அக்டோபர் மாத (1-15) ராசி பலன்கள்





மேஷம்: சொந்த முயற்சியாலும், மனத் துணிவுடனும் செயல்பட்டு வாழ்க்கையில் முன்னேறுவீர்கள். இந்தக் காலகட்டத்தில் காரியங்களில் அவசரமாக செயல்படுவீர்கள். எச்சரிக்கையுடன், நிதானமாக நடந்துகொள்ளுங்கள். பேச்சில் கோபம் தெரியாவிட்டாலும் அதை மறைத்துக்கொண்ட அழுத்தம் இருக்கும். இது சில மோசமான பின்விளைவுகளைத் தரக்கூடுமாதலால், மன அழுத்தத்திலிருந்து விடுபட முயற்சி செய்யுங்கள். இதற்காக தினமும் பிராணாயாமம், தியானம், யோகா என்று பயிற்சி மேற்கொள்வது நன்மை பயக்கும்.

சில சிக்கலான பிரச்னைகளில் சுமுகமான முடிவைக் காண முற்படு வீர்கள். அவ்வாறு முயலும்போது எதிர்தரப்பினரின் கருத்துக்கும் யோசனைகளுக்கும் உரிய மரியாதை கொடுக்க வேண்டியது அவசியம். பல்வேறு சிந்தனைகளால் குழம்புவதன் விளைவு இது. முக்கியமாக வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. கருத்தைச் சாலையிலேயே பதித்து கவனம் பிசகாமல் வாகனத்தை செலுத்துங்கள். தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். எதற்கும் அவசரப்படாதீர்கள்.

உங்களுக்கென்று இருப்பது உங்களைவிட்டுப் போகாது.  பணவரத்து எதிர்பார்த்த அளவு இல்லாவிட்டாலும் தேவை பூர்த்தியாகும். புதிய ஆர்டர்கள் பற்றி உடனடியாக முடிவெடுக்க முடியாமல் தடுமாற்றமான நிலை உண்டாகலாம். உத்யோகத்தில் இருப்பவர்கள் வேலையில் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் ஏதாவது பிரச்னை தலைதூக்கலாம். எல்லோரையும் அனுசரித்துச் செல்வது நன்மை தரும். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை உண்டாகலாம் கவனம் தேவை.

பிள்ளைகளிடம் அன்பாக பழகுவது நன்மை தரும். உறவினர் வகையில் மனவருத்தம் ஏற்படலாம். பெண்கள் சிக்கலான விஷயங்களை கூட சுமுகமாக முடித்து விடுவீர்கள். மனத் தடுமாற்றம் இல்லாமல் நிதானமாக செயல்படுவது நன்மை தரும். மாணவர்களுக்கு தங்கள் கல்விக்குத் தேவையான புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்குவது பற்றிய கவலை நீங்கும். படிப்பில் ஆர்வம் உண்டாகும். கலைத்துறையினருக்கு மனத்துணிவு அதிகரிக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி  திருப்திகரமாக இருக்கும். காரிய வெற்றிக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். அரசியலில் இருப்பவர்கள் இட மாற்றம், பதவி இறக்கம் ஆகியவற்றை சந்திக்க வேண்டியிருக்கும். இருப்பினும் நற்பெயர் கிடைக்கும்.

பரிகாரம்: அம்மனுக்கு செவ்வாய்க்கிழமைகளில் எலுமிச்சம் பழமூடியில் தீபம் ஏற்றி வணங்கி வர கஷ்டங்கள் தீரும். மனநிம்மதி உண்டாகும்.அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: செவ்வாய், வியாழன்; தேய்பிறை: செவ்வாய், புதன், வெள்ளி.சொல்ல வேண்டிய மந்திரம்: கந்த சஷ்டி கவசம் சொல்வது நன்மையைத் தரும்.

ரிஷபம்: இனிய சுபாவமும், மென்மையான பேச்சும் உடையவர்களே! இந்தக் காலகட்டத்தில் பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். ஆனால், அடுத்தவர்களுக்கு உதவி செய்யப்போய் வில்லங்கம் ஏற்படலாம். எச்சரிக்கையாக இருப்பது நல்லது. யாருடைய வேதனையான வாழ்க்கையைக் கேள்விப்பட்டோ, அதனால் அவர்கள் மீது இரக்கப்பட்டோ உதவ முன் வருவீர்கள். இது அருமையான குணம்தான் என்றாலும் பாத்திரம் அறிந்து பிச்சையிடு என்ற சொல்லுக்கேற்ப அவருடைய தராதரத்தை நன்றாக மனதில் இருத்தி அதற்குப் பிறகு அவருக்கு பண, உடல் உதவிகள் செய்வதிலோ அல்லது யோசனை சொல்வதிலோ இறங்குங்கள். மனதில் ஏதாவது குறை இருக்கும்.

எதிலும் திருப்தி இல்லாத ஏக்க மனோபாவம் உங்களைக் கொஞ்சம் உற்சாகம் இழக்கச் செய்யும். ஆனால், இதெல்லாம் நீங்களாக ஏற்படுத்திக்கொள்வதுதான் என்பதை உணர்ந்து கொண்டீர்களானால், எல்லாமே சரியாகிப் போகும். புதிய நபர்கள் மற்றும் எதிர்பாலினத்தவரோடு பேசும்போது கவனமாக நடந்துகொள்ளுங்கள். விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டி வரலாம். தொழில் வியாபாரம் செய்பவர்கள் பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காண்பிப்பார்கள். போட்டிகள் விலகும். எதிர்பார்த்த ஆர்டர்கள் கிடைக்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் நீண்ட நாட்களாக இருந்த இழுபறியான காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். புது உற்சாகத்துடன் பணியில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும்.

