போலீஸ் சச்சின்!



- ரோனி

இன்றைய வைரல் உலகில் ஒரே ஒரு போட்டோ போதும் நீங்கள் ஃபேமஸாகி புகழைக் குவிக்க. மத்திய பிரதேசத்தின் கிரிக்கெட் வீரர் போட்டோவும் அப்படித்தான் நேஷனல் வைரலாகிவருகிறது. ஆனால், அதோடு அவர் சொன்ன சோஷியல் மெசேஜூம் செம ஹிட். சச்சின் அதுல்கர்தான் அந்த வைரல் மனிதர். ஜிம் பாடியில் கிரிக்கெட் பேட்டை கையில் வைத்திருக்கும் போட்டோக்கள் அகில உலக ஃபேமஸ். சச்சின் தொட்டது அனைத்தும் துலங்க, அனைத்திலும் கோல்ட் மெடல் ஹிஸ்டரி.

இப்போது தன் 22 வயதில் ஐபிஎஸ் அதிகாரியாகியும் ஆகிவிட்டார் என்பதுதான் அறியவேண்டிய நியூஸ். முதலிலேயே சச்சினின் கிளாமர் லுக்கில் சரண்டராகி புகழ்ந்தவர்கள் இன்னும் சாம்பிராணி போட, ‘‘ஒருவரின் தோற்றம் என்பதைவிட முக்கியமானது அவரின் செயல்பாடுகள்தான். தனிநபர் வழிபாட்டை கைவிட்டு ஒன்றிணைந்து நம் தேசத்தை வலுப்படுத்துவோம்!’’ என பதிவிட்டு ஆர்வக்கோளாறுகளை சைலண்ட் செய்தார். பார்த்தியா எங்க ஹீரோவை? மணிமணியாக பேசுறாரு என கமெண்டும் மாஸ் அப்பீல்!