தத்துவம் மச்சி தத்துவம்
‘‘இனிமேல் நீங்க தினமும் ஒரு வேளைதான் சாப்பிடணும்...’’ ‘‘ஏன் டாக்டர்..?’’‘‘எனக்கு உங்ககிட்ட இருந்து நிறைய ஃபீஸ் வர வேண்டி இருக்கே..!’’ - பி.பாலாஜி கணேஷ், கோவிலாம்பூண்டி.
கோவைப் பழத்தை கோவையில வாங்கலாம். அதே பழத்தை மதுரையில வாங்கினா ‘மதுரைப்பழம்’னோ, திருச்சியில வாங்கினா ‘திருச்சிப் பழம்’னோ சொல்ல மாட்டாங்க. அங்கேயும் கோவைப்பழம்னுதான் சொல்லுவாங்க! - ஜி.தாரணி, மதுரை.
‘‘அந்த கோச்சிங் சென்டர்ல ஒரே கூட்டமா இருக்கே... என்ன சொல்லித் தர்றாங்க?’’ ‘‘தலைவர்கள் மேல குறி தவறாம செருப்பு வீசவாம்...’’ - பர்வீன் யூனுஸ், ஈரோடு.
‘‘திருடினவன் மேல நீங்க ஏன் புகார் தரலை..?’’ ‘‘பிராயச்சித்தமா என் பொண்ணை வரதட்சணை இல்லாம கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொல்லிட்டான் சார்!’’ - பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.
என்னதான் டாக்டரே ஆனாலும், அவரால நிவாரணத்துக்கு எல்லாம் மருந்து போட முடியாது! - மருத்துவருக்கே மருந்து போடும் அளவுக்கு ரணகளமாக யோசிப்போர் சங்கம் - கி.ரவிக்குமார், நெய்வேலி.
‘‘இந்த ஸ்டேஷனில் யாரையாச்சும் உனக்குத் தெரியுமா..?’’ ‘‘தெரியாது சார்..!’’ ‘‘வேற எப்படி நீ திருடன்னு நம்பி மாமூல் வாங்கறது..?’’ - எம்.ஹெச்.இக்பால், கீழக்கரை.
‘‘தலைவர் பொதுக்கூட்ட மேடையில பேசுறதுக்குப் பதிலா ஏன் பாடுறாரு?’’ ‘‘யாரோ ஒருத்தர் துண்டு சீட்டுல, ‘பேசுனா குண்டு வைப்பேன், அதனால பாடு’ன்னு எழுதிக் கொடுத்திருக்காராம்!’’ - ஆர்.மணிவண்ணன், பனைமேடு.
|