நியூஸ் வே



‘ரெண்டு ராஜா’வும் கைவிட்டுவிட்டதால் இனி ‘வை ராஜா வை’க்குப் பிறகே புதிய படங்கள் கமிட் பண்ணும் ஐடியாவில் இருக்கிறாராம் ப்ரியா ஆனந்த். ஆன்மிக ஆர்வம் காரணமாக கையில் ‘அஹம்’ என டாட்டூ வரைந்திருக்கிறார் ப்ரியா.

லண்டன் போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்து விட்டு வந்திருக்கிறார் சிம்பு. 2015ம் ஆண்டை அவருக்கான வருடமாக மாற்றும் முயற்சி யில் தீவிரமாக இறங்கிவிட்டார்.

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் டைட்டிலை, பொங்கல் ஸ்பெஷலாக அறிவிக்கப் போகிறார்களாம். முன்பெல்லாம் ஷூட்டிங் பிரேக்கில் கேரவன் சென்று ரெஸ்ட்
எடுக்கும் விஜய், இப்போது ஸ்பாட்டிலேயே அமர்ந்து, ‘ஐபாட்டில்’ கரைகிறார். இடையிடையே ட்விட்டர் பக்கமும் விசிட் அடிக்கிறார்.

ஐஸ்வர்யா ராயை
வைத்து
ராஜீவ் மேனன்
எடுக்க
நினைத்
திருக்கும்
இசைப்
படத்திற்கு
இன்னும்
மிசஸ் அபிஷேக்
ஓகே சொல்லவில்லை;

‘முடியாது’ எனவும் கை விரிக்க
வில்லை. இந்தப்
படத்திற்கு
சுதா ரகுநாதன் சர்ப்ரைஸ்
இசையமைப்பாளர்
ஆகிறார்.
எப்படியும்
ஐஸ்வர்யா
ஓகே சொல்லி
விடுவார்
என
எதிர்பார்க்
கிறார் ராஜீவ்.

‘ஷமிதாப்’ ஷூட்டிங் பின்லாந்து நாட்டில் நடந்தபோது அங்கே கடும் பனிப்பொழிவு. தமிழில் ‘மாரி’ ஷூட்டிங்கில் காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டு, கால்வலி
யுடனே பின்லாந்து சென்ற தனுஷுக்கு அங்கே பனிப்பொழிவு மேலும் சிரமத்தைக் கொடுத்திருக்கிறது. ஆனால் வலியைக் காட்டிக்கொள்ளாமல் நடித்துக் கொடுத்திருக்கிறார் தனுஷ்.

‘ஐ’ படத்திற்கான ஆங்கில சப் டைட்டிலை மதன் கார்க்கி மனைவி நந்தினி ரெடி செய்திருக்கிறார்.

‘நண்பேன்டா’ படத்தை எந்த அவசரமும், மோதலும் இல்லாமல் 2015 ஏப்ரலில் வெளியிட முடிவு செய்துவிட்டார்கள். அதனால் நிதானமாக ஃபைனல் வேலைகள் நடந்து வருகின்றன.

மகிழ்திருமேனிக்கு ‘மீகாமனு’க்குப் பிறகு மறுபடியும் கால்ஷீட் கொடுத்துவிட்டார் ஆர்யா. இதில் முதல் தடவையாக டபுள் ரோல் பண்ணுகிறார் ஆர்யா. சின்னதாக ஒன்லைன் சொன்னதற்கே சந்தோஷப்பட்டு கால்ஷீட் கொடுத்துவிட்டதால் நெகிழ்ந்திருக்கிறார் திருமேனி.

கவுண்டமணி இப்போது இரண்டு படங்களில் ஹீரோவாக நடிக்கிறார். பல சேனல்களும் பத்திரிகைகளும் இந்தப் படங்களின் இயக்குநர்களிடம் ‘கவுண்டமணி பேட்டி வேண்டும்’ என கேட்கின்றன. விஷயத்தை அவர்கள் கவுண்டமணி காதில் போட, ‘‘புரொமோஷனெல்லாம் படம் ரிலீஸ் ஆகி நூறாவது நாள் விழாவில பார்த்துக்கலாம்பா’’ என கவுண்டமணி தன் பாணியில் சொல்லிவிட்டார். இதில் கிறுகிறுத்துப் போயிருக்கிறார்கள் அறிமுக இயக்குநர்கள்.

‘தாரை தப்பட்டை’ படத்திற்காக மீசை, தாடியெல்லாம் எடுத்துவிட்டு சசிகுமாருக்கு ஒரு தோற்றம் பார்த்தார் பாலா. அது சரிப்பட்டு வரவில்லை. எனவே ‘போராளி’ கெட்டப்பில் முடி வளர்த்து, வெளியே எங்கும் சென்று வரவும் அனுமதி கொடுத்துவிட்டார் பாலா.

