ஜூன் மாத ராசி பலன்கள்




நிறைந்த நன்மைகள் கிட்டும் மாதம் இது. கடந்த கால இழப்புகளை ஈடு செய்ய ஆரம்பித்து விடலாம். மாணவர்களுக்கு கேட்ட இடத்திலும் கேட்ட பிரிவுகள் கிடைப்பதிலும் மிகுந்த சிரமங்கள் ஏற்படும்.  பெண்களுக்கு வயிற்றுக் கோளாறுகள் நீங்கும். விஷக்கடிகளால் தோல் பாதிப்பு ஏற்படும். பணத்தேவைகள் நன்கு பூர்த்தியாகும். உத்யோகஸ்தர்களுக்கு மேன்மை கிடைக்கும். 7.6.2012க்குள் திடீர் இடமாறுதல் ஏற்படும். அலுவலர் சிலர் வேலை இடங்களில் வல்லடி வழக்குகளை சந்திக்க நேரும். அரசுக்கு அபராதம் செலுத்த வேண்டிவரும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு கடல் தாண்டும் யோகம் உண்டு. கழுத்துப் பிடரியில் சிலருக்கு வலி கடுமையாகலாம். பெருமாளுக்கு வேண்டுதல் ஏதும் தடைபட்டிருந்தால் உடனே அதனை நிறைவேற்றி விடுங்கள்.

தொழில் முடக்கம் நீங்கும் நேரம். வங்கிக் கடன் பெற்று தொழில் விரிவாக்கம் செய்வீர்கள். பெரிய அளவிலான தொழில் அமையப்பெற இப்பொழுது ஆயத்தங்கள் செய்யலாம். இதற்கு பங்காளி வர்க்கத்தினரின் ஆதரவும் கிடைக்கும். வீடு, நிலம் வாங்க மேற்கொள்ளும் முயற்சிகள் பலிதமாகும். வியாபாரிகள் இதுவரை செய்துவந்த காரியங்களிலேயே சிறந்த லாபம் கிடைக்கும். பங்கு மார்க்கெட் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். மருந்து சம்பந்தப்பட்ட பொருட்களும் உபகரணங்களும் நல்ல லாபத்தை ஈட்டும்.  22.6.2012க்குப் பிறகு சில நிலங்கள் அரசுடைமை ஆக்கப்பெறும். முன்னதாகவே தகுந்த விசாரணைகளை செய்து கொள்ளுங்கள்.

அரசியல்வாதிகளுக்கு 20.6.2012 வரை நண்பர்களால் வில்லங்கங்கள் ஏற்படும். 15ம் தேதிவரை அரசு அதிகாரிகளால் எதிர்ப்பும் அதனால் பதவிக்கு ஆபத்தும் ஏற்படக்கூடும். அரசு விஷயங்களில் நன்மை ஏற்படும். 20.6.2012க்குப் பிறகு புகழ் கீர்த்தி செல்வாக்கு உயர்வதை உணர்வீர்கள். 16ம் தேதிக்குப் பிறகு காது வலி சரியாகும். 22.6.2012க்குப் பிறகு வெளியிடங்களில் செல்லும் பொழுது எதேச்சையாக கலகம் ஏற்பட வாய்ப்புள்ளது.

எச்சரிக்கை: 15.6.2012 முதல் 21.6.2012 வரை ஆயுதங்களை பயன்படுத்த நேரலாம். 3, 4, 5, 6, 12 ஆகிய தேதிகளில் பிரயாணத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவும்.
பரிகாரம்: சப்த மாதர்கள் வழிபாடு, சத்ய நாராயண பூஜை செய்தல் ஆகியவை இந்த மாதம் சிறப்பைத் தரும்.


அரசுவழி நடவடிக்கைகளும் அதன் மூலம் உயர் கல்விச் சேர்க்கையும் கை கொடுக்கும். பள்ளித் தொடக்கத்தில் மாணவர்களுக்கு ஜுரம், மன ஆயாசம் காணும். மனோதிடம் அதிகரிக்கச் செய்யுங்கள். பெற்றோர் பொறுமையுடன் அணுகுங்கள். பெண்களுக்கு இடமாற்றம் பற்றிய கவலை வாட்டும். சற்றே கௌரவக் குறைவுகள் ஏற்படலாம். கணவன் - மனைவிக்குள் சிறுசிறு பிரச்னைகள் தோன்றி மறையும். வீடுமாற்றம் தவிர்க்க இயலாதது. விருந்தினர் விரோதங்களும் அண்டை அயலார் பகையும் மனதை வாட்டமடையச் செய்யும். திருமண விஷயங்கள் பலிதமாகும். திடீரென்று தடைபட்ட திருமண ஏற்பாடுகள் 8, 6, 12க்கு பிறகு சிறப்பாக நடைபெறும்.

அலுவலகப் பெண்களின் பழக்க வழக்கங்களில் எச்சரிக்கை உணர்வுடன் இருக்கவும். நீங்கள் சாதாரணமாக பேசியது உங்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் அளவிற்கு கொண்டு செல்லக் கூடும்; எச்சரிக்கை. உடல்நிலையும் சற்று வாட்டம் காணும். 22.6.2012 பிறகு இளம் பெண்கள், கர்ப்பவதிகள் சற்று எச்சரிக்கையுடன் செயல்படுங்கள். படிகளில் கவனமாக கால் பதிக்கவும். அனைத்து தரப்பு அலுவலர்கள் தங்கள் செயல்களுக்குரிய பலனை எதிர்பார்க்க வேண்டாம். விளைவுகள் எதிர்பாராது முடியும். அரசு வழி எதிர்ப்புகள் தோன்றும். அதிகாரிகள் உதவி அரிதாகும். குறிப்பாக 22.06.2012க்குப் பிறகு மிகுந்த கவனம் தேவை. இயந்திரங்கள் பழுது ஏற்படும். தகுந்த முன்னேற்பாடுகள் செய்து கொள்ளவும்.