கணவன்-மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். குழந்தைகள் மூலம் மனநிம்மதி கிடைக்கும். உறவினர்கள், நண்பர்களிடம் இருந்த மனக்கசப்பு மாறும். பெண்கள் எதைப் பற்றியாவது நினைத்து கவலைப்படுவீர்கள். வாக்குறுதிகள் கொடுக்கும்போது கவனம் தேவை. மாணவர்கள் கல்வியில் வெற்றிபெற திட்டமிட்டுப் படிக்க முற்படுவீர்கள். சக மாணவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். கலைத்துறையினருக்கு கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஆர்டர்களுக்கான முயற்சிகள் சாதகமான பலனைத் தரும். வீண் அலைச்சலை சந்திக்க வேண்டியிருக்கும். அரசியலில் உள்ளவர்கள் கோபமாகப் பேசுவதை தவிர்ப்பது நல்லது. மேல்மட்டத்தில் உள்ளவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். 

பரிகாரம்: பெருமாள் கோயிலில் எழுந்தருளி
யிருக்கும் மஹாலக்ஷ்மியை வணங்க எல்லா
நன்மைகளும் உண்டாகும். குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: திங்கள், வியாழன், வெள்ளி;
தேய்பிறை: திங்கள், வெள்ளி.
சொல்ல வேண்டிய மந்திரம்: ஸ்ரீ மஹாலக்ஷ்மி அஷ்டகம் சொல்லவும்.

மிதுனம்: காலம் தாழ்த்தாமல் எதையும் உடனுக்குடன் செய்து முடிக்க வேண்டும் என்ற வேகம் கொண்டவர்களே!  இந்தக் காலகட்டத்தில் திடீர் கோபம் ஏற்படலாம். எல்லாவற்றிலும் நெருக்கடி நிலை காணப்படும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தள்ளிப் போடுவது நன்மை தரும். நினைத்தது எதுவும் ஈடேறமாட்டே னென்கிறதே என்ற ஆத்திரம் மனதுக்குள் சூழும். ஆனால், இந்தக் காலகட்டத்தில் கிரகங்களின் அனுக்ரகம் அப்படி என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். தாமதமானாலும், எதுவும் நிறைவாக முடியுமானால் அது நல்லதுதானே? பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படலாம். 

அதனால் கூடுமானவரை பயணத்தை ஒத்திப்போடுங்கள். அது அலுவலக ரீதியான, தொழில், வியாபாரம் சம்பந்தமான அல்லது குடும்பத்தாரோடு போகும் உல்லாச சுற்றுலா பயணமானாலும் எதுவானாலும், நீங்கள் எதிர்பார்க்கும் ஆதாயம் கிட்டாது என்பதே இப்போதைய உங்களுடைய  கிரகங்களின் நிலைப்பாடாக இருக்கிறது. தொழில் வியாபாரம் வழக்கம் போல் நடக்கும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்துப் பேசுவது நல்லது. லாபம் குறைவதுபோல் இருந்தாலும் பணவரத்து திருப்தி தரும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்பு வீணாகும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களிடம் கோபமாக பேசுவதைத் தவிர்த்து இதமாகப் பேசுவது நல்லது. கணவன், மனைவிக்கிடையே ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நன்மையைத் தரும்.

குழந்தைகள் எதிர்கால நலன் பற்றி சிந்திப்பீர்கள். உங்களது உடைமைகளை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது. பெண்களுக்கு நெருக்கடியான நிலைமை உண்டாகும். வீண் அலைச்சல் ஏற்படும். பணவரத்து திருப்தி தரும். மாணவர்களுக்கு பாடங்களை படிக்க வேண்டிய கட்டாயம் உண்டாகும். ஆசிரியர் மற்றும் சக மாணவர்களிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. கலைத்துறையினர் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது.

ராசிக்கு நான்கில் சுக்கிரன், ராகுவுடன் சஞ்சாரம் செய்வதால் சக கலைஞர்களிடம் அனுசரித்துப் போவது நன்மையைத் தரும். அரசியலில் உள்ளவர்கள் வீண்பேச்சைக் குறைப்பது நல்லது. எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் தாமதம் உண்டாகலாம்.பரிகாரம்: நரசிம்மருக்கு தேங்காய் தீபம் ஏற்றி வணங்க எதிர்பார்த்த காரிய அனுகூலம் கிடைக்கும்.

 உத்தியோகம் தொடர்பான பிரச்னை தீரும்.அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: புதன், வியாழன், வெள்ளி; தேய்பிறை: புதன், வெள்ளி.
சொல்ல வேண்டிய மந்திரம்: ‘ஓம் மஹாவிஷ்ணுவே நமஹ’ எனற மந்திரத்தை தினமும் 15 முறை சொல்லவும்.

