கதம்... கதம்...



காக்கிச் சட்டை அணிந்து வாழும் நட்டி எந்தக் கட்டத்திலும் மாமூல் வாழ்க்கை பாதிக்கப்படக் கூடாது என்று நினைக்கக்கூடியவர். அதே ஸ்டேஷன் பணிக்கு காக்கி உடையை காதலி போல் நேசிக்கும் நந்தா வருகிறார். ஒரு கட்டத்தில் காட்சி மாறுகிறது.

நட்டி மனம் மாறி நல்லவராகிறார். ஆனால் நந்தாவின் பார்வையில் அவர் கெட்டவராக இருக்கிறார். இதனால் நந்தா எடுக்கும் அதிரடி முடிவு என்ன என்பது க்ளைமாக்ஸ்.

நட்டி செய்யும் செயல்கள் நல்ல ரகம் இல்லையென்றாலும் தன்னுடைய நடிப்பால் ரசிக்க வைக்கிறார். காக்கிச்சட்டையில் மிடுக்காக இருக்கிறார் நந்தா. ஹீரோயின் சனம் ஷெட்டி கச்சிதம். உடல் அழகால் ரசிகர்களின் மனதைத் தொடுகிறார் சாரிகா. குரல் வளத்தால் கவனம் ஈர்க்கிறார் வில்லனாக நடித்திருக்கும் ராஜகோபால்.

தாஜ்நூர் இசையில் பாடல்கள் இனிமை. பின்னணி இசையிலும் அதிக கவனம் செலுத்தியிருக்கிறார். யு.கே.செந்தில்குமாரின் ஒளிப்பதிவு நன்று. எவர்கிரீன் சப்ஜெக்ட்டான போலீஸ் கதையைச் சொல்ல வேண்டிய விதத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் பாபு தூயவன்.