கூட்டு வியாபாரத்தில் ஏற்பட்டு வந்த நஷ்டம் குறையும். தொழில் முறை பயணங்களை இந்த மாதம் தவிர்க்கவும். 15.6.2012க்குப் பிறகு சொற்களில் கடும் வார்த்தைப் பிரயோகம் ஏற்படும். 20.6.2012க்குப் பிறகு வலது கண்ணில் பாதிப்பு ஏற்படும். பூர்வீகச் சொத்துக்களின் பரிவர்த்தனையில் ஈடுபட்டதால் வில்லங்கங்கள் தோன்றும். பெண்களால் கலகம் ஏற்படும். தலைமையை வியாழக்கிழமைகளில் மட்டும் சந்தியுங்கள். விஷக்கடி மற்றும் கடும் வயிற்று வலி தோன்றும். வெளி உணவுகளை தவிர்க்கவும்.

எச்சரிக்கை: 12, 13, 14 மற்றும் 30.06.2012 தேதிகளில் தனிவழி பிரயாணம் முற்றும் தவிர்க்கவும்.
பரிகாரம்: பெருமாள் கோயிலில் வாழைத் தண்டு திரிகொண்டு தீபமேற்றுதல், முருகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்தல், பார்த்தல் ஆகியவை நன்மை தரும்.


நல்ல மனோதிடத்தோடும் லட்சிய மனப்பான்மையோடும் இயங்குவீர்கள். கொஞ்சம் சிரமப்பட்டுத்தான் படிப்பைத் தொடர வேண்டியிருக்கும். 21.6.2012க்கு பிறகுதான் எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் இடம் கிடைக்கும். 22.6.2012க்கு பிறகு பெற்றோர் குழந்தைகளை கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள் இந்த நிலை 28.7.2012 வரை நீடிக்கிறது. மிகுந்த கவனம் தேவை. அலுவலகப் பெண்களுக்கு வேலை அலைச்சல்கள் தேக வலியைத் தரும். வீட்டில் எளிதில் தீப்பற்றும் பொருட்களை சற்று தூரவே வையுங்கள். 

வெளியிடங்களில் ஏமாற்றுக்காரர்கள் வலையில் சிக்கும் அபாயம் ஏற்படும். 15.6.2012 வரை பணப் பொறுப்புகள் உள்ள வேலைகளில் உள்ளவர்கள் எச்சரிக்கையாக செயல்படுங்கள். திருடு போகும் வாய்ப்புகள் அதிகம். இது அதிகாரக் குறைவுக்கு காரணமாகலாம். இடமாறுதல் வேண்டுபவர்கள் 22.6.2012க்கு பிறகு முயற்சிக்கவும். வேலை தேடும் இளைஞர்களுக்கு 8.6.2012க்குள் கற்றதற்கேற்ற வேலை கிடைக்கும். வெளிநாடுகளில் உள்ளவர்களுக்கு அந்நிய மனிதர்களால் தொல்லையும் வேலையின்றி தவிக்கும் நிலையும் ஏற்படும். 22.6.2012க்கு பிறகு மிகுந்த உத்யோக சிக்கல்கள் ஏற்படும். கடுமையான கால்வலி தொடரும். தொழிற்சாலைகளில் இயந்திர செலவுகளால் தொழில் முடக்கம் ஏற்படும். நண்பர்கள் ஆதரவு கிடைக்கும். 15.6.2012க்கு பிறகு கடன் பெறும் முயற்சிகளில் வெற்றியும் அரசு வழி ஆதரவும் கிடைக்கும். இந்த மாதம் விலை உயர்ந்த வஸ்துக்களை வெளியே எடுத்துச் செல்ல வேண்டாம்.

அரசியல்வாதிகளுக்கு தொண்டர்களால் இழப்பு ஏற்படும். நினைத்ததை சாதிக்க பாடுபட வேண்டியிருக்கும். வீடு, மனை சம்பந்தமாக பஞ்சாயத்துகளில் ஈடுபட வேண்டாம். தங்களுக்குள்ள திருமண வயதை எட்டிய பெண் குழந்தைகளால் விரயச் செலவுகள் ஏற்படும். தங்கள் பதவியின் ஆளுகைக்கு உட்பட்ட இடங்களில் நிறைய மாற்றங்கள் வரும். திட்டமிட்டு இதன் மூலம் புகழை உயர்த்திக் கொள்ளலாம். வழக்கில் வெற்றி கிட்டும். வெளியூர் கூட்டங்களில் பங்கேற்க வேண்டாம். பிரயாணங்களில் முழு எச்சரிக்கை தேவை.

எச்சரிக்கை: 22.06.2012க்கு பிறகு இரவு நேரப் பிரயாணங்களை முடிந்தவரை தள்ளிப்போட முடியுமா என்று பாருங்கள்.
பரிகாரம்: அங்காள பரமேஸ்வரி தரிசனம், தெப்பக்குளம் மாரியம்மன் தரிசனம் நன்மை தரும்.


