ரேகா, நித்யாஜீஜி, என்று காதல் மன்னன் ஜெமினி கணேசன் வாரிசுகள் வரிசையில் லேட்டஸ்ட் டாக களமிறங்கியிருப்பவர் அபிநய். இவர் ஜெமினி & சாவித்ரி தம்பதியின் பேரன். உரூஜ் புரொடக்ஷன்ஸ் சார்பாக அப்துல் அஜீஸ் தயாரிக்கும் ‘வினை’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார்.
படத்தைப்பற்றி இயக்குனர் பாலசுதன் என்ன சொல்கிறார்..
‘‘இசைக்குழு வைத்திருக்கும் நான்கு இளைஞர்கள் ஒரு பாடகியும் மலேசியா செல்கிறார்கள். ஒரு சில தினங்களில் அந்த நான்கு இளைஞர்களில் ஒருவர் பின் ஒருவராக கொலை & செய்யப் படுகிறார்கள். கொலையாளி யார்? அவர்களுடைய நோக்கம்? என்ற கேள்விகளுக்கு விறுவிறுப்புடன் கதை சொல்லியிருக்கிறேன்.
அபிநய்க்கு ஜோடியாக புதுமுகம் பிரதிஷா நடித்துள்ளார். புதுமுகம் என்று சொல்ல முடியாதளவுக்கு க்ளாமரிலும் கலக்கியிருப்பார். சித்தார்த் யுவராஜ் இசையில் பாடல்கள் அமர்க்களமாக வந்துள்ளது.
இந்தப் படத்தின் கதையை ரெடி பண்ணிட்டு தான் ஹீரோவைத் தேடினேன்.
புதுமுக வேட்டையில் இருந்தபோது தற்செயலாக பிலிம் டைரியில் அபிநய் ஃபோட்டோவை பார்த் தேன். என் கதைக்கு பொருத்தமாக இருந்ததால் ஆடியஷனுக்கு அழைத்தேன். அந்த சந்திப்பில்தான் அவர் ஜெமினியின் கலையுலக வாரிசு என்று தெரிந்தது. உடனே டபுள் ஓ.கே பண்ணி ஒரே கட்டமாக படப்பிடிப்பைப் முடித்து விட்டோம்’’ என்று உற்சாகமாக பேசுகிறார்.
எஸ்.