அஞ்சு பஞ்ச்-ரஜினி
 1.முன்பெல்லாம் வருஷம் ஒரு தடவையாவது இமயமலைக்கு போய்விடுவார். இப்போது எப்போதாவது நண்பர்களோடு போய் வருகிறார்.
2.வெளியே காட்டிக்கொள்ள மாட்டார்கள். நினைத்தால் ரஜினியும், கமலும் சந்தித்துக் கொள்வார்கள். அரசியல் தவிர்த்து எல்லாவற்றிற்கும் ஆலோசனை கேட்டுக் கொள்வதுண்டு.
3.பேரப்பிள்ளைகள் மீது கொள்ளைப் பிரியம். அவர்கள்தான் ரஜினியிடம் அதிக சுதந்திரம் எடுத்துக் கொள்வார்கள். மூன்று பேரன் களையும் பார்க்காமல் ஒரு நாள்கூட அவரால் இருக்க முடியாது.
4.இளையராஜாவிடம் தனிப்பட்ட பிரியம். ‘சாமி’ என்றுதான் கூப்பிடுவார். மனதில் குறையிருந்தால் கொஞ்சநேரம் அவரோடு பேசிக்கொண்டிருந்துவிட்டு வருவார்.
5.முன்பெல்லாம் அம்பாஸிடர் காரில்தான் பயணம். இப்போது சௌகரியமான காரில் போகிறார்.
நன்மதி
|