நியூஸ் வே



நம்ம ஊர் பிரியாணிக்கு இன்னொரு உலக அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. பெருமைக்குரிய பிரெஞ்சு டிக்‌ஷனரியான லே பெடிட் லாரோஸி, தனது புதிய பதிப்பில் சேர்த்திருக்கும் ஒரே இந்திய வார்த்தை பிரியாணி. ‘செல்ஃபி’ போன்ற 150 வார்த்தைகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன.

நயன்தாரா இப்போதைய பேய்ப்பட சீசனில் ‘மாயா’ படத்தில் பேயாக நடிக்கிறார். ஆரி படத்தில் இருந்தாலும் நயனுக்கு ஜோடியில்லை. விநியோகஸ்தர்களிடையே இந்தப் படத்தை வாங்க கடும் போட்டி!

பாரதிய ஜனதாவுக்கு உத்தரப் பிரதேசத்தில்தான் அதிக எம்.பி.க்கள் இருக்கிறார்கள். ‘இவர்களில் யாருமே கட்சிக்காரர்களை மதிப்பதில்லை’ என தலைவர் அமித் ஷாவிடம் மாநில நிர்வாகிகள் பலர் புகார் செய்ய, ‘‘நான் என்ன செய்வது? உ.பி.யில் இருக்கும் நம் கட்சி எம்.பி.க்கள் 71 பேரில் 5 பேர் மட்டுமே என் கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள்’’ என விரக்தியோடு பதில் சொன்னாராம் அவர். அந்த 5 நல்லவர்கள் யார் என இப்போது கட்சிக்காரர்கள் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

ஸ்மார்ட் போனை பேசவும் விளையாடவும்தான் எல்லோரும் பயன்படுத்துவதாக நினைக்கிறோம். ஆனால் பயனுள்ள பல விஷயங்களுக்கும் அது உதவுகிறது என்கிறது ஒரு சர்வே! ஸ்மார்ட் போன் வழியாக புது வேலைக்கு அப்ளிகேஷன் போடுவதாக 18 சதவீதம் பேர் சொல்கிறார்கள்; உடல்நிலை பற்றிய தகவல்களைப் படிப்பதாக 62% பேர் சொல்கிறார்கள். ஆன்லைன் பேங்கிங் சேவைக்கு பயன்படுத்துவதாக 57% பேர் சொல்கிறார்கள். அரசு சேவைகள் பற்றி அறிவதாக 40% பேர் சொல்லியிருக்கிறார்கள்.

தொழிலதிபர் கோபிசந்த் இந்துஜாவின் மகன் திருமணத்தில் சில நிமிடங்கள் நடனமாடுவதற்கு ஆறே கால் கோடி ரூபாய் வாங்கியிருக்கிறார் ஜெனிஃபர் லோபஸ். ஒரு திருமண நடனத்துக்கு வாங்கப்பட்ட அதிகபட்ச சம்பளம் இதுதானாம்!

விளம்பர ஒப்பந்தங்கள் மூலமாக 100 கோடி ரூபாயைத் தாண்டிய வருமானம் பெறும் மூன்றாவது இந்திய விளையாட்டு வீரர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் விராட் கோஹ்லி. சச்சினும் டோனியும் இதற்கு முன் இந்த எல்லைக்குள் இருக்கிறார்கள்.

புது ஹீரோ மாதிரி படுசுறுசுறுப்பாக நடித்துக்கொண்டிருக்கிறார் கவுண்டமணி. சென்ற ஆண்டு தனது அலுவலகத்துக்குள் பிறந்த நாளைக் கொண்டியவர், இந்த ஆண்டு ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை’ படத்தின் ஷூட்டிங்கில் கேக் வெட்டி மகிழ்ந்திருக்கிறார்.

‘வேலையில்லா பட்டதாரி 2’வில் இப்போது நடித்து வரும் சமந்தா, அடுத்தும் தனுஷுடன் ஜோடி சேருகிறார். வெற்றிமாறன் டைரக்‌ஷனில் தனுஷ் நடிக்கும் இந்தப் படத்திற்கு ‘வடசென்னை’ என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள். இந்த ஸ்கிரிப்ட்டில்தான் சிம்பு நடிப்பதாக இருந்தது.

ரஜினி படத்திற்காக லொகேஷன் பார்க்க ரஞ்சித் மலேசியா போயிருக்கிறார். ஜூன் முதல் வாரத்தில் புதுப் படத்திற்கான பெயர், அறிவிப்பு வருகிறது.

ஏற்கனவே 20% முடித்திருக்கும் ‘கெட்டவன்’ படத்தை திரும்பவும் எடுக்க சிம்பு தீர்மானித்திருக்கிறார். படத்தில் சில மாற்றங்கள் செய்ய உத்தேசித்திருக்கிறார். ‘வாலு’ எப்ப வரும்?