அமைதியுடன் சிந்தித்து நடந்தால் படிப்பில் பல வெற்றிகளை குவிக்கலாம். படிப்பிற்கான செலவுகள் நினைத்ததை விட அதிகமாக இருக்கும். மூத்த சகோதரரின் உதவி சமயத்தில் கை கொடுக்கும்.
பெண்கள் ஒரு விரிவான மருத்துவ டெஸ்ட் எடுத்துக் கொள்ள நேரும். அரசு வங்கிகளில் டெபாசிட் செய்யவும் அசையா சொத்துக்கள் வாங்கவும் இது நல்ல நேரம். ஷேர் நல்ல லாபம் தரும். நீண்ட நாள் குழந்தை இல்லாதவர்களுக்கு இப்போது துர்க்கை அருளால் குழந்தை அமையும். அலுவலர்களுக்கு சற்று அதர்ம சிந்தனை மேலோங்கும். அதனால் தொல்லைகள் அனுபவிக்க நேரும். நிலுவையில் உள்ள அலுவலக வழக்குகள் தோல்வியை தரும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு வெளிநாடு செல்ல வாய்ப்புகள் கிட்டும். தொழிலதிபர்களுக்கு வசதிகளைப் பெருக்க தனிநபர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். பெரிய தொழிற்சாலைகள் தொடங்குவது, உற்பத்தி அதிகரிப்பது ஆகியன நடைபெறும். தங்கள் இல்லத்தில் நடைபெறும் திருமணத்திற்கு நிறைய செலவுகள் செய்வீர்கள். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வாய்ப்பும் லாபமும் கிடைக்கும். வியாபாரிகள் நினைத்ததை சாதிக்கும் நேரம் இது. கைவிட்டுப் போன ஏஜென்சிகளுக்கான உரிமம் இப்போது கிடைக்கும். ரியல் எஸ்டேட், டிரான்ஸ்போர்ட் தொழில், சுற்றுலா மையம், கம்ப்யூட்டர், எலக்ட்ரானிக்ஸ் ஆகிய தொழில்களில் உள்ளவர்கள் விரிவுபடுத்த ஏற்ற நேரம். எக்காரணத்தை முன்னிட்டும் தொழில் மாற்றம் செய்ய வேண்டாம். 22.6.2012க்கு பிறகு தைரியம் குறையும். பதட்டமும் உணர்ச்சி வசப்படுத்தலும் ஏற்படும். எதிர்பாராத செலவுகளும் அரசு வரித் தொந்தரவுகளும் ஏற்படும். எச்சரிக்கை.

அரசியல்வாதிகளுக்கு புகழ், பதவி, கௌரவம் ஆகியவை கூடும். தலைமையினால் நல்ல வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். 8.6.2012க்கு பிறகு எதிரிகளால் பாதிப்பு ஏற்படக் கூடும். கவனம் தேவை. யதேச்சையாக கலகம் ஏற்படும். மலை, உயரமான மரம் உள்ள பகுதி, கட்டடங்களின் மேல் தளம், கோபுரம் ஆகிய இடங்களில் நீண்ட நேரம் தங்க வேண்டாம். 22.6.2012க்கு பிறகு சற்று விளம்பரம் குறைத்து ஒதுங்கி இருங்கள். தர்மச் செயல்களில் பங்கு பெறுவது நல்லது.

எச்சரிக்கை:    உயரமான இடங்களுக்குப் போக வேண்டாம்.
பரிகாரம்: சென்னை-கோடம்பாக்கத்திலுள்ள பாரத்வாஜேஸ்வரர் கோயில் அம்மனுக்கு மல்லிகை மாலை சாத்துதல் இம்மாதத்திற்கு நன்மை தரும்.

மாணவ மணிகளுக்கு பலமான கல்வி கற்கும் வாய்ப்பு பரிபூரணமாகக் கிட்டும். மூத்த சகோதரரின் ஆதரவு உண்டு. உயர் கல்வி கற்போருக்கு அரசு வழி உதவிகள், கடன்கள் கிடைக்கும். 15.6.2012 முதல் 20.6.2012 வரை கடும் ஜுரம் தோன்றும். புதிய இடங்கள் பற்றிய கவலை கொள்ள வேண்டாம். பள்ளி மற்றும் வாகனங்களின் அமைப்புகளை சரிபார்த்துக் கொள்ளவும். அவற்றால் 30.11.2012 வரை இடைஞ்சல்கள் ஏற்படக்கூடும். பெண்களுக்கு வீட்டு வருமானம் மிச்சப்படும். வீட்டு இயந்திரப் பொருள்கள் பழுதாகும்.

நீங்களாக புதிய வியாபாரங்கள் துவங்கலாம். 14.6.2012க்குள் வீடு, வாகனம், எஸ்டேட் வாங்கவும் விரிவுபடுத்தவும் மாற்றவும் நல்ல நேரமாகும். உத்யோகஸ்தர்களுக்கு இது முன்னேற்றமான நேரம். நிதி நிர்வாகம் சார்ந்த பொறுப்புகள் தங்களை வந்தடையும். பதவி உயர்வும் ஊதிய உயர்வும் மேம்படும். மிகுந்த சட்டப் பிரச்னைகளை சமாளிக்க பணிக்கப்படுவீர்கள். 10ல் குரு இருப்பதால் அதர்மச் செயல்களில் ஈடுபடுவோர்க்கு எதிர்மறையான பலன்களையே தரும். வேலை தேடிக் கொண்டிருப்பவர் களுக்கு கல்வித் தகுதிக்கேற்ப பெரிய கம்பெனிகளில் வேலை வாய்ப்புகள் கிட்டும். தொழில் பிரச்னைகளுக்காக வீட்டை அடமானம் வைக்க முயல்வீர்கள். சற்று காத்திருங்கள். 15.06.2012க்குப் பிறகு மற்றவர்கள் உதவி கிட்டும். தொழில் திட்டங்கள் சீராகும். வெளிநாட்டு ஏற்றுமதி தொடர்புகள் கிட்டும்.

