ஃப்ளவர் பனீர்



என்னென்ன தேவை?

பாசுமதி அரிசி - 100 கிராம்,
பனீர் -  1/4 கிலோ,
மிளகாய் தூள் -  1 டீஸ்பூன்,
தைம் - 1/2 டீஸ்பூன் (உலர வைத்தது),
எண்ணெய்  1 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

அரிசியை 15 நிமிடம் ஊற வைத்து, உடையாமல் வடித்துக் கொள்ளவும். ஒரு கிண்ணத்தில் பனீரை துருவி அத்துடன் மிளகாய் தூள், தைம், உப்புச் சேர்த்துக் கொள்ளவும். பிறகு கையில் எண்ணெய் தடவிக் கொண்டு பனீரை அரிசியில் சேர்த்து உருட்டி வடை வடிவத்தில் தட்டி, இட்லி தட்டில் அடுக்கி 10 நிமிடம் வேகவிடவும். வெந்தவுடன் அழகாக அடுக்கிப் பரிமாறவும்.