கடகம்: அன்பும் பாசமும் கருணையும் ஒருங்கே அமையப்பெற்றவர்கள் நீங்கள். இந்தக் காலகட்டத்தில் உடல் அசதி ஏற்படலாம். மனதில் ஏதாவது கவலை  இருந்து கொண்டே இருக்கும். திட்டமிட்டு செயலாற்றுவதில் பின்னடைவு ஏற்படலாம். இதற்கு உங்களுடைய திட்டமிடலில் ஏதேனும் தவறு நேர்ந்ததால் இருக்கலாம். அல்லது அந்தத் திட்டம் நிறைவேற நீங்கள் யோசனை கேட்ட நபர்கள் உங்களைத் தவறான பாதைக்கு வழிகாட்டியிருக்கலாம்.

எதிர் பார்த்த வங்கியிலிருந்தோ அல்லது தனி நபரிடமிருந்தோ கடன் அல்லது உதவித் தொகை வராதிருக்கலாம். பக்தியில் நாட்டம் அதிகரிக்கும். அந்த பக்தியில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டீர்களானால் பல பிரச்னைகளை நீங்கள் அருகே வரவிடாதபடிச் செய்துவிடலாம். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் சில்லரைச் சண்டைகள் உண்டாகலாம். பயணங்களில் தடங்கல் ஏற்படலாம். கொடுத்த வாக்கை காப்பாற்றுவதில் உறுதியாக இருப்பீர்கள்.  அதற்காக நஷ்டப்படவும் தயாராக இருப்பீர்கள்.

 தொழில் வியாபாரம் தொடர்பான சிக்கல்கள் தீரும்.  பணவரத்து திருப்தி தரும். வாடிக்கையாளர்களுக்கு உத்தரவாதங்கள்  தரும்போது கவனமாக இருப்பது நல்லது.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைப்பளு அதிகரிப்பது போல் உணர்வார்கள். மேல் அதிகாரிகள் உங்கள் செயல்களில் குறை காணலாம். கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் சில்லரைச் சண்டைகள் உண்டாகலாம். கணவன் - மனைவி ஒருவருக்கொருவர் பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும்.

 பிள்ளைகளின் படிப்பில் அக்கறை காட்டுவது நல்லது. பெண்களுக்கு காரியங்களில் பின்னடைவு ஏற்படலாம். மற்றவர்களிடம்  சில்லறை சண்டைகள் ஏற்படாமல் இருக்க கவனமாக பேசிப் பழகுவது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் இருந்த மெத்தனப் போக்கு மாறும். புத்தகம் நோட்டுகளை இரவல் கொடுக்கும் போது கவனம் தேவை. கலைத்துறையினருக்கு வாகனங்களை ஓட்டிச் செல்லும் போது கவனம் தேவை. தங்கள் உடைமைகளை கவனமாக பாதுகாத்துக் கொள்வது அவசியம். தனிமையாக இருக்க நினைப்பீர்கள். அரசியல் மற்றும் பொது வாழ்வில் இருப்பவர்கள் மேலிடத்தை அனுசரித்து செல்வது நல்லது.  பழைய பாக்கிகளை  வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். எடுத்த வேலையை செய்து முடிப்பதற்குள் பல தடங்கல்கள் உண்டாகும்.
பரிகாரம்: அருகிலிருக்கும் அம்மனுக்கு இலுப்பை எண்ணெய் தீபம் ஏற்றி வணங்க போட்டிகள் விலகும். மனோ தைரியம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: ஞாயிறு,
திங்கள், வியாழன்; தேய்பிறை: ஞாயிறு, திங்கள்.
சொல்ல வேண்டிய மந்திரம்: ‘ஓம் ஸ்ரீமத்சிம்ஹ
வாகனாய நமஹ’ என்ற மந்திரத்தை தினமும்
11 முறை சொல்லவும்.

சிம்மம்: மற்றவர்களிடம் இருந்து மாறுபட்டு தனித்தன்மையுடன் செயலாற்றும் குணமுடையவர்கள் நீங்கள். இந்தக் காலகட்டத்தில் உடல்நிலை தேறும். செலவு கட்டுக்குள் இருக்கும். காரிய தடைகள் நீங்கும். தந்தையாரின்  நலனில் அக்கறை தேவை.  கொடுக்கல் வாங்கலில் கவனமாக செயல்படுவது நல்லது. அது சிறிய தொகையே ஆனாலும் அல்லது சிறு மதிப்பு கொண்டதே ஆனாலும் அந்த கொடுக்கல்-வாங்கல் செயலுக்கு யாராவது மனித சாட்சியத்தை வைத்துக்கொண்டு ஈடுபடுவது நல்லது.

 அல்லது அந்தப் பொருள் இழப்புக்கும் அடுத்து நட்பு அல்லது உறவு இழப்புக்கும் உங்களை நீங்கள் தயார்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கும்! தொழில் வியாபாரத்தில் மெத்தனப் போக்கு காணப்பட்டாலும் பணவரத்து சுமாராக இருக்கும். சரக்குகளை கவனமாக கையாள்வது நல்லது. பாதுகாப்பு மிகுந்த வகையில் உங்கள் கொள்முதல் பொருட்களை தேக்கி வையுங்கள். எதிர்பாராத வகையில் தீப்பிடிப்பதாலோ அல்லது ஏதேனும் கிளர்ச்சி, வன்முறை காரணமாகவோ கொள்முதல் பொருட்கள் சேதமடையலாம். எதற்கும் அந்தப் பொருட்களை உரிய முறையில் இன்ஷூர் செய்து விடுவது உத்தமம்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் குறையும். உத்தியோகம் தொடர்பான இடமாற்றம் உண்டாகலாம். இந்த இடமாற்றம் காரணமாகக் குடும்பத்தைப் பிரிவது அல்லது வேறு சில வசதிக் குறைகள் ஏற்படலாம். அதற்கெல்லாம் மனதைத் தளர விடாதீர்கள். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே இருந்த பூசல்கள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். உறவினர்களுக்காக விருப்பம் இல்லாத காரியத்தில் தலையிட வேண்டி இருக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் ஏற்படும்.

