கவிதைக்காரர்கள் வீதி
அழும் குழந்தையை அழுதுதான் சமாதானம் செய்ய வேண்டியுள்ளது - ஏ. மூர்த்தி, புல்லரம்பாக்கம்.
என் கால்களை கடிக்கும் எறும்புகளுக்கு எப்படித் தெரியும் நான் குழந்தையின் நிழலை மிதித்துக் கொண்டிருப்பது. - வஸந்த் பூபதி, வெள்ளாங்கோயில்.
பலன் சொல்ல காத்திருக்கும் ஜோதிடக்கிளிக்கு எவர் சொல்வாரோ ஜோதிடரின் மரணத்தை.. - சங்கீத சரவணன், மயிலாடுதுறை.
வலிக்காமல் அடிக்க அம்மாவின் பிரம்புக்கு மட்டுமே தெரியும்! - ப.செல்வகுமார், கட்டுமாவடி.
குழந்தைகள் பறிக்க கை நீட்டுகிறது செடி...! - தில்பாரதி, திருச்சி
|