கார்த்தி நடிக்கிற அடுத்த படம் ‘காஷ்மோரா’. இதில் வடிவேலுவை புக் செய்ய அணுகினார்கள். அவர் கேட்ட தொகையில் மயக்கமாகி, ‘‘வந்து கதை சொல்றோம்’’ என்று திரும்பி விட்டார்கள். இப்போது அந்த இடத்திற்கு அனேகமாக சூரிதானாம். ‘பரோட்டா’வுக்கு வேலை வந்திடுச்சு!

‘‘கிளாமரும் பண்ணுது... ஆக்டிங்கும் பண்ணுது’’ என கோடம்பாக்கத்தில் குட் நேம் சம்பாதித்துவிட்டார் ‘கப்பல்’ சோனம் பஜ்வா. பஞ்சாபியில் இரண்டு படங்கள் நடித்திருக்கும் சோனம், தமிழில் தொடர்ந்து நடிக்க விரும்புகிறார்.

த்ரிஷா, எமி ஜாக்ஸன், சன்னி லியோன், லாரா தத்தா லிஸ்ட்டில் இனி காஜல் அகர்வாலையும் சேர்த்துக்கொள்ளலாம். ‘தாராள’ லிஸ்ட்டா? என கேட்காதீர்கள். விலங்கு வதைக்கு எதிரான ‘பீட்டா’ அமைப்பின் லேட்டஸ்ட் செலிப்ரிட்டி, காஜல். ‘‘அனிமல்ஸ் மீது நான் அவ்வளவு அக்கறையான பொண்ணு இல்ல. ஆனா, விலங்கு களை வதைக்கறது பத்தி இவங்க சொன்ன தகவல்கள் கேட்டு ஷாக் ஆனேன். ஏதாவது ஹெல்ப் பண்ண முடிவு செய்தேன்’’ என ஃபீலிங்காக சொல்கிறார் காஜல்.

அனுமதியின்றி துப்பாக்கி வைத்திருந்த வழக்கில் சிறைப்பட்டிருக்கும் சஞ்சய் தத், இரண்டு வார பரோலில் வெளியில் வந்திருக்கிறார். அவருக்கு மட்டும் ஏன் அடிக்கடி பரோல் தரப்படுகிறது என மாநில அரசு விசாரணை நடத்துவதாக செய்தி வெளியானதால், வீட்டை விட்டு எங்கும் வெளியில் போகவில்லை அவர். நெருங்கிய நண்பர்களுக்கு மட்டுமே அவரைச் சந்திக்க அனுமதி கிடைக்கிறது.

சூர்யா- கார்த்தி மாதிரி, அமலா- நாகார்ஜுன் வீட்டிலும் இப்போது இரண்டு ஹீரோக்கள். நாக சைதன்யா ஏற்கனவே ஹீரோ. அடுத்த மகன் அகில் லேட்டஸ்ட் ஹீரோ. சமீபத்தில் ஆர்யாவுடன் குளிர்பான விளம்பரத்தில் நடித்திருந்தார் அகில். ஹீரோவாக அவர் அறிமுகமாகும் படத்தின் ஷூட்டிங்கை ஐதராபாத்தில் அமலா கிளாப் அடித்து துவக்க, ஃபேமிலி மெம்பர்ஸ் அத்தனை பேரும் மகிழ்ச்சியோடு ஆஜர்!

‘தமிழா... மலையாளமா..?’ என குழப்பத்தில் இருக்கும் இனியா, இப்போது அந்த இரண்டு மொழிகளுக்கும் சேர்த்து ஒரு திகில் படத்தில் நடிக்கிறார். தவிர, ‘கரையோரம்’ என்ற படமும் கைவசம் இருக்கிறது. அது கன்னடத்திலும் ரிலீஸ் ஆவதால், மூன்று லாங்குவேஜிலும் கலக்கும் நம்பிக்கையில் இருக்கிறார் இனியா.

இந்தியில் ‘ஏபிசிடி 2’ படத்தில் நடித்து வருகிறார் பிரபுதேவா. இந்தப் படத்தின் ஷூட்டிங் அமெரிக்காவின் லாஸ்வேகாஸில் நடந்தது.சென்னை யில் அரையாண்டுத் தேர்வு லீவில் இருந்த அவரது குழந்தைகளை கிளம்பி வரச் சொல்லி, அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து அசத்தி விட்டார் பிரபுதேவா.