 பெண்களுக்குத் தடைபட்ட காரியங்கள் நடந்து முடியும். பணவரத்து குறையலாம். மாணவர்களுக்குக் கல்வியில் நாட்டம் உண்டாகும். போட்டிகள் நீங்கும். சக மாணவர்களுடன் இருந்த மனக்கசப்பு மாறும். கலைத்துறையினருக்கு எதிர்பாராத செலவுகள் உண்டாகும். காரியதாமதம் ஏற்படும். வீண்கவலை இருக்கும். ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் முன் நன்றாக ஆலோசனை நடத்தவும். அரசியலில் உள்ளவர்களுக்கு மற்றவர்களால் மனக்கஷ்டம் ஏற்படும். அடுத்தவர்கள் கடமைக்கு பொறுப்பேற்காமல் இருப்பது நல்லது. 

எந்த ஒரு காரியமும் மந்தமாக நடக்கும்.
பரிகாரம்:  நடராஜர் பெருமானை வணங்கி
வர எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும்.
குடும்பத்தில் அமைதி உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: ஞாயிறு,
செவ்வாய்; தேய்பிறை: ஞாயிறு, வியாழன்.
சொல்ல வேண்டிய மந்திரம்: ‘ஓம் ஸ்ரீருத்ராய நமஹ’ என்ற மந்திரத்தை தினமும் 12 முறை சொல்லவும்.

கன்னி: ஒருமுறை பார்த்தாலே அதை அப்படியே கிரகித்துக் கொள்ளும் திறமை பெற்றவர்கள் நீங்கள். இந்தக் காலகட்டத்தில் நெருக்கடியான பிரச்னைகள் நீங்கும்.  தேவையில்லாமல் பயந்துகொண்டிருந்த கடந்த கால பிரச்னை ஒன்று நீங்கள் எதிர்பார்த்தபடி எந்த மோசமான பின்விளைவுகளையும் தராமல், தானாக அணைந்து விடுவதைப் பார்க்க உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும். பணவரத்து அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். அது உங்கள் வருமான உயர்வாகவோ, ஏற்கெனவே கோரியிருந்த வங்கி, அரசு அல்லது தனியார் கடன் தொகையாகவோ வரக்கூடிய பணத்தால் நிறைவேறும்.

பயணங்களும் அவற்றால் நன்மைகளும் உண்டாகும். உடன் பயணிப்பவர்கள் நண்பர்களாக அறிமுகமாகி எதிர்காலத்தில் உங்களுக்கு சமயத்தில் உதவக்கூடுபவராகவும் மாறலாம். சொன்ன சொல்லை காப்பாற்ற பாடுபடுவீர்கள். மற்றவர்கள் மேல் இரக்கம் ஏற்படும். நீண்ட நாட்களாக  இருந்த பிரச்னைகள் தீரும். தொழில் வியாபாரம் முன்னேற்றமாக நடக்கும். லாபம் அதிகரிக்கும். புது ஆர்டர்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைப்பளு குறைவால் மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் ஏற்படும். குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்.

பிள்ளைகள் மூலம் பெருமை சேரும். உறவினர்கள் மத்தியில்  மதிப்பும், மரியாதையும் கூடும். பெண்கள் திட்டமிட்டபடி காரியங்களை செய்து முடித்து மன நிம்மதி அடைவீர்கள். பணவரத்து அதிகரிக்கும். மற்றவர்கள் மேல் இரக்கம் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண  திட்டமிட்டு படித்து வெற்றி பெறுவீர்கள். மனம் மகிழும் சம்பவங்கள் நிகழும். கலைத்துறையினருக்கு வெளிநாடு வாய்ப்புகள் வந்து சேரும். எதிர்பார்த்த தனவரவு கிட்டும். அரசியலில் உள்ளவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். பயணங்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். ஆனாலும் எதிலும் எச்சரிக்கையாக பேசுவது நல்லது.

பரிகாரம்:  மரிக்கொழுந்தை பெருமாளுக்கு
அர்ப்பணித்து அர்ச்சனை செய்து வணங்க
மனக்கஷ்டம் நீங்கும். எல்லா நன்மைகளும் உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: திங்கள், புதன், வெள்ளி; தேய்பிறை: திங்கள், புதன், வெள்ளி.சொல்ல வேண்டிய மந்திரம்: ‘ஓம் நமோ புருசோத்தமாய!’ என்ற மந்திரத்தை தினமும் 27 முறை சொல்லவும். ஏற்றி வணங்கி வருவதும் புத்தி சாதூர்யத்தை தரும். சிக்கலான பிரச்னைகளை எளிதாக தீர்ப்பீர்கள்.

துலாம்: காரியத்தை கச்சிதமாக முடிக்கும் திறமையும் சாதித்தே தீர வேண்டும் என்ற பிடிவாதமும் கொண்டவர்கள், நீங்கள். இந்த காலகட்டத்தில் தடைபட்ட காரியங்கள் தடைநீங்கி நன்றாக நடந்து முடியும். வாக்குவன்மையால் நன்மைகள்  ஏற்படும். தெய்வ சிந்தனை அதிகரிக்கும். பண பிரச்னை நீங்கும். நண்பர்கள் மூலம்  உதவிகள் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும். தொழில் வியாபாரம் எதிர்பார்த்த வளர்ச்சி பெறும். பழைய பாக்கிகள் வசூலாகும்.

நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த காரியம் ஒன்று நடக்கும். அது நடக்குமோ நடக்காதோ என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தது போக, குடும்பத்துப் பெரியவர்களின் ஆசி அல்லது உங்கள் நலனில் அக்கறை கொண்ட வேறு பெரியவர்களின் யோசனை, உதவி இவற்றாலும் நீங்கள் எதிர் பார்த்ததைவிட கூடுதல் ஆதாயத்துடன் நிறைவேறும். உத்யோகத்தில் இருப்பவர்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். மேல் அதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும். உங்களை மீறி, தகுதியில்லாதவர்களுக்கு அளிக்கப்பட்ட உயர்வுகள், சலுகைகளால் மனம் நொந்திருந்தீர்களே, இனி உங்களுக்கே அந்த மேன்மைகள் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை காணப்படும்.

கணவன், மனைவிக்கிடையே  விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை அதிகரிக்கும். பிள்ளைகள் எதிர்காலத்திற்காக சில பணிகளை மேற்கொள்வீர்கள். அவர்களுடைய மேல்படிப்பு, திருமணம் அல்லது வேலை சம்பந்தமான செலவுகளுக்காக இப்போதே சேமிக்கத் தொடங்குவீர்கள். பெண்களுக்கு கொடுக்கல் வாங்கலில் இருந்த சிக்கல்கள் தீரும். அதனால் உங்கள் பெயர் ரிப்பேராகியிருந்ததெல்லாம் இப்போது நிவர்த்தியாகிவிடும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

குடும்பத்திலும் சரி, வெளிப் பழக்கத்திலும் சரி, பணியிடத்திலும் சரி, உங்கள் மரியாதை அதிகரிக்கும். சிலர் சில பொது அமைப்புகளைத் தலைமை ஏற்று நடத்திச் செல்லும் அளவுக்கு செல்வாக்கும் பெற வாய்ப்பு இருக்கிறது. இழுபறியாக இருந்த காரியம் நன்கு நடந்து முடியும். மாணவர்களுக்குக் கல்வியில் திறமை வெளிப்படும். மற்றவர் பாராட்டும் கிடைக்கும். கலைத்துறையினருக்கு ராசியில் சனி இருப்பதால் கவனமாக பேசுவது நல்லது.  வீண்பழி உண்டாகலாம். வேலைகளில் எதிர்பாராத சிக்கலை சந்திக்க வேண்டி இருக்கலாம். பொறாமைகள் உங்களை அலைக் கழிக்கலாம். அரசியலில் உள்ளவர்கள் கூடுதல் பணிச் சுமையை ஏற்க வேண்டி இருக்கும்.

பரிகாரம்:  பைரவருக்கு மிளகு தீபம் ஏற்றி வணங்கி வர எல்லா நலனும் உண்டாகும். எதிர்ப்புகள் நீங்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: திங்கள்,
செவ்வாய், வெள்ளி; தேய்பிறை: செவ்வாய், வெள்ளி.
சொல்ல வேண்டிய மந்திரம்: ‘ஓம் பைரவாய நமஹ’ என்ற மந்திரத்தை தினமும் 11 முறை சொல்லவும்.


தனுசு: யாருடைய அதிகாரத்துக்கும் கட்டுப்படாமல் தனித்தன்மையுடன் விளங்குவீர்கள். இந்த காலகட்டத்தில் எதிலும் சாதகமான பலன் கிடைக்கும். தடைபட்ட  பணம் வந்து சேரும். பயணங்கள் உண்டாகும். அதனால் நன்மையும் ஏற்படும். உங்களது செயல்கள் மற்றவர்களை கவரும் விதத்தில் இருக்கும். குடும்ப விழாக்கள், பொது நிகழ்ச்சிகள் எதிலாவது உங்கள் திறமையை நீங்கள், நீங்களே அறியாமல் நிரூபிப்பீர்கள், அதை பிறர் அனைவரும் கொண்டாடுவார்கள். ஆனால், அதேசமயம் உங்கள் தலையில் கனத்தை ஏற்றிக்கொள்ளாதீர்கள். அது உங்களுடைய எத்தகைய செல்வாக்கையும் கீழே இழுத்து உங்களை நிலைகுலைய வைத்து விடும்.

ஆகவே எந்தப் புகழ் உச்சிக்குச் சென்றாலும் நிலை தடுமாறாமல் உறுதியாக நில்லுங்கள். அதேசமயம் மனதில்  ஏதாவது கவலை இருந்து கொண்டிருக்கும். இது கடந்தகால சில கசப்பான சம்பவங்களைப் பற்றிய உங்களுடைய நினைவு மிச்சம்தான். அந்தச் சம்பவங்கள் யாரால், எப்படி நிகழ்ந்திருந்தாலும், அதற்கு நீங்களே காரணகர்த் தாவாக இருந்திருந்தாலும், இப்போது அதை யெல்லாம் ஒரு கெட்டக் கனவாக நினைத்து மறந்துவிடுவதுதான் நல்லது. மற்றவர்கள் மூலம் உதவிகள்  கிடைக்கப் பெறுவீர்கள். தொழில் வியாபாரம் சுறுசுறுப்படையும். வியாபார விரிவாக்கம் செய்வது பற்றி ஆலோசனை மேற்கொள்வீர்கள். அரசாங்கம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் காரிய அனுகூலம் கிடைக்கப் பெறுவார்கள். புத்தி சாதூர்யத்தால் காரிய நன்மை பெறுவார்கள். குடும்பத்தில் மதிப்பும், மரியாதையும் கூடும். கணவன் மனைவிக்கிடையில் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் உங்களது சொல்படி நடப்பது மனதுக்கு இதம் அளிக்கும். செயல் திறன் அதிகரிக்கும். பெண்கள் தம் செயல்களுக்கு மற்றவர்களிடம் இருந்து பாராட்டு கிடைக்கும். பயணங்கள் மூலம் சாதகமான பலன்கள் உண்டாகும்.

