நியூஸ் வே



*சினிமா பட்டறையை நடத்தினார் மறைந்த பாலு மகேந்திரா. அவரிடம் பயின்ற மாணவர்கள் இப்போது திக்கற்று நிற்கிறார்கள். அவர்களுக்கு தலைமையேற்று சொல்லித் தர யார் வருவார்கள் என குழப்பம் நிலவியது. இப்போது டைரக்டர்கள் ராம், வெற்றிமாறன் இருவரும் மாணவர்களை பிரித்துக் கொண்டு பயிற்சி அளிக்கிறார்கள். அடடா, உண்மையான சிஷ்யர்கள் இவர்கள்தானா!

*‘ஒந்நும் மிண்டாதே’ மலையாளப் படத்தில் நல்ல பெயரைத் தட்டிச் சென்ற சுகீத் இயக்கும் அடுத்த மலையாளப் படத்தில் அமலாபால்தான் நாயகி. ப்ருத்விராஜ் நாயகனாக நடிக்கிறார்.

*குறளரசன் பாடல்களை கேட்ட பல டைரக்டர்கள், தங்கள் படங்களுக்கு இசையமைக்க கேட்டிருக்கிறார்கள். ‘‘அண்ணன் படம் வெளிவந்து, என் பாடல்கள் புகழ்பெற்ற பிறகுதான் அடுத்த படம் கையெழுத்து போடுவேன்’’ என சொல்லிவிட்டார். அண்ணனைப் போல கண்ணில் படுவதற்கு பிரச்னையில்லாமல் சுலபமாக அவரைப் பார்க்க முடிகிறதாம். வேலையில் படு குஷியாக இருக்கிறார் குறள்.

*இப்பொழுதெல்லாம் துளி மேக்கப் இல்லாமல் வெளியில் வருகிறார் த்ரிஷா. சமீபத்தில் அவரைத் தொடர்ந்து பார்த்தவர்கள் அதிசயிக்கிறார்கள். அவருடைய ட்விட்டர் பக்கத்திலும் அது மாதிரியான படங்கலேயே போஸ்ட் செய்கிறார்.

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கி வரும் ‘வை ராஜா வை’ படத்தில் செமத்தியான வில்லி வேடம் ஒன்று இருக்கிறது. டாப் டென் வட்டத்துக்குள் இருக்கும் பல நடிகைகள், ‘‘வில்லி வேடமா... வேண்டாம்’’ என ஒதுங்கிக் கொள்ள, ‘‘நான் ரெடி’’ என களமிறங்கி கலக்கிக் கொண்டிருக்கிறார் டாப்ஸி.

*‘மரியாதை ராமண்ணா’தெலுங்குப் படத்தைத்தான் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என தமிழில் எடுக்கிறார் சந்தானம். ஏற்கனவே அவர் பார்த்துப் பார்த்துப் பழகி விட்ட படம் என்பதால், சந்தானமே டைரக்ஷனில் பல விஷயங்களை முடிவு செய்கிறார். இதற்கு சம்மதிக்காத காரணத்தால்தான் இயக்குநர்
கண்ணன் இதிலிருந்து விலகிக்கொண்டார்.

*சிவகார்த்திகேயனையும், சந்தானத்தையும் சேர்த்து நடிக்க வைக்க தயாரிப்பாளர்கள் முயற்சி செய்கிறார்கள். இரண்டு பேருமே அதற்கு பிடி கொடுக்காமல் தவிர்த்து வருகிறார்கள். விட்ட குறை, தொட்ட குறையாக என்னதான் பிரச்னையோ தெரியவில்லையே!

*தமிழ்நாடு
கிரிக்கெட் அணியில்
கலக்கிவந்த லக்ஷ்மிப்ரியா
இப்போது கதாநாயகியாகி
விட்டார். ‘கள்ளப்படம்’ படத்தில்
அரிதாரம் பூசியிருப்பவர் ஏற்கனவே மேடை நாடகங்களிலும் நடித்திருக்கிறராம். ‘‘சினிமாவில் கனவுக்கன்னி ஆகும் ஆசையெல்லாம் எனக்கில்லை’’ என்பவருக்கு நந்திதா தாஸ் மாதிரி பெயர் வாங்குவதே லட்சியமாம்.

