என்னென்ன தேவை?பனீர் - 150 கிராம்,
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்,
கரம் மசாலா - 1 டீஸ்பூன்,
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்,
தந்தூரி பவுடர் - 1 டீஸ்பூன்,
எண்ணெய் - 1/2 கப்,
உப்பு - தேவைக்கு.
எப்படிச் செய்வது?பனீரை நீள நீளமாக வெட்டிக் கொள்ளவும். அத்துடன் உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலா, இஞ்சி, பூண்டு விழுது, தந்தூரி பவுடர், சிறிது எண்ணெய் சேர்த்து நன்கு பிரட்டிக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை ஊற்றி நன்கு காய்ந்ததும் பனீரை நன்கு சிவக்கும் வரை பொரித்தெடுத்துப் பரிமாறவும்.