மாணவர்களுக்கு: கல்வியில் திறமை வெளிப்படும். ஆசிரியர்கள் பாராட்டுவார்கள். சக மாணவர் மத்தியில் மதிப்பு கூடும். கலைத்துறையினருக்கு வெளிநாட்டு வாய்ப்புகள் கைகூடி வரும். அதிகமான ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டியது வரும். உடன் பணிபுரியும் பணியாளர்களால் நன்மை ஏற்படும். அரசியல்துறையினர் எதிர்பார்த்த பதவி களை அடைவீர்கள். மேலிடத்தின் மூலம் உங்கள் காரியங்கள் அனைத்தும் பரிசீலனை செய்யப்படும்.
பரிகாரம்: மஞ்சள் வஸ்திரத்தை குருவுக்கு சாத்தி நெய் தீபம் ஏற்றி வணங்கி 11 முறை வலம் வரவும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: திங்கள்,
செவ்வாய், வியாழன்; தேய்பிறை: ஞாயிறு,
செவ்வாய், வியாழன்.
சொல்ல வேண்டிய மந்திரம்: ‘ஓம் ஸ்ரீசத்குருவே நம:’ என்ற மந்திரத்தை தினமும் 9 முறை சொல்லவும்.

விருச்சிகம்: நியாயத்தின் பக்கம் நின்று அநியாயத்தை எதிர்க்கும் குணமுடையவர் நீங்கள். இந்த காலகட்டத்தில் எதிலும் கவனமாக செயல்படுவதும் எச்சரிக்கையாக இருப்பதும் நல்லது.  எதையும்  நிர்ணயிக்கும் திறன் குறையும். அதனால் யார் மீதும் அபிரிமிதமான நம்பிக்கையை வைக்க வேண்டாம். அது நெருங்கிய நண்பராகவோ, உறவினராகவோ இருந்தாலும், அவர்கள் சொல்லும் யோசனைகளை அப் போதைக்குக் கேட்டுக்கொள்வதுபோலக் கேட்டுக்கொண்டு, பிறகு நீங்கள் உங்களுக்குள் அலசி ஆராய்ந்து அவற்றில் சிறந்ததாகத் தோன்றுவதை மட்டும் எடுத்துக்கொண்டு செயல்படுத்துங்கள்.

அல்லது அந்த யோசனைகளை அப்படியே முற்றிலுமாகப் புறக்கணித்துவிட்டு உங்களுடைய சொந்த யோசனையை நிறைவேறா முயற்சி செய்யுங்கள். பணவரத்து தாமதப்படும். கையிருப்பு கரையும். சில செலவுகள் தவிர்க்க முடியாததாக அமையும். அவை அநேகமாக சுபவிசேஷங்களுக்கான செலவாகவே இருக்கும், கவலைப்படாதீர்கள். மற்றவர்களுக்காக உதவி செய்யும்போது  வீண்பழி ஏற்க நேரலாம். கவனமாக இருப்பது நல்லது. உடல் சோர்வும் ஏற்படலாம். தொழில் வியாபாரம் தொடர்பாக அலைச்சல் இருக்கும். பழைய பாக்கிகள் வசூலிப்பதில் இழுபறியான நிலை காணப்படும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க நேரிடும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதற்குள் பல தடைகளை சந்திக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவதன் மூலம் நன்மைகள் உண்டாகும். பிள்ளைகளிடம் அன்புடன்  நடந்து கொள்வது நல்ல பலன் தரும். பெண்களுக்கு எதிலும் நல்லது கெட்டதை  நிர்ணயிக்கும் திறமை குறையும்.  அடுத்தவர் பிரச்னையைத் தீர்க்க உதவி செய்வதை தவிர்ப்பது நல்லது.

 மாணவர்கள் மிகவும் கவனமாக பாடங்களை படிப்பது நல்லது. அடுத்தவரை நம்பி காரியங்களை செய்வதை தவிர்ப்பது நன்மை தரும். கலைத்துறையினருக்கு வாழ்க்கையில்  முன்னேற்றம் உண்டாகும். வராது என்று நினைத்த பொருள் வந்து சேரலாம். வீண்வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. அரசியலில் உள்ளவர்களுக்கு மந்த நிலை மாறி வேகம் பிடிக்கும். தனலாபம் அதிகரிக்கும். சிறப்பான  பலன்  கிடைக்க பெறுவீர்கள். புதிய பொறுப்புகள் சேரும்.
பரிகாரம்: முருகனுக்கு பாலபிஷேகம் செய்து வர நோய் நீங்கும். மனக்குழப்பம் தீரும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: செவ்வாய், வியாழன்; தேய்பிறை: செவ்வாய், வியாழன்.
சொல்ல வேண்டிய மந்திரம்: ‘ஓம் கார்த்திகேயாய நமஹ’ என்ற மந்திரத்தை தினமும் 15 முறை சொல்லவும்.