கூட்டுத் தொழில் மற்றும் வியாபாரம் செய்ய வாய்ப்புகள் கதவை திறக்கும். வியாபாரிகள் பணவசதி கிடைக்கப் பெறுவீர்கள். அரசியல்வாதிகள் மலை சார்ந்த பகுதிகளில் விசாரணை மேற்கொள்ள நேரிடும். கோர்ட் விஷயங்களில் வெற்றி கிட்டும். அரசு வழிகளில் தொந்தரவுகள் வந்து நீங்கும். 14.6.2012 வரை எதிரிகளை வெற்றி கொள்ள நல்லபடியாகச் செயல்பட வேண்டியிருக்கும். புகழ், செல்வாக்கு அந்தஸ்து ஆகியவை பாதிப்பதுபோல் கௌரவபங்கமான ஒரு நிகழ்ச்சி உருவாகும். நண்பர்களால் கலகம் ஏற்படும்; கவனமாக இருங்கள். சுவாமிமலை தங்கத்தேர் இழுத்தல் அவசியம். 22.6.2012க்குப் பிறகு யாத்திரைகள் வேண்டாம். பகையும் சண்டையும் தோன்றும்.

எச்சரிக்கை: 3, 4, 5, 17, 18, 19 தேதிகளில் பிரயாணத்தில் முழு எச்சரிக்கை தேவை. 22.6.2012க்கு பிறகு பிரயாணங்களை தவிர்க்கவும்.
பரிகாரம்: திருப்பதி பெருமாள் பாதசேவை, பெருமாள் கோயில் சடாரி, தீர்த்தம் பெறுதல் இந்த மாதம் நன்மை தரும்.

விரும்பிய துறையில் படிக்கவும் விருப்பமான இடங்களில் சேரவும் அதிர்ஷ்டம் உள்ளது. பெரிய மனிதர்கள் ஆதரவும் கிடைக்கும்.  தொழில் நுட்பக் கவனம் தென்படுவதால் மேல்படிப்புக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கதவைத் தட்டும். 22.6.2012க்கு பிறகு வகுப்புகளில் ஆசிரியர், மாணவர் ஒற்றுமை குறையும். தங்கள் பிள்ளைகள் மேல் எந்த பழியும் ஏற்படாமல் காக்க பெற்றோர் கவனத்தோடு இருங்கள்.

பெண்களுக்கு வீட்டில்  சுபகாரியங்கள் செய்ய வாய்ப்புகள் ஏற்படும். திருமணம் கூடி வரும். குடும்பத்தில் தெய்வ நம்பிக்கை குறைந்து காணும் வாய்ப்புகள் தெரிகிறது. வார்த்தை வசவுகள் வேண்டாம். கணவருக்கு கால்வலி அதிகரிக்கும். நடமாட்டம் குறையும். குரு பாதுகைக்கு அபிஷேகம் செய்வது நலம் தரும். சிலருக்குத் தொடையில் புண் ஏற்படலாம். சகோதரர்களிடம் விவாதம் வேண்டாம். விரோதம் ஏற்படும். அலுவலகப் பெண்களின் வருமானம் உயரும். உத்யோகஸ்தர்களுக்கு திறமையாகச் செயல்படும் எண்ணத்தை சனி ஏற்படுத்துவான். செல்வாக்கை உயர்த்திக் கொள்ளும் முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். பதவி உயர்வுகளும் ஊதிய உயர்வுகளும் கிடைக்கும். கடுமையான பொறுப்புகள் வந்து சேரும். மனைவியிடம் சண்டை ஏற்படும். அது சொத்து பற்றியதாக இருக்கும். பேசி தீர்த்துக்கொள்வது நல்லது.  தொழிலதிபர்களுக்கு உடல் பலவீனம், பொருள் திருடுபோதல் போன்ற அசந்தர்பங்கள் ஏற்படும். வெளிநாட்டுப் பயணம் ஒன்று தோல்வியில் முடியும். 8.6.2012 வரை தொழில் விருத்திக்காக நகையை அடகு வைக்க நேரிடும். இதன் பிறகு பூர்வீகச் சொத்துகளில் பாகம் கிடைக்கப் பெறுவீர்கள். வியாபாரத்தில் உங்களின் திறமைகள் பாராட்டு பெறும். 15.6.2012க்கு பிறகு வியாபார விரிவாக்கம் செய்யலாம். எதிரிகள் பணிவர். அரசியல்வாதிகளுக்கு அடிமட்ட தொண்டர்களால் தொல்லை ஏற்படும். 20.6.2012 வரை வெளியிடங்களில் கூட்டங்களில் பங்கேற்பதை தவிர்க்கவும். அவமானம் ஏற்படலாம். தொடரப்பட்ட வழக்கில் ஏகோபித்த வெற்றியினைப் பெறுவீர்கள். பதவியை பொறுமையாகத் தக்க வைத்துக் கொள்ளுங்கள்.

