கவிதைக்காரர்கள் வீதி

பாசம் எல்லோரும் மழையில் நனைந்த என்னைத் திட்டினார்கள். அம்மா மட்டும் என் தலையைத் துவட்டிவிட்டு மழையைத் திட்டினாள். - காந்திலெனின், திருச்சி.
சுவாசம் பாகனின் சுவாசம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது யானையின் தும்பிக்கையில்! - வீ.விஷ்ணுகுமார், கிருஷ்ணகிரி.
மயக்கம் சோற்றைப் பிசைந்து ஊட்ட வரும் பிஞ்சுக் கை அழகைக் கண்டு வாய் திறக்க மறந்து மயங்கிக் கிடக்கின்றன பொம்மைகள்! - எம்.ஏ.கண்ணன், ராஜபாளையம்.
குழப்பம் ஏழையின் வீடு எதைப் பாதுகாக்கின்றன பூட்டுகள்? - பெ.பாண்டியன், காரைக்குடி.
ஆனந்தம் குழந்தைக்கு அம்மா சோறூட்டும்போதெல்லாம் குழந்தையின் அழகில் பசியாறுகிறது நிலா! - ஏ.மூர்த்தி, புல்லரம்பாக்கம்.
விருப்பம் சிரித்தால் தெரியாத அழுதால் புரியாத சேஷ்டைகள் செய்யாத முகமூடியை ஒருபோதும் விரும்புவதில்லை, முகம் பார்க்கும் கண்ணாடி... - தஞ்சை கமருதீன், தஞ்சாவூர்.
|