மலையாள மஞ்சாவின் தமிழ்க் கவர்ச்சி!



கேரளாவில் இருந்து வரும்போதே அதிர்ஷ்ட தேவதையை கூடவே அழைத்து வந்துள்ளார் புதுமுகம் வைதேகி. இவர் நாயகியாக அறிமுகமாகும் படம் ‘பட்ற’. முதல் படம் வெளிவருவதற்குள் மூன்று படங்களுக்கு கை நீட்டி அட்வான்ஸ் வாங்கியுள்ளார். இனி ஓவர் டு வைதேகி.

உங்களைப் பற்றி?

மலையாளத்தில் நான் நடித்த ‘மஞ்சா’ படத்தின் மூலம்தான் தமிழ்ப்பட வாய்ப்பு கிடைத்தது. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் நடிகையாக வேண்டும் என்ற எண்ணம் ப்ளஸ் டூ படிக்கும்போது கூட வரவில்லை. எங்கள் வீட்டிலும் சரி, நண்பர்கள் வட்டத்திலும் சரி நான் நடிகையாவேன் என்று எதிர்பார்க்கவில்லை.

அடிப்படையில் நான் கிளாசிகல் டான்ஸர். டான்ஸ்தான் எனக்கு எல்லாம். ஆனால், இப்போது சினிமாவில் நல்ல பேர் வாங்க வேண்டும் என்ற லட்சியத்துடன் வேலை செய்து வருகிறேன்.  

‘பட்ற’ படத்தில் கிளாமராக நடித்ததைப் பற்றி?

முதன்முறையாக இதில்தான் கிளாமராக நடித்தேன். அதுவும் பாடல் காட்சியில். கிளாமர் காட்சி யைப் பொறுத்தவரை எனக்கு ஒரு லிமிட் உண்டு. அந்த லிமிட்டை எப்போதும் தாண்டமாட்டேன். கண்ணாடியில் என்னைப் பார்த்துவிட்டுதான் கேமராவுக்கு முன் நிற்கிறேன். அந்த வகையில் எந்தக் கட்டத்திலும் வல்கராக நடிக்கமாட்டேன்.

‘49 ஓ’ படத்தில் கவுண்டமணியுடன் நடித்த அனுபவம் எப்படி?

மறக்க முடியாத அனுபம் சார் அது. அவருடைய பொண்ணு மாதிரி என்னைப் பார்த்துக் கொண்டார். எப்போதும் ஸ்பாட்டில் காமெடி பண்ணுவார். சில சமயம் அவர் மீதுள்ள மரியாதை யால் எனக்கு நடிப்பு வராது. அந்த மாதிரி சமயத்தில் ரொம்பவும் சப்போர்ட் பண்ணினார்.
 
அடுத்து?

மு.களஞ்சியத்தின் உதவியாளர் ஞானம் இயக்கும்  ‘ஆக்கம்’, சரவணனின் உதவியாளர் பழனி இயக்கும் ‘ஊதா’.

உங்கள் உள்ளம் கவர்ந்த நடிகை?

ஷோபனா. அவருடைய நடனமும் நடிப்பும் பிடிக்கும்.

எஸ்