எச்சரிக்கை: 3, 4, 5, 17, 18, 19 தேதிகளில் பிரயாணத்தில் முழு கவனம் தேவை.
பரிகாரம்: பாதுகா ஸஹஸ்ரம் படித்தல், குரு பாதுகைக்கு அபிஷேகம் செய்தல், இயலாதவர்களுக்கு செருப்பு வாங்கித் தருதல் போன்றவை இந்த மாதம் நன்மை தரும்.

மாணவர்கள் நிர்பந்தமான இடங்களில் நிபந்தனைக்குட்பட்டு படிப்பை தொடர நேரிடும். டெபாஸிட்டில் உள்ள பணம் கல்விக்கு கரையும் நிலை ஏற்படும். பெண்களுக்கு குடும்ப ஒற்றுமைக் குறைவில் கவலை தோன்றும். அளவுக்கு மீறிய செலவுகள் வாட்டும். வாக்கு நாணயம் தவறுதலும் பணம் கொடுத்து ஏமாறும் நிலையும் ஏற்படும். தன நஷ்டம் மற்றும் கடன் உபத்திரவம் இரண்டும் தவிர்க்க இயலாதவை. 8.6.2012 பிறகு கணவன் மனைவிக்குள் உள்ள கசப்புகள் விலகும். கருட தரிசனம் மனக் கிலேசத்தை நீக்கும். அலுவலகப் பெண்களுக்கு வேலைச்சுமை குறையும். உத்யோகஸ்தர்களுக்கு அதர்ம செயல்களின் மூலம் தொல்லைகள் ஏற்படும். எடுத்த காரியங்கள் தோல்வியில் முடியும். இதனை உணர்ந்து அந்த செயல்களை மீண்டும் மாற்றம் செய்து முடிப்பீர்கள். பெண்கள் மூலம் சாதகமான பலன்கள் ஏற்படும். அலுவலகத்தில் சற்று அச்சமான சூழல் நிலவும். 20.6.2012 பிறகு பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் கிட்டும். வேலை தேடுபவர்களின் வெளிநாட்டு முயற்சிகள் தோல்வியிலும் நஷ்டத்திலும் முடியும் எச்சரிக்கை. அரசு வழி தேர்வுகள் மூலம் 20.6.2012க்கு பிறகு அரசு வேலை கிடைக்கும். தொழில் துறையினர் முடிக்கப்படாத வேலைகளைப் பூர்த்தி செய்ய முயலுங்கள். தொழிலாளர்களிடம் அதிருப்தி ஏற்படும். இந்த நிலைமை மாத இறுதியில் சீராகும்.

வியாபாரிகள் வேண்டாத பொருட்களை உபயோகமுள்ள பொருள்களாக மாற்றி லாபம் காண்பார்கள். பிறரால் ஒதுக்கப்பட்ட தொழில்களை ஏற்று நடத்த இது சரியான நேரம். கலை, கைவினைப் பொருட்களின் ஏற்றுமதி உங்களுக்கு கைகொடுக்கும். தொழிற்சாலைகளில் இயந்திரங்களின் நேர்த்தியை 22.6.2012க்குள் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். எதிர்பாராத விபத்து நேரும் அபாயம் தெரிகிறது.
அரசியல்வாதிகள் கோர்ட், கேஸ் விவகாரங்களின் முடிவுகளை ஒத்தி வைக்க முயற்சி செய்யுங்கள். பெண் வழியில் பண விரயங்களும் நஷ்டங்களும் தென்படுகிறது. கௌரவம் பாதிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.  தற்போதைய பதவியை பாதுகாத்துக் கொள்வது நல்லது. பொறுமையாக இருக்கவும்.

எச்சரிக்கை: வெளியூருக்குப் பயணம் செல்பவர்கள் குடும்ப கௌரவம் கருதி எச்சரிக்கையாக இருக்கவும். 30.6.2012 அன்று பயணம் எதுவும் வேண்டாம்.
பரிகாரம்: மீனாட்சி பஞ்சரத்னம் சொல்லுதல், சூரியனார் கோயில் தரிசனம் ஆகியவை இம்மாதத்தில் நன்மை பெருக்கும்.


தொழிற்கல்விக்கான முயற்சிகள் கடும் பிரயத்தனத்தினால் கிடைக்கப் பெறும். வெளியூர் சென்று படிக்க நேரிடும். பெண்களுக்கு குடும்பங்களில் நன்மையும் செலவுகளும் சமமாக இருக்கும். கணவரின்  ஆரோக்யம் கவனிக்க வேண்டியதாக இருக்கும். பந்த பாசங்கள் உறவு முறை வருகையும் அதிகரிக்கும். அத்தைமார் அன்பும் அதிகரிக்கும்.

கணவன், மனைவிக்குள்ளான மனஸ்தாபங்களை பிரிவினை நோக்கி விரட்டாமல் பொறுமையாக கையாளுங்கள். அலுவலகப் பெண்களுக்கு அரசு அதிகாரிகளால் மிகுந்த தொல்லை ஏற்படும். 14ம் தேதிக்குப் பிறகு அளவுக்கு மீறிய கோபம் ஏற்படும் நிலை உருவாகும். 22.6.2012க்கு பிறகு நிலைமை சீராகும். அதுவரை பொறுமை காக்கவும். அரசு அலுவலர்களுக்கு இதுகாறும் ஏற்பட்ட தோல்வி, எதிரிகளால் பயம் ஆகியவை விலகும். செவ்வாய் சஞ்சாரத்தின் இறுதியில் இருக்கிறார். நின்றுபோன பண உயர்வுகள் கிடைக்கப் பெறும். திறமைகளுக்கு பாராட்டுகள் கிடைக்கும். எந்த வேலையையும் தயங்காது செய்வீர்கள். உடல் நலத்தையும் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்.

