கவிதைக்காரர்கள் வீதி
 * கதவடைக்கப்பட்ட உறக்கம் ஜன்னல் கம்பிகளின் வழியே லாவகமாய் உட்புகுந்து அங்குமிங்கும் அலைந்து இறுதியாய் ஞாபக அலமாரியில் அடுக்கி வைத்திருக்கும் நினைவுகளில் ஒன்றை உருட்டித் தள்ளிய சப்தத்தில் விழிக்கையில் குதித்தோடியது என் கனவுப்பூனை!
* இரவெல்லாம் மழை கால்களில் கனவுச்சகதி தூக்கத்தில் நடந்திருப்பேன் நேற்று என்னுள்!
* நதியின் அழகை அங்கேயே உட்கார்ந்து ரசிக்கிறது கரை!
* பட்டாம்பூச்சி பிடிக்க ஓடுகிறேன் அவள் வீட்டைத் தாண்டி
* அந்த காய்ந்த மரத்தடியில் முறிந்து விழுந்திருந்தது நிழல்..!
தளபதி கோபால்
|