவராம் இயக்குனர் சமுத்திரகனி. உதவி இயக்குனராக போராடிக்கொண்டிருந்த காலத்தில் கல்யாண சமையல் வேலைக்கு சென்ற ஞாபகம் மனசை அழுத்துவதைத் தவிர்க்கவே அப்படிச் செய்கிறாராம்.

* மகன் நடிக்க வந்தபிறகும் தனது சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை தக்க வைத்துள்ள மம்முட்டியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவெடுக்கிறது. ‘நட்சத்திரங்களுடே ராஜ
குமாரன்’  படத்தின் தலைப்பு இது.

* ‘‘நடிக்க வருவதற்கு முன் ஓவியப்பணியில் ஏடுபட்ட ஏழு வருடங்கள்தான் என் வாழ்க்கையின் பொற்காலம்’’ என சிலிர்க்கும் சிவக்குமார், இதுவரை 5000 ஓவியங்கள் வரைந்திருக்கிறாராம். தஞ்சை பெரிய கோயில் ஓவியம்தான் இந்த ஆல்பத்தில் ஸ்பெஷல். விரைவில் கண்காட்சி வைக்க திட்டமிட்டிருக்கிறார் மார்க்கண்டேயன்.

* குறளரசன் மியூசிக் செய்யும் படங்களில் சிம்பு தொடர்ந்து பாட உத்தேசித்து இருக்கிறார். தம்பி மியூசிக் அமைப்பதால், தான் பாடுவதற்கு பணம் எதுவும் பெறமாட்டாராம். அட, இந்த ‘டீல்’ ரொம்ப நல்லாயிருக்கே!

* ‘கலகலப்பு’ இரண்டாவது பாகத்தை உருவாக்கத் திட்டமிட்டு இருக்கிறார் சுந்தர்.சி. ஆனால், இந்தத் தடவை விமல்மிர்ச்சி சிவா கூட்டணி இல்லை. நண்பர்களான ஆர்யாஜீவா கூட்டணி! ‘‘எப்ப வேண்டுமானாலும் கால்ஷீட் ரெடி’’ என சொல்லிவிட்டதால் நயன், த்ரிஷாவை கேட்க முடிவு செய்திருக்கிறார் சுந்தர்.

சைலன்ஸ்


கார் படத்தில் கதாநாயகனை காதலித்த ஜில் நடிகைக்கு நிஜத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவருடன் காதலாம். படங்கள் வரும் முன்பே தனது அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டை நடிகை பெயருக்கு எழுதி வைத்துவிட்டார் தொழிலதிபர். இப்போது பிஸியாகி, கையில் காசு, பணம் புரள... தொழிலதிபரை கண்டுகொள்ளவில்லையாம் நடிகை. ‘‘ஆஹா... வடை போச்சே’’ என வருந்துகிறார் அவர்.

‘பிக்கப்’ பிளேபாய் நடிகருக்கும் அந்த உயர ‘அ..கா’ நடிகைக்கும் நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது ரிலேஷன்ஷிப். திடீரென இதில் விரிசல் விழுந்து விட்டதாக கிசுகிசுக்கிறது நெருங்கிய வட்டம். நடிகரின் தம்பி நடித்த படத்தின் ஃபங்ஷனுக்கு நம்பர் நடிகையை அழைத்ததால் ஆப்சென்டும் அப்செட்டும் ஆகிவிட்டார் உயர ‘கா’. அதிலிருந்து பேச்சுவார்த்தை இல்லையாம்!