ஜோடியை மாற்றிய காதல் கிசுகிசு!



‘ஒய் திஸ் கொலவெறி’ இசையமைப்பாளர் அனிருத்துடன் வந்த கிசுகிசுக்கள் ஓய்ந்துவிட்ட நிம்மதியில் இருந்த ஆண்ட்ரியா, இப்போது ‘வலியவன்’ பட ஹீரோ ஜெய்யுடன் இணைத்து வரும் கிசுகிசுக்களால் செம டென்ஷனாகி விட்டாராம்.

இதுபோல் ஆதாரமற்ற வதந்திகளை யார் பரப்புவது? அல்லது ஹீரோ தரப்பில் இருந்தே இந்த தகவல் பரவுகிறதா என்று துப்பறியும் வேலையில் தனது உதவியாளர்களை ஏவி விட்டுள்ளாராம்.

சித்தார்த், சமந்தா ஜோடியின் காதல் முறிவுக்கு யார் காரணம் என்று பட்டிமன்றம் நடக்கும் வேளையில், அதற்கு காரணம் தீபா சன்னிதி என்று  கொளுத்திப் போட்டுவிட்டார்கள். ‘எனக்குள் ஒருவன்’ படத்தில் ஜோடி சேர்ந்ததால், சித்தார்த் இப்போது தீபா சன்னிதியுடன் நெருக்கமாக இருந்து காதல் வளர்ப்பதாக சொல்லப்படுகிறது.

 இதையறிந்த சமந்தா, சித்தார்த்துடன் இருந்த காதலை முறித்துக்கொண்டதாகவும், மீண்டும் சித்தார்த்துடன் ஜோடி சேர மாட்டேன் என்று சொல்லி யிருப்பதாகவும் தகவல் பரவியுள்ளது. இதுபற்றி தீபாவிடம் கேட்டபோது சிரித்தார்.

‘எனக்கும், சித்தார்த்துக்கும் காதல் இல்லை. இதுபோன்ற கிசுகிசுக்களுக்குப் பயந்து, மறுபடியும் சித்தார்த்துடன் ஜோடி சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால், அதை விட்டுவிட மாட்டேன். எங்களுக்குள் எந்த நெருக்கமும் இல்லை என்கிறபோது, நான் எதற்காக பயப்பட வேண்டும்?’ என்று கேட்கிறார்.