கவிதைக்காரர்கள் வீதி



அழும்
குழந்தையை
அழுதுதான்
சமாதானம்
செய்ய
வேண்டியுள்ளது
- ஏ. மூர்த்தி, புல்லரம்பாக்கம்.

என் கால்களை
கடிக்கும் எறும்புகளுக்கு
எப்படித் தெரியும்
நான் குழந்தையின்
நிழலை மிதித்துக்
கொண்டிருப்பது.
- வஸந்த் பூபதி, வெள்ளாங்கோயில்.

பலன் சொல்ல
காத்திருக்கும்
ஜோதிடக்கிளிக்கு
எவர் சொல்வாரோ
ஜோதிடரின்
மரணத்தை..
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.

வலிக்காமல் அடிக்க
அம்மாவின்
பிரம்புக்கு மட்டுமே தெரியும்!
- ப.செல்வகுமார், கட்டுமாவடி.

குழந்தைகள்
பறிக்க
கை நீட்டுகிறது
செடி...!
- தில்பாரதி, திருச்சி