பட்ற



அப்பாவியாக இருக்கும் நாயகன் மிதுன் தேவ்   இரண்டு வில்லன்களுக்கு மத்தியில் சிக்கிக்கொள்கிறார். ஒரு கட்டத்தில் வில்லன்களால் நாயகனின் தங்கை வாழ்க்கை நாசமாகிறது. தங்கையின் வாழ்க்கையைச் சீரழித்த வில்லன்களை ஹீரோ எப்படி பழி தீர்க்கிறார் என்பதுதான் கதை. நாயகனாக நடித்திருக்கும் மிதுன்தேவுக்கு நடிப்பு நன்றாக வருகிறது. பாராட்டுகள். நாயகி வைதேகி தன்னுடைய பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.

வில்லனாக வரும் சாம் பால் ரசிகர்களின் மொத்த கவனத்தையும் தன் பக்கம் திருப்பிவிடுகிறார். இன்ஸ்பெக்டராக வரும் ஆதேஷ் சிறப்பாக நடித்திருக்கிறார்.  இசையமைப்பாளர் ஸ்ரீகிருஷ்ணா தனது பணியை சிறப்பாக செய்திருக்கிறார். சுனோஜ் வேலாயுதனின் ஒளிப்பதிவு பாராட்டுக்குரியது. படத்தின் தலைப்புக்கு ஏற்ப புத்திசாலித்தனமான திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குனர் ஜெயந்தன்.