மகரம்: பார்த்தால் கடுமையானவர்போல் தோற்றமளிக்கும் மகர ராசியினரே, நீங்கள் பழகினால் இனிமையானவர். இந்த காலகட்டத்தில் காரிய தடைகள் நீங்கும். உடல் ஆரோக்கியம் பெறும். வீண் அலைச்சல் ஏற்படலாம். சில நேரங்களில் நிர்ப்பந்தத்தின் பேரில் விருப்பமில்லாத வேலை செய்ய நேரலாம். முக்கியமாக குடும்பத்தில் அன்புக்குரியவரின் விருப்பத்தை நிறைவேற்ற நீங்களே விரும்பாத சில சமரசங்களுக்கு உங்களை உட்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கும்.

ஆனால், சூழ்நிலைக்கு ஏற்ப அந்தச் செயல்களில் ஈடுபாட்டைக் காட்டுங்கள். தொழில், வியாபாரத்தில் பார்ட்னர் விவகாரங்களில் கவனம் தேவை. அவர்களை முழுவதுமாக நம்பிவிடாமலும், முற்றிலும் நம்பாமல் இருக்காமலும் நடந்துகொள்ள வேண்டும். அவர்களுடைய சில தகுதிகள் உங்கள் வியாபாரத்தில் ஓரளவு மூலதன மாகவும் இருக்கலாம். ஆகையால் அவர்களை அனாவசியமாக சந்தேகப்பட்டு அந்த ஆதாயத்தை இழந்துவிடாதீர்கள். ஆர்டர்கள் கிடைப்பது திட்டமிட்டபடி இல்லாமல் தாமதமாகும். வேலையாட்களிடம் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். நினைத்தபடி பணிகளை செய்ய முடியாத நிலை உருவாகும்.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் திடீர் மனஸ்தாபங்கள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே கருத்துவேற்றுமை ஏற்படும். பிள்ளைகளிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. எதிலும் எச்சரிக்கையாக செயல்படுவது நன்மை தரும். பெண்கள் எதிலும் எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருப்பது நல்லது. மனத் தடுமாற்றம் உண்டாகலாம். செலவு கூடும். மாணவர்கள் அதிக நேரம் எடுத்துக்கொண்டு பாடங்களை ஒருமுறைக்கு இருமுறை படித்து கவனத்தில் வைத்துக் கொள்வது நல்லது.

 கலைத்துறையினருக்கு தொழில் தொடர்பான நெருக்கடிகளை சந்திக்க வேண்டி வரும். புது ஒப்பந்தங்கள் தொடர்பான காரியங்கள் சாதகமாக முடியும். புதிய பொறுப்புகள் சுமையாக வரும். நிதானம் தேவை. அரசியல்துறையினருக்கு அடுத்தவர்களிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். நீண்ட தூர தகவல்கள் நல்லவையாக இருக்கும். எதிலும் நிதானம் தேவை. பரிகாரம்: சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாத்தி வணங்கி வர துன்பமும், தொல்லையும்  நீங்கும். மனோதைரியம் அதிகரிக்கும். அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: திங்கள், புதன், வெள்ளி; தேய்பிறை: திங்கள், வெள்ளி.சொல்ல வேண்டிய மந்திரம்: ‘ஓம் பூரண பொற்கலையுடன் கூடிய அய்யனார் திருவடிகள் போற்றி போற்றி’ என்ற மந்திரத்தை தினமும் 16 முறை கூறவும்.

கும்பம்: தன்னலம் கருதாமல் பிறர் நலத்தை மனதில் கொண்டு செயல்படுவீர்கள். இந்தக் காலகட்டத்தில் எல்லா வகையிலும் லாபம் கிடைக்கும். வாக்கு வன்மையால் எதுவும் சாதகமாக நடக்கும். நல்ல சிந்தனை உண்டாகும். அறிவுத்திறன் அதிகரிக்கும். சில நேரங்களில் மற்றவர்கள் பேசுவதை தவறாக புரிந்து கொள்ள நேரிடும். அதற்கு உங்களுடைய சந்தேகக் கண்ணோட்டமே காரணமாக இருக்கலாம். அப்படி சந்தேகத்துக்குரியவர் பழைய சம்பவம் எதிலாவது உங்கள் மனதைப் புண்படுத்தியவராக இருப்பார்.

 அல்லது உங்களுக்கு ஏதாவது நஷ்டத்தைத் தந்தவராக இருப்பார். ஆனால், இப்போது அதை யெல்லாம் மனதில் வைத்துக்கொண்டு அவரை சந்தேகக் கண்ணோட்டத்தோடு பார்க்காதீர்கள். ஏனென்றால் அவர் தன்னுடைய அந்த செய்கைக்கு மனசளவில் வருந்துபவராகவும், ஏற்கெனவே உங்களிடம் மானசீகமாக மன்னிப்பு கேட்டுக் கொண்டவராகவும் இருப்பார்.  மனோதைரியம் அதிகரிக்கும். தொழில், வியாபாரம் சிறப்பாக நடக்கும். போட்டிகள் குறையும். புதிய வாடிக்கையாளர்கள்  கிடைப்பார்கள்.

