மாலை 6 மணிக்கு மேல் கைகள் நடுங்கும் நடிகை



‘ராட்டின’ அறிமுக நடிகை எங்கே இருக்கிறார்? என்ன செய்கிறார் என்று யாருக்கும் தெரியவில்லை என்கிறார்கள். ஓரிரு தமிழ்ப் படங்களில் திறமை காட்டியும் மேற்கொண்டு புதுப்பட வாய்ப்பு கிடைக்காமல் அல்லாடிய அவர், படிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து கேரளாவில் செட்டிலாகி விட்டதாக ஒரு தகவல் சொல்கிறது. ‘இல்லையில்லை. அவருக்கும், ஒரு இளம் ஹீரோவுக்கும் காதல் தொடர்கிறது’ என்று மற்றொரு தகவல் பரவுகிறது. அதுபற்றி நடிகையிடம் விசாரிக்க தொடர்புகொண்டால், செல் நம்பர் மாற்றப்பட்டுள்ளதாக ஒலிக்கிறது.


மாலை ஆறு மணியானால், ‘ட்ராயிங்’ நடிகைக்கு கை நடுங்குகிறதாம். தேவையில்லாமல் டென்ஷனாகி விடுவதாகவும், யாரிடம் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் வாய்க்கு வந்தபடி பேசுவதாகவும் நேரில் பார்த்தவர்கள் சொல்கின்றனர். நடிகையை நேரில் பார்த்தால், ‘இந்த பொண்ணா அப்படி? இருக்க முடியாதே’ என்ற கழிவிரக்க உணர்வு ஏற்படுகிறது. ஆனால், ‘எந்த புற்றில்... எந்த பாம்பு இருக்குமோ’ என்ற முன்னோர் மொழியும் ஞாபகத்தில் வந்து செல்கிறது.

சொந்தப் படம் எடுத்து கையை சுட்டுக்கொண்டாலும், சில நடிகைகளைப் பொறுத்தவரை, படம் தயாரிக்கும் ஆசை விட மாட்டேன் என்று துரத்துகிறது. லேட்டஸ்ட் வரவு, ‘ரன்சிம்’ நடிகை. அம்மணிக்கு உடம்பு பெருத்து விட்டது. இனிமேல் யாரும் தன்னை ஹீரோயினாக நடிக்க கூப்பிட மாட்டார்கள் என்ற உண்மையை கஷ்டப்பட்டு புரிந்துகொண்ட அவர், தன் அபிமானத்துக்குரிய சில ஹீரோக்களை அணுகி, ‘நான் ஒரு படம் தயாரிக்கிறேன். தாராளமா கால்ஷீட் கொடுங்க’ என்று கேட்கிறாராம்.

இதற்குமுன், ‘தமிழில் படம் இயக்குவதே என் லட்சியம்’ என்று சொன்ன அவர், திடீர் பல்டி அடிக்க என்ன காரணம் என்று தெரியவில்லை. ஆனால், நடிகையின் போன் வந்தாலே பல நடிகர்கள் அலறுகிறார்களாம். காரணம், கேட்கும் சம்பளத்தை நடிகை கொடுப்பாரா என்ற சந்தேகம்தான். ‘வள்ளி’ அறிமுக ஹீரோயின் ஜோடியாக ‘நேசம் நியூ’ படத்தில் நடித்தபோது காதல் மலர்ந்து, திடீரென்று அவரை திருமணம் செய்த வில்லன் பிளஸ் குணச்சித்திர நடிகர் பிளஸ் இயக்குநரான அந்த நடிகர், புதிதாக ஒரு படம் இயக்க விரும்பி, சில இளம் ஹீரோக்களிடம் பேசினாராம்.

ஆனால், அத்தனை ஹீரோக்களும் கதை கேட்க நேரம் ஒதுக்காமல், நடிகருக்கு ‘பெப்பே’ காட்டிவிட்டார்களாம். ஏற்கனவே இரண்டு படங்களை இயக்கி தன்னை யாரென்று நிரூபித்த நடிகர், வித்தியாசமான கதையை வைத்துக்கொண்டு அலைந்ததுதான் மிச்சம். ஒரே படத்தில் ஏழு ஹீரோக்களை நடிக்க வைப்பதற்காக அவர் எடுத்த முயற்சிகள் வீணாகி விட்ட நிலையில், அடுத்து என்ன செய்வதென்று ஆலோசித்தவர், மீண்டும் வில்லன் நடிப்பில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளாராம்.

