ஹன்சிகாவின் தூரிகை வண்ணம்!



ஹன்சிகாவுக்கு ஆகஸ்ட் 9ஆம் தேதி பிறந்த நாள். தனது பிறந்த நாளில், மும்பையிலுள்ள ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுக்கும் வழக்கம் கொண்ட அவர், இதுவரை 25 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

இந்த பிறந்த நாளில் மேலும் 5 குழந்தைகளை தத்தெடுத்துள்ளார். தவிர, ஓவியம் வரைவதில் அதிக ஆர்வம் கொண்ட ஹன்சிகா, கிருஷ்ணர் ஓவியம் ஒன்றை வரைந்தார். சமீபத்தில் அந்த ஓவியத்தை  ஒருவர் 15 லட்ச ரூபாய் கொடுத்து வாங்கிச் சென்றார். அந்தத் தொகையை மும்பை யிலுள்ள அனாதை இல்லத்துக்கு வழங்கியுள்ள ஹன்சிகா, மும்பையில் முதியோர் இல்லம் கட்ட ஆயத்தமாகி வருகிறார்.

-தேவா