வேலை தேடுவோருக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். மனைவி வழி உதவிகள் கிடைக்கும். ஆர்டிஸ்டுகள், ஆசிரியர்கள் போன்றவர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். கூட்டு வியாபாரங்களில் ஏற்பட்ட நஷ்டம் குறைந்து லாபம் காண ஆரம்பிக்கும். தொழிற்சாலை வாகனங்கள் தற்போது நஷ்டம் ஏற்படுத்தும். 22.6.2012க்கு பிறகு நிலைமை சீரடையும். இப்பொழுது தொழிலில் எந்த மாற்றமும் செய்ய முற்படாதீர்கள்.

வியாபாரிகளுக்கு பலவகையிலும் வருமானம் கிடைக்கப் பெறலாம். 15.6.2012 முதல் 20.6.2012 வரையான காலத்தில் பல பிரயாணங்கள் ஏற்படும். அதனால் பலன்கள் கிடைக்கும். புதிய வியாபாரத் தொடர்புகள் ஏற்படும். கடிதத் தொடர்புகள் மூலம் பல நன்மைகள் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு 11.09.2012 வரை ஆரோக்யமான காலகட்டம்தான். கூட்டாளிகளிடம் அபிப்பிராய பேதம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். தங்கள் மேல் பழிவிழக் கூடும். அரசியலில் தலைமைப் பதவிக்கான வாய்ப்பு 11.9.2012க்குள் ஏற்படும். கவனமாக செயல்படுங்கள்.

எச்சரிக்கை: 6, 7, 8 தேதிகளில் பிரயாணத்தில் கவனமாக இருக்கவும்.
பரிகாரம்: சிம்ம வாகனத்தில் அமர்ந்துள்ள அம்மனை தரிசிப்பது, ஒரு முறையாவது இந்த மாதத்திற்குள் அருகிலுள்ள காளிதேவியை தரிசிப்பது போன்றவை நன்மையைத் தரும்.

மனோதிடம் குறைந்த நேரம் இது. தற்பொழுது உள்ள சூழலில் 11.9.2012 வரை எந்த படிப்பிலும் சற்று மந்தமாக இருப்பதாகவே காணப்படும். டிப்ளமோ துறைகளில் ஈடுபடுதல் பலன் தரும். மாணவர்களுக்கு பொறுப்புகள் கூடும். குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்படும். பெற்றோர்கள் எச்சரிக்கையாக இருக்கவும். பெண்களுக்கு பூர்வீகப் பங்குகள் கிடைக்காது. இதனால் சகோதரர்கள் பகை தோன்றும். தங்கள் கணவர் உடல்நிலை பலவீனம் அடையும். உங்களுக்கு இருந்த விஷக்கடித் தொல்லை  நீங்கும். சிலருக்கு தடைபட்ட விவாகம் நடைபெறும். அலுவலகப் பெண்களுக்கு மேலதிகாரிகளால் கடும் சிரமம் ஏற்படும். அலுவலர்களுக்கு அரசு வழியில் அனுகூலம் உண்டு.

உங்களுக்கு இருந்த கண் நோய் நீங்கும். கடன் நிவாரணத்திற்கு ஒரு வழி கிடைக்கும். அலுவலகத்தில் எதிரிகளின் தொல்லை இருப்பினும் உங்கள் காரியத்தில் வெற்றி அடைவீர்கள். வீண் அலைச்சல்கள், மனைவிக்கு உடல்நலக் குறைவு ஆகியவை ஏற்படும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு இங்கேயே சற்று பொறுத்து வேலை கிடைக்கும். அரபு நாட்டு வேலை முயற்சிகளில் பணம் இழப்பு ஏற்படும். தொழிலதிபர்கள் பெரிய பணக்காரர்களைப் பகைத்துக் கொள்ளும் சூழல் ஏற்படும். பூர்வீகத் தொழிலில் உள்ளவர்களுக்கு நஷ்ட அறிகுறிகள் தென்படுகிறது.

அரசு உதவியால் தொழிலை விரிவாக்கம் செய்யலாம். தொழிலாளர்கள் நலனில் கவனம் செலுத்துங்கள்.  பப்ளிஷிங், பிரிண்டிங், கல்வித்துறை சார்ந்த தொழில்களை ஏற்று நடத்தும் வாய்ப்பு வரும். வெளிநாட்டுப் பயணம் ஒன்று அமையும்.  புதிய தொழில் துவங்க நினைப்பவர்கள் மருத்துவமனை, நர்சிங்ஹோம், ஆதரவற்றோர் இல்லம் இவற்றை நிறுவலாம். 15.6.2012க்குப் பிறகு தொழில் முறைப் பயணங்களை தவிர்க்கவும். வியாபாரிகளின் திறமையான உழைப்பிற்கு ஏற்ற வாய்ப்புகள் கிட்டும்.  அரசியல்வாதிகளுக்கு மாத முற்பகுதியில் எதிரிகளை வீழ்த்தும் வாய்ப்பு கிட்டும். வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள். 15.6.2012க்கு பிறகு மந்திரிகளிடம் பகைமை ஏற்படும். எச்சரிக்கை தேவை.