மலையேறும் வீராங்கனை ஆகியிருக்கிறார் நடிகை ஹுமா குரேஷி. மலேசியாவின் மிக உயரமான சிகரமான கினபாலு மலையைத் தொட்டிருக்கிறார் அவர். இதற்காக 2 வாரங்கள் பயிற்சி எடுத்தாராம். ‘‘உயரத்தில் இருந்து சுற்றிலும் பார்ப்பது வியக்க வைக்கும் அனுபவம்’’ என்கிறவர், அடுத்தடுத்து பல திட்டங்கள் வைத்திருக்கிறாராம்.

1992ல் கார்த்திக் நடித்து வெளிவந்த ‘அமரன்’ படம், 23 வருடத்திற்குப் பிறகு இரண்டாம் பாகம் காண்கிறது. பெயர் ‘அமரன் 2’தான். முதல் பாகத்தை இயக்கிய கே.ராஜேஸ்வரே இதையும் இயக்குகிறார். சமீபத்தில் நடந்த இதன் ஃபோட்டோ ஷூட்டில் செம ஃப்ரெஷ் எனர்ஜியோடு கார்த்திக்கை பார்த்தவர்கள் ஆச்சரியப்பட்டிருக்கிறார்கள்.

மோடி அரசின் ஓராண்டு சாதனைப் பட்டியல் தயாரிக்க அதிகம் மெனக்கெட்டவர், மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி. எல்லா அமைச்சர்களிடமும் அவர்களின் துறை சாதனைப் பட்டியல் கேட்டு வாங்கி, ‘‘இன்னும் டீடெய்ல்ஸ் கொடுங்க, வேற எதுவும் புதுசா செய்யலையா? இதைப் போய் சாதனைன்னு சொல்லலாமா?’’ என ட்ரில் வாங்கி விட்டாராம் மனிதர்.

மஞ்சு வாரியரிடம் ‘‘என் ‘36 வயதினிலே’ பார்த்தீர்களா?’’ என விசாரித்திருக்கிறார் ஜோதிகா. ‘‘நான் ஊரில் இல்லை. சற்று முன்னர்தான் திரும்பினேன். பார்த்துவிட்டு சொல்கிறேன்!’’ எனச் சொன்னார் மஞ்சு. அவர் போனுக்காக ஜோ வெயிட்டிங்!

செல்வராகவனின் புதிய படத்தில் சிம்பு முருக பக்தராக நடிக்கிறார். டாப்ஸி போலீஸ் அதிகாரியாக வருகிறார்.

ஐதராபாத்தில் நடந்த ‘தூங்காவனம்’ பட பிரஸ்மீட்டில் கமல், த்ரிஷாவுடன் பிரகாஷ்ராஜும் ‘ஆடுகளம்’ கிஷோரும் வந்திருந்தனர். ஆக, படத்தில் 2 வில்லன்கள்.

யாராவது ஆசீர்வாதம் கேட்டாலோ, குழந்தைக்கு பெயர் வைக்கச் சொன்னாலோ கண்டிப்பாக மறுத்துவிடுகிறார் அமிதாப் பச்சன். ‘‘ஆசீர்வாதம் செய்யும் அளவுக்கு நான் மதிப்பானவனும் இல்லை; குழந்தைக்கு பெயர் வைக்கும் அளவுக்கு நான் அறிவாளியும் இல்லை. என்னை சங்கடத்தில் ஆழ்த்தாதீர்கள்’’ என்பார்.

‘விக்ரமுடன் விஜய் மில்டன்
சண்டை’ என்று மீடியாவில் வெளியான செய்தியை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு, ‘‘என்னால் விக்ரமுடன் சண்டை போட முடியாது. அவர் ஆர்ம்ஸ் ரொம்பவும் பெரிது. வேண்டுமானால் முருகதாஸுடன் சண்டை போட முயற்சிக்கிறேன்’’ என காமெடி பொங்க பதிலளித்துள்ளார் விஜய் மில்டன்.

‘என் ராசாவின் மனசிலே 2’ படத்தின் ஷூட்டிங்கை ஜூன் மாதம் தொடங்குகிறார் ராஜ்கிரண். இதற்காக முறுக்கித் திருகின மீசையும், முரட்டு புஷ்டி உடம்பு மாக ரெடியாகிவிட்டார் மனிதர். படத்தில் இன்னொரு ஹீரோ இருந்தாலும் இளையராஜாவின் பாடல்கள்தான் மெயின் ஹீரோ!

‘‘விக்னேஷ் சிவன் இயக்கின ‘போடா போடி’ எனக்குப் பிடிக்கும். ஆக்‌சுவலாக ‘நானும் ரவுடிதான்’ படத்தில் வேறொருவர்தான் நடிக்கவிருந்தார். அப்புறம்தான் நான் வந்தேன். எனக்கு முன்பே நயன்தாரா கமிட் ஆகி இருந்தார். என் சினிமா வாழ்க்கையில் கலர்ஃபுல் படம் இது்!’’ என்கிறார் விஜய்சேதுபதி்.