தெலுங்கிலிருந்து தமிழுக்கு வந்த ‘வ.வா.ச’ நாயகி, கைவசம் கணிசமான படங்கள் வைத்திருக்கிறார். ஆனால், அவரது அக்கா ‘யமுனா’ நாயகிக்கு ஒரு படமும் கிடைக்கவில்லையாம். எனவே கடுமையாக டென்ஷனாகி விட்ட அவர், ‘திறமையும், இளமையும் இருக்கிற என்னை யாரும் கண்டுக்க மாட்டேங்கிறாங்களே’ என்று வருத்தப்படுகிறாராம். தங்கையை நாடி வந்து அவரால் நிராகரிக்கப்படும் ஓரிரு வாய்ப்புகளில், தன் பக்கம் ஒரு படத்தையாவது திருப்பி விடும்படி கால்ஷீட் மேனேஜர்களிடம் கேட்டுள்ளாராம். அவர்களும், ‘ஆகட்டும்... பார்க்கலாம்’ என்று கழுவிய மீனில் நழுவிய மீனாக ஓட்டம் எடுக்கிறார்களாம். அக்காவின் நச்சரிப்பு, எங்கே தன்னையும் தாக்கிவிடுமோ என்ற பயத்தில் தவிக்கிறாராம் தங்கை நடிகை.

உயரத்தில் ரொம்ப குள்ளம். ஆனால், நடிப்பில் பெரிய உயரம். இப்படித்தான் ‘நித்ய’ நடிகையைப் பற்றி மல்லுவுட், டோலிவுட் ஏரியாக்களில் சொல்கிறார்கள். ஆனால், கோலிவுட் பகுதிகளில் அம்மணிக்கு அவ்வளவு வரவேற்பு இல்லையாம். காரணம், அவரது அடாவடிப் பேச்சு என்று சொல்கிறார்கள். கதை கேட்க நேரம் ஒதுக்கமாட்டாராம். அப்படி ஒதுக்கி கதை கேட்டால், சில நிமிடங்களிலேயே, ‘உங்க ஸ்டோரி நல்லா இல்ல.

இந்த கேரக்டர் என் இமேஜுக்கு சரிப்பட்டு வராதுன்னு தோணுது’ என்று நழுவி ஓடும் பாணியில் பேசுவாராம். கதை மற்றும் கேரக்டர் பிடித்திருந்தால், மிகப் பெரிய தொகையை சம்பளம் என்று குறிப்பிட்டு, அதில் மூன்றில் இரண்டு பங்கு தொகையை உடனே தரவேண்டும் என்று அடம் பிடிப்பாராம். ‘அற்புதமா நடிக்கிற பொண்ணு. இப்படி அநியாயமா ரூல்ஸ் போட்டு, தன் லைப்பை தானே கெடுத்துக்குதே’ என்று, ‘உச்’ கொட்டுகிறார்கள் கோலிவுட் ஆசாமிகள்.

குட்டை யான கவுன் அணிந்து, வாழைத் தண்டு காலழகு வெளியே தெரியும்படி விழாக்களுக்கு வரும் ஹீரோயின்கள் பட்டியலில், புதிதாக சேர்ந்துள்ளார் ‘ஆனந்த பிரிய’ நடிகை. இதில் பெரிய சங்கடம் என்னவென்றால், மேடையில் கால் மேல் கால் போட்டு அமரும்போது, கிடைத்த இடைவெளி யில் நுழையும் போட்டோகிராபர்கள், தங்கள் கேமராவில் அந்த நடிகைகளின் கிளாமர் போஸ்களை லட்டு, லட்டாக ‘கிளிக்’ செய்துவிடுகின்றனர்.

மேடைக்குக் கீழே இருந்து எடுக்கப்படும் சில போட்டோக்கள், நடிகைகளை ஸ்கேன் செய்வது போல் அமைந்து நெளிய வைக்கின்றன. இதுகுறித்து ஒருமுறை நடிகர் சங்க கூட்டத்தில் ‘பிரகாச’ ஹீரோ வருத்தப்பட்டாராம். போட்டோகிராபர்களுக்கு ஒரு கட்டுப்பாடு கொண்டு வந்தால் மட்டுமே இதுபோன்ற நெளியவைக்கும் சமாச்சாரம் நடப்பதை தடுக்க முடியும் என்று வலியுறுத்தப்பட்டதாம். என்றாலும், தண்ணீர் மேல் எழுதி வைத்த மாதிரி ஆகிவிட்டதாம் அந்தப் பேச்சு.