எச்சரிக்கை :    3, 4, 5, 17, 18, 19 ஆகிய தேதிகளில் இரவு நேரப் பிரயாணங்களை முற்றிலும் தவிர்க்கவும்.
பரிகாரம்: சூரிய வழிபாடு, ஆதித்ய ஹ்ருதயம் சொல்லுதல், கேட்டல், சிவன் கோயிலில் அர்த்தஜாம தரிசனம் ஆகியவை  நன்மை தரும்.

புத்தி பலம் சற்று குறையும். கொஞ்சம் வக்ர புத்திகள் தோன்றும். இப்பொழுது சட்டக் கல்வி, பொருளாதாரக் கல்விகளில் ஈடுபட தோன்றும்.  குடும்பச் சூழ்நிலையை மனதில் வைத்து மாணவர்கள் செயல்பட வேண்டும். மாமன் வழி ஆதரவுகள் கிடைக்கும். பெண்களுக்கு திருமண விஷயங்கள் கைகூடும். குடும்பத்தினர் எல்லா வகையிலும் உதவிகரமாக இருப்பார்கள். கணவன் - மனைவிக்குள் பந்தபாசம் அதிகரிக்கும். இந்த ராசி கர்ப்பிணிப் பெண்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். 20.6.2012க்கு பிறகு நரம்புத் தளர்ச்சி காணும். அலுவலகப் பெண்கள் அதிகாரிகள் வழியில் இடையூறுகளைச் சந்திப்பார்கள். அலுவலர்கள் மேலுள்ள வழக்குகள் தோல்வியைத் தரும். 8.6.2012க்கு பிறகு எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். கடன் நிவாரணம் கிடைக்கப் பெறும்.
வாக்கு நாணயம் தவறாது நல்ல பெயர் எடுக்கலாம். திட்டமிட்டபடி அரசு வேலைகள் நடைபெறும். பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிட்டும். வேலை தேடிக் கொண்டிருக்கும் தங்கள் மகனுக்கு திறமைக்கேற்ற வேலை கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு அரசு உதவிகள், தொழில் விரிவாக்கம் செய்ய கடன் கிடைக்கும். மூத்த சகோதரர்களின் உதவிக்கரம் கிடைக்கும்.  8.6.2012க்கு பிறகு சக்திக்கு மீறி எந்தக் காரியத்திலும் இறங்க வேண்டாம். தொழிலாளர்களால் சட்ட பிரச்னைகள் வரக்கூடும். டிராவல் ஏஜென்ஸி, பப்ளிஷிங், ஸ்டேஷனரி, கலையரங்கம் கட்டுதல் ஆகிய தொழில்களில் புதிதாக ஈடுபடலாம். வியாபாரிகளுக்கு பல வழிகளிலும் வருமானம் வரும். 

அரசியல்வாதிகளுக்கு 15.6.2012க்கு பிறகு பதவியில் போட்டிகள் வரும். வெளியூர் பயணங்களை தவிர்க்கவும். ஏனெனில், அவமானங்களை சந்திக்க நேரும். தங்கள் தாயார் உடல்நிலை சுகம் அடையும். நேர்மையாக நடந்து நல்ல பெயர் எடுங்கள். தெய்வ தண்டனை ஒன்று ஏற்படும் காலம். மிகுந்த மன பேதலிப்புகளை உண்டாக்கும். திடீரென்று வழக்குகளை சந்திக்க வேண்டி வரும். இதில் சொத்துக்கள் விரயமாகும். எச்சரிக்கை தேவை.

எச்சரிக்கை :    3, 4, 5 ஆகிய தேதிகளில் பிரயாணங்களில் கவனமாக இருக்கவும்.
பரிகாரம் : பெருமாள் திருக்கல்யாண நிகழ்ச்சிகளில் பங்கேற்றல், திவ்யப் பிரபந்த பாசுரங்களை படித்தல், கேட்டல், ராமானுஜர் வழிபாடு ஆகியவை இந்த மாதம் நலம் தரும்.

எந்த நோக்கமுமற்ற நிலையில் 8.6.2012க்கு பிறகு கல்வி பற்றிய சிந்தனை மேலோங்கும். பெண்கள் தங்கள் தாயார் உடல் நிலையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். வீட்டின் பாதுகாப்பில் எச்சரிக்கை தேவை. பொருள்கள் களவு போகக் கூடும். கணவன் - மனைவி இடையே அடிக்கடி சச்சரவுகள் ஏற்படும். உங்களுக்கு அடிவயிற்று கோளாறு தோன்றும். பணத் தட்டுப்பாடு காரணமாக வீடு, மனை அடமானம் வைக்க நேரிடும். கடன் நெருக்குதல் ஏற்படும். தங்கள் கணவர் குடும்பத்தை விட்டு சில சமயம் பிரிந்திருக்க நேரிடும். ஏற்றுக் கொள்ளுங்கள். அலுவலக ஊழியர்களுக்கு கடன் தொல்லை அவதி ஏற்படும். நீதி, நேர்மை தவறி நடக்கும் எண்ணம் அச்சுறுத்தும். பொறுமையாக இருங்கள். வேலையை எதிர்பார்த்திருப்பவர்களுக்கு நல்ல  வேலை கிடைக்கும். நிதி பொறுப்புகளில் உள்ளவர்களுக்கு, நிதி ஆலோசனை நிர்வாகப் பொறுப்புகள் அதிகரிக்கும். 

