குங்குமம் டாக்கீஸ்



* அடுத்த ஆண்டு தீபாவளிக்கு ‘2.0’ ரிலீஸ். அதற்குள்ளாக ‘கபாலி 2’ படத்தை தொடங்கிவிட நினைத்திருக்கிறார் தனுஷ். இதை சூப்பர்ஸ்டார் தன் மகளுக்குக் கொடுக்கிற வாய்ப்பாகச் சொல்கிறார்கள்.

* ‘போகன்’ தவிர தமிழில் கைவசம் வேறு படங்கள் இல்லாததால் மும்பையிலேயே இருக்கிறார் ஹன்சிகா.

* ‘இருமுகன்’ படத்தைத் தொடர்ந்து விக்ரம் ‘சாமி 2’வில் நடிக்கப் ேபாகிறார். ‘கருடா’ படத்தை சற்று தள்ளி வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

* ஆந்திராவின் பிரபல தொழிலதிபரான நிம்மகடா பிரசாத்தின் மகள் திருமண வரவேற்பு ஐதராபாத்தில் நடந்தது. நெருங்கிய நண்பரான இவர் வீட்டு விசேஷத்துக்கு நாகார்ஜுனா குடும்பமே வந்தது. இதில் ரொம்ப ஸ்பெஷல், நாக சைதன்யாவுடன் சமந்தா ஜோடி போட்டு வந்து கலக்கியதுதான்!

* பாலிவுட்டில் எல்லோருக்கும் பிடித்த நடிகையாக இருப்பது எப்படி? இலக்கணம் சொல்கிறார் ஹுமா குரேஷி. ‘‘உடம்போ, மனசோ சரியில்லை என்றாலும் சிரித்துக்கொண்டே இருக்க வேண்டும். ஆனால் சத்தம் போட்டு சிரிக்கக்கூடாது. வெட்கப்படுகிற மாதிரி நடிக்கவாவது செய்ய வேண்டும். எல்லா விஷயங்கள் பற்றியும் கருத்து வைத்திருக்கவோ, சொல்லவோ கூடாது. தலைமுடிகூட காற்றில் கலையாதபடி கச்சிதமான மேக்கப்பில் எப்போதும் இருக்க வேண்டும். அதாவது, இப்போதுதான் சலவை செய்துவந்த துணி போல! இப்படி இருப்பவள்தான் பலரின் பார்வையில் நல்ல நடிகை” என்கிறார் ஹுமா.

* ‘சபாஷ் நாயுடு’ படத்தின் அடுத்த கட்டப் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது. நடிகர்களிடம் தேதி குறித்து பேசத் தொடங்கியிருக்கிறார் கமல்.

* கௌதம் மேனனின் ஹீரோயின் மஞ்சிமா மோகனும் கீர்த்தி சுரேஷும் குடும்ப நண்பர்களாம். மஞ்சிமாவின் அப்பா விபின்மோகன் மலையாளத்தில் ஒளிப்பதிவு செய்த படத்தில் கீர்த்தியின் அம்மா மேனகா நடித்திருக்கிறார்.

* தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆருடன் சமந்தா, நித்யா மேனன் நடித்த ‘ஜனதா கேரேஜ்’ ரிலீஸ் ஆகியிருக்கிறது. தமிழில் விஜய் நடித்த ‘ஜில்லா’ படத்தின் ரீமேக்கான இதிலும் மோகன்லால் மெயின் கேரக்டர் பண்ணியிருக்கிறார். இதனால் மலையாளத்திலும் டப் செய்திருக்கிறார்கள்.

* சுந்தர்.சி எடுக்கும் மெகா பட்ஜெட் படத்தில் பலருடன் பேசி இப்போது ஜெயம் ரவி ஒப்பந்தமாகி விட்டார். விஜய், சூர்யா, மகேஷ் பாபு ஆகியோர் அதிக நாட்கள் கால்ஷீட் தரத் தயங்கி ஒதுங்க, ஜெயம் ரவி மட்டும் ஓகே சொல்லிவிட்டார்.

* நா.முத்துக்குமார் எழுதியகவிதையை முன்வைத்து படமொன்றை இயக்கத் திட்டமிட்டு இருக்கிறார் வெற்றிமாறன். ‘வடசென்னை’ முடித்துவிட்டு உடனே இதைத் தொடங்குகிறார்.

* கார்த்தியின் ‘காஸ்மோரா’வில் நடித்திருக்கும் ஸ்ரீதிவ்யா, அடுத்து சூர்யாவுடன் நடிக்க விரும்புகிறார். ‘‘சில்லுனு ஒரு காதல் படத்தில் இருந்து சூர்யா சார் ஃபேன் ஆகிட்டேன். அவருடன் ஒரு படம் பண்ண ஆசை’’ என்கிறார் ஸ்ரீதிவ்யா.

* தனுஷின் ‘வட சென்னை’ படத்தின் படப்பிடிப்பு சென்னை பின்னி மில்லில் தொடங்கிவிட்டது. அமலாபால் ஹீரோயின். இதில் விஜய்சேதுபதி கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளார்.

* பரதன் இயக்கும் விஜய் படத்தோடு ‘அன்பானவன், அசராதவன், அடங்காதவன்’ படத்தை வெளியிட திட்டமிட்டு காய்களை நகர்த்துகிறார் சிம்பு. அதற்குள் கௌதம் மேனனோடு பஞ்சாயத்து முடிந்து அந்தப்படமும் தயாராகிவிடும் என்கிறார்கள்.

* ராதிகா சரத்குமாரின் மகள் ரேயான் ஹார்டி- கிரிக்கெட் வீரர் அபிமன்யு மிதுனின் திருமணம் மகாபலிபுரத்தில் கோலாகலமாக நடந்தது. கோலிவுட் தவிர டோலிவுட்டில் இருந்து சிரஞ்சீவி, டாக்டர் ராஜசேகர், ஜீவிதா என திரையுலகமே திரண்டு வந்து மணமக்களை வாழ்த்தியது விழாவின் ஹைலைட்.