தன் பெயரை ‘ஷானுஅ’ என்று மாற்றியமைத்தும் கூட, யாருமே அந்தப் பெயரில் தன்னை அழைப்பதில்லை என்று வருத்தப்பட்டு புலம்புகிறாராம் ‘சுனேன’ நடிகை. நியூமராலஜியில் அதிக நம்பிக்கை கொண்ட அவர், கோலிவுட்டில் அதிக படங்களில் நடிப்பது எப்படி என்ற ரகசியத்தை அறிவதற்காக, ஜோதிடரை நாடியிருக்கிறார். அவர்தான் இந்த பெயர் மாற்ற அறிவிப்பை வெளியிடச் சொன்னாராம். இனிமேல் தன்னை புதுப்பெயரில் மட்டுமே அழைக்க வேண்டும் என்று மீடியா மற்றும் சினிமா வட்டாரத்துக்கு அறிக்கை அனுப்பி ஓய்ந்த நடிகை, யாரும் தன்னை புதுப்பெயரில் அழைக்க மாட்டேன் என்கிறார்களே, என்ன காரணம் என்று தெரியாமல் புலம்புகிறாராம்.

சமீபத்தில் தமிழில் நடித்த இரண்டு படங்களின் ரிலீசை பெரிதாக எதிர்பார்த்து ஏமாந்த ‘பூர்ண’ நடிகை, சம்பளத்தில் தள்ளுபடி அறிவித்து, புதுப்பட வாய்ப்புக்கு தூண்டில் போட்டு, ஏதாவது பலன் கிடைக்குமா என்று காத்திருக்கிறாராம். அவரைத் தேடி வந்து ஒப்பந்தம் செய்ய யாரும் முன்வராத நிலையில், மல்லுவுட்டில் அதிக கவனம் செலுத்த முடிவு செய்துள்ளாராம். தமிழில் பொருத்தமான கேரக்டர் கிடைத்தால், தயாரிப்பாளர் சொல்லும் சம்பளத்துக்கு நடித்துக் கொடுக்க தயாராக இருக்கிறாராம். இதற்கிடையே அவருக்கு மேடையில் நடனமாடும் வாய்ப்புகள் கிடைத்து, ஒரு நடனத்துக்கு ஐம்பதாயிரம், ஒரு லட்சம் என்று சம்பளம் வாங்கி சந்தோஷமாக இருக்கிறாராம்.

பாலிவுட்டில் ‘பிசின்’ நடிகைக்கு வாய்ப்பு வரவில்லை. கோலிவுட், டோலிவுட், மல்லுவுட் எதிலும் அவருக்கு மவுசு இல்லை. ஸோ, ஹாலிவுட் படத்தில் நடிக்க முயற்சிக்கிறாராம். இதற்கிடையே அவரது திருமணத்தைப் பற்றிய வதந்திகள் றெக்கை கட்டிப் பறப்பதால், அதை எப்படி ஆஃப் செய்வது என்று ஆழமாக யோசித்து வருகிறாராம். வெளிநாட்டில் ஒரு காதலன் இருப்பதாகவும், அவருடன் திருமண நிச்சயதார்த்தம் முடிந்ததாகவும், அவரையே ‘பிசின்’ ரகசிய திருமணம் செய்ய இருப்பதாகவும் செய்திகள் கொளுத்திப் போடப்படுகின்றன.

ஆனால், அந்த வதந்திகளை பெரிதும் ரசிக்கும் நடிகையின் நெருங்கிய வட்டாரம், அம்மணிக்கு இன்னும் திருமண ஆசை வரவில்லை என்று சொல்கிறது. அப்படி வந்தால், ஓடி ஒளிந்து திருமணம் செய்துகொள்ள மாட்டாராம். ஊரறிய பகிரங்கமாக நடத்தி, அனைவருடைய ஆசிகளையும் பெறுவாராம். இப்படி சொன்ன பல நடிகைகள், பிறகு எப்படி தங்கள் திருமணத்தை மறைத்தார்கள் என்பது ரசிகர்களுக்கு தெரியாதா என்ன?

(படத்தில் இருக்கும் நடிகைகள் ரச்சா, ஷங்கை, கீதாஞ்சலி, அஸ்மிதா ஸூட் ஆகியோருக்கும் இந்தச் செய்திகளுக்கும் தொடர்பில்லை)

- மாயன்