இயந்திரங்கள் பழுதடைந்து பல வகையில் கஷ்ட நஷ்டங்கள் ஏற்படும். கல், ஓடு, கிரானைட் வியாபாரங்கள் முற்றிலும் முடங்கும். ஷேர்மார்க்கெட் மட்டும் லாபம் தரும். புதிய தொழில்களாக பால் பண்ணைகள், காய்கறி பண்ணைகள் ஆரம்பிக்க நன்று. வியாபாரிகளுக்கு வாகனத்தினால் அபாயம் ஏற்படும். கை, கால் உளைச்சல் அதிகரிக்கும். வியாபார, வாகன ஓட்டுநர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். விபத்துகளில் மாட்டிக் கொள்ள நேரும். சிலருக்கு இறந்தவர்களின் சொத்துக்களை நிர்வகிக்கும் பொறுப்பு கிடைக்கும். வரிச்சுமைகளும் வந்து சேரும்.
அரசியல்வாதிகள் தற்பொழுது உடல்நிலையில் நல்ல கவனம் செலுத்த வேண்டும். மூளை சம்பந்தமான நோய்கள் ஏற்படக் கூடும். போட்டிகளில் வீண் அலைச்சல்கள் மட்டுமே மிஞ்சும். வெளிதேச பயணங்களில் ஜுரம், ரத்த அழுத்தம், அடிபடுதல் ஆகியவற்றை சந்திக்க வேண்டிவரும். தற்பொழுது உள்ள பதவியை சீராக நிலைநிறுத்திக் கொள்ளவும்.

எச்சரிக்கை : 17, 18, 19, 30 ஆகிய தேதிகளில் பிரயாணங்களை தவிர்க்கவும். பொதுவாக இந்த மாத அனைத்து வழி பிரயாணங்களிலும் முழு கவனம் தேவை.
பரிகாரம் : துர்க்கை அம்மன் துதிகளை சொல்லுதல், கேட்டல், ஆலமரத்தடி விநாயகர் தரிசனம் ஆகியவை  நன்மை தரும்.

மாணவர்களுக்கு விஞ்ஞானத்தில் நோக்கமும் பூமி சம்பந்தப்பட்ட படிப்புகளில் ஆர்வமும் தலைதூக்கும். மண் ஆராய்ச்சித்துறை, பூமி தொடர்பான துறைகள் கைகொடுக்கும். பெண்களுக்கு பல சந்தர்ப்பங்களில் வீட்டை நிர்வகிக்க கடினமான சூழ்நிலை ஏற்படும். சகோதரர்களின் உதவி கிட்டும். வீடு, நிலம் கடனில் வாங்கி அவதிப்படுவது நேரும்.

கணவன், மனைவியிடையே பிரிவினைகள் தலைதூக்கும். பொறுமையும் நிதானமும் தேவை. உங்கள் உடல்நலம் பாதிக்கக் கூடும். திருமண எதிர்பார்ப்பில் உள்ளவர்களுக்கு இப்பொழுது கைகூடும். மறுமணம் எதிர்பார்ப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிட்டும். நீங்கள் எல்லோரிடமும் அன்பாக, சகஜமாக பழகுவீர்கள். அலுவலகப் பெண்களுக்கு அனுகூலமான சலுகைகளும் பலன்களும் கிட்டும். அரசு வழி வாகனங்கள் கிடைக்கப் பெற்றாலும் சம்பள பிரச்னைகள் வாட்டும். குடும்பத்தில் மனைவியால் பிரச்னை வரும். மனைவியிடம் கோபம் வேண்டாம். மனைவி வழி உறவினர்களிடமும் சச்சரவுகள் செய்யாதீர்கள்.

சகோதர, சகோதரிகளின் உதவி முழுமையாக கிட்டும். தொழிலதிபர்களுக்கு 15.6.2012க்கு பிறகு தொழில் மந்தமாகும். அரசு வழி வரிப் பிரச்னைகள் தோன்றும். நண்பர்கள் உதவி கிட்டும். நல்ல மன உறுதி வாய்க்கப் பெறும். கடன் பெற்று தொழில் முன்னேற்றம், பெரிய தொழில் ஒப்பந்தம் ஏற்படுத்துதல் ஆகியவை நடைபெறும். நண்பர்கள், மாற்று இனத்தவர், சகோதர வழி ஆதரவு கிட்டும். கூட்டு வியாபாரங்களில் தோல்வி காணும். எனினும் புதிய தொழிலில் புதிய முதலீடுகள் எதுவும் செய்ய வேண்டாம். பங்கு வியாபாரத்திலும் நஷ்டம் ஏற்படும். வியாபாரப் பிரயாணங்களில் எதிர்பாராத விபத்து ஏற்படும். ஏற்றுமதி தொழில்கள் அபிவிருத்தி அடையும். அரசியல்வாதிகள் பெரிய திட்டங்களில் எல்லோருடனும் சேர்ந்து பணியாற்றுவீர்கள். எதிரிகளை எளிதாக வெற்றி கொள்வீர்கள். வழக்குகள் அனைத்தும் சாதகமாகும். தலைமையின் நேரடித் தொடர்பு கிட்டும். வருமானம், வீடு, கார் வசதிகள் வாய்க்கப் பெறுவீர்கள். உடல் நலத்தை கவனியுங்கள். பிரயாணங்களில் மிகுந்த கவனம் தேவை.

எச்சரிக்கை : 30.06.2012 அன்று நீண்ட தூரப் பிரயாணமும் செய்ய வேண்டாம்.
பரிகாரம் : மயில்மேல் அமர்ந்திருக்கும் ஆறுமுகப் பெருமான் தரிசனம், வெங்கடேச சுப்ரபாதம் சொல்லுதல், கேட்டல் ஆகியவை இந்த மாதம் நன்மை தரும்.