கதம்ப சாதம்



தேவையான பொருட்கள்

பச்சரிசி, துவரம் பருப்பு - தலா 1 கப், காய்கறி கலவை (கேரட், பீன்ஸ், கோஸ், பீட்ரூட்) - 2 கப், சின்ன வெங்காயம் - 10, தக்காளி - 5, சாம்பார் தூள் - 2 டேபிள் ஸ்பூன், புளிக் கரைசல் - அரை கப், பெருங்காயம், மஞ்சள் தூள் - தலா அரை டீஸ்பூன், கடுகு, உளுந்து - தலா 1 டீஸ்பூன், எண்ணெய், நெய் - தலா 2 டேபிள் ஸ்பூன், உப்பு - தேவைக்கு.

செய்முறை

காய்களை விரல் நீளத் துண்டுகளாகவும், வெங்காயம், தக்காளியை பொடியாகவும் நறுக்குங்கள். அரிசி, பருப்புடன் ஆறு கப் தண்ணீர், காய்கறிகள், மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து வேக வையுங்கள். இரண்டு விசில் வந்ததும், மிதமான தீயில் இரண்டு நிமிடங்கள் வைத்து இறக்குங்கள்.

வாணலியில் எண்ணெய், நெய்யை சூடாக்கி கடுகு, உளுந்து தாளித்து, வெங்காயத்தை வதக்குங்கள். பிறகு தக்காளி, சாம்பார்தூளைச் சேர்த்து ஐந்து நிமிடங்கள் வதக்கி, புளிக் கரைசல், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், உப்பு, ஒரு கப் தண்ணீர் ஆகியவற்றைச் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி, பருப்பு சாதக் கலவையோடு சேர்த்துக் கலக்குங்கள்.