பல்வேறு விளம்பர உத்திகள் மூலம் புதுப்புது வாடிக்கையாளர்களை நீங்கள் பெறுவீர்கள். தொழில் ரீதியான காரியங்களில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேன்மை அடைவார்கள். மேல் அதிகாரிகள் கூறியபடி காரியங்களை செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் குறையும். உறவினர்கள் மூலம் நன்மை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தங்கள் நீங்கும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்க பெறுவீர்கள். மனதில் மகிழ்ச்சி உண்டாகும். பெண்களுக்கு நல்ல சிந்தனை ஏற்படும். மனோபலம் அதிகரிக்கும். சாதூரியமான பேச்சால் எளிதாக எதையும் செய்து முடிப்பீர்கள். மாணவர்களுக்கு புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.

அவர்களுடன் சேர்ந்து கல்வியில் வெற்றி பெற நன்கு படிப்பீர்கள். கலைத்துறையினர் பயணங்கள் செல்ல நேரலாம். சக கலைஞர்களிடம் வீண்வாக்கு வாதங் களை தவிர்ப்பது நல்லது. காரிய தாமதம் ஏற்பட்டாலும் சாதகமான பலன் கிடைக்கும். அரசியல் துறையினருக்கு எதிர்பார்த்த காரியங்கள் தடை களின்றி முடியும். எதிர்ப்புகள் மறையும். பகை பாராட்டியவர்கள் பகையை மறந்து நட்புக் கரம் நீட்டுவார்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்னைகள் குறையும். பரிகாரம்: சனி பகவானுக்கு நல்லெண்ணெய் மற்றும் இலுப்பை எண்ணெய் கலந்து தீபம் ஏற்றி வணங்க உடல் ஆரோக்கியம் பெறும். வேலைப் பளு குறையும். பணப் பற்றாக்குறை குறையும்.அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: திங்கள், வியாழன், வெள்ளி; தேய்பிறை: திங்கள், வெள்ளி.சொல்ல வேண்டிய மந்திரம்: ‘ஓம் கைலாஸவாஸினே நமஹ’ என்ற மந்திரத்தை தினமும் 21 முறை சொல்லி வரவும்.

மீனம்: எதிர்காலத்தை மனதில் கொண்டு செயல்பட்டு வருவீர்கள். காலத்தை வீணாக்க மாட்டீர்கள். இந்தக் காலகட்டத்தில் பணத்தேவை உண்டாகும். அடுத்தவர்களுக்கு உதவி செய்யப்போய் அவப்பெயர் உண்டாகலாம். குறிப்பாக அறிமுகமில்லாத பெண்களுக்கு நீங்களாகப் போய் எந்த உதவியையும் செய்யாதீர்கள். அறிமுகமான பெண்ணாயிருந்தாலும், சற்று விலகியிருந்தே அவர்களுடைய தேவை என்ன என்பதைக் கேட்டுக்கொள்ளுங்கள்.

ஏனென்றால் நீங்களும் சரி, அந்தப் பெண்மணியும் சரி, ஒருவருக்கொருவர் எந்த மனக்கோணலும் இல்லாமல்தான் பழகுகிறீர்கள் என்றாலும், தொலைவிலிருந்து பார்ப்பவர்கள் அதை அவர்களுடைய கற்பனைக்கு ஏற்றவாறு ஊதிப் பெரிதாக்குவார்கள். ஆகவே எச்சரிக்கையாக இருங்கள். பயணங்கள் மூலம் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும்.  திடீர் மனக் குழப்பம் ஏற்படும். முக்கிய முடிவு எடுப்பதில் தடுமாற்றம் உண்டாகும். தொழில், வியாபாரம் பற்றிய கவலை உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலிப்பதில் வேகம் காட்டுவீர்கள். ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலான பணிகளை கவனிக்க வேண்டி இருக்கும். வேலை மாறுதல் பற்றிய எண்ணம் உண்டாகும்.

குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. நெருக்கடியான  நேரத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் ஏற்படலாம். பிள்ளைகள் விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை. பெண்களுக்கு பணத்தேவை அதிகரிக்கும். எதிலும் உடனடியாக முடிவு எடுக்க முடியாமல் தடுமாற்றம் உண்டாகும்.

வேலைப் பளு அதிகரிக்கும். மாணவர்களுக்கு பாடங்கள் படிப்பதில் மெத்தனம் காணப் படும். கல்வியில் வேகம் காட்டுவது வெற்றிக்கு நல்லது. கலைத்துறையினருக்கு மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். சக கலைஞர்களிடையே சுமுக உறவு இருக்க விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. வாழ்வில் முன்னேற அக்கறை காட்டுவீர்கள். அரசியலில் உள்ளவர்களுக்கு மனத்துணிவு அதிகரிக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி  திருப்திகரமாக இருக்கும். காரிய வெற்றிக்கு தேவையான உதவிகள் கிடைக்கும்.

பரிகாரம்: தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றி வணங்க கடன் சுமை குறையும். தொழில்
முன்னேற்றம் உண்டாகும்.  அதிர்ஷ்ட கிழமைகள்: வளர்பிறை: செவ்வாய், புதன், வியாழன்; தேய்பிறை: செவ்வாய், புதன், வியாழன். சொல்ல வேண்டிய மந்திரம்: ‘ஓம் ஸ்ரீகுருவே நமஹ’ என்ற மந்திரத்தை தினமும் 9 முறை கூறவும்.