தயுவன்ஷங்கர் ராஜா வேலை செய்யும் உற்சாகத்திலிருந்து குறைந்திருக்கிறார். ‘வடகறி’ படத்திற்கு நேரம் ஒதுக்க முடியாமல் இருந்ததால், அந்தப் படத்திற்கு புது இசையமைப்பாளர்களாக விவேக் சிவா, மெர்வின் இருவர் பணிபுரிகிறார்கள். அப்பா 1000வது படத்திற்கு வந்திட்டார். முழிச்சுக்கங்க யுவன்!

*வெளியில் துளியும் செய்தி கசியாமல் விஜய்யை இயக்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இருந்தும் படத்தின் தலைப்பு லீக்காகிவிட்டது. ‘சக்தி’ என்ற டைட்டிலை பதிவு செய்து விட்டதாக சொல்லப்படுகிறது. இதில் விஜய்க்கு நல்லவன், கெட்டவன் என இரட்டை வேடமாம்.

நிறைய நாட்கள் கால்ஷீட் கொடுத்து, ‘‘அவசரப்படாமல் எடுங்கள்’’ என சொல்லி வருகிறார் சூர்யா. பாடல் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார். ஒவ்வொரு காட்சியமைப்பிலும் அக்கறை எடுக்கிறார். ‘அஞ்சான்’ படம் தன்னைப் பெரிய அளவில் கொண்டு போய் சேர்க்கும் என்பது அவரின் நம்பிக்கை.

*ஆசை ஆசையாக ஒரு கதை செய்துவிட்டு, அதில் கார்த்தியை ஹீரோவாக்க ரெடியாக இருந்தார் டைரக்டர் ஹரி. இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை, அந்தப் படம் ஒர்க்கவுட் ஆகவில்லை. எப்போதும் டிமாண்டில் இருக்கும் ஹரியே கொஞ்சம் வீட்டில் இருக்கும்படி ஆகிவிட்டது. அந்த நேரத்தையும் ஸ்கிரிப்ட்டில் ஃபைன் ட்யூன் செய்ய பயன்படுத்திய ஹரி, இந்தத் தடவை ஆவேசமாக விஷாலுடன் இறங்குகிறார். காரணம் தெரிகிறதா?

முதல் படத்திலிருந்து லட்சுமி மேனனுக்குள் மீடியா மீது ஒரு வருத்தம் இருக்கிறது. +1 படிக்கும் வயது என்றாலும், ‘ரொம்ப பெரிய பொண்ணா தெரியுறார்’ என்று விமர்சிப்பதை வெறுக்கிறாராம் லட்சுமி.

*மறுபடியும் சிங்கப்பூர் போய் ஒருமுறை முழுமையாக ரீ செக்கப் செய்துவிட்டுத்தான், அதுவும் டாக்டர்கள் ஓகே சொன்னால்தான் மறுபடியும் படங்களில் நடிக்க ஒப்புக்கொள்வார் ரஜினி. அதிலும் பிரமாண்டமான ஃபைட் சீன்கள், வெளிப்புறப் படப்பிடிப்பை தவிர்க்கச் சொல்லி இருக்கிறாராம். நீங்க சும்மா வந்துட்டுப் போங்க பாஸ்!

*‘குக்கூ’ ரிலீசுக்காக காத்திருந்த ‘அட்டக்கத்தி’ தினேஷுக்கு கோடிகளில் சம்பளம் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். பணத்துக்கு ஆசைப்பட்டு எதிர்காலத்தை பஞ்சராக்கிக் கொள்ளாமல், ‘‘நல்ல கதை இருந்தா மட்டும் வாங்க... சம்பளத்தை அப்புறம் பேசிக்கலாம்’’ என பம்முகிறாராம் ஹீரோ.

*யாருமே செய்யாதது... அதாவது கமலுக்குப் பிறகு யாருமே செய்யாதது... மலையாள நடிகை ரீமா கல்லிங்கல் தன் உடல் உறுப்புக்களை தன் மறைவிற்கு பிறகு தானம் செய்ய மனப்பூர்வமாக எழுதிக் கொடுத்திருக்கிறார். வெல்கம் டூ ரீமா! நல்ல விஷயம்.

*மிகவும் நொந்து போயிருந்த ஹன்சிகா, ‘மீகாமன்’ ஷூட்டிங்கிற்காக கோவா போயிருக்கிறார். வரும்போது உற்சாகமாக வருவார் என எதிர்பார்க்கிறார்கள். இரண்டு பாடல்களை அங்கு ஹன்சிகா, ஆர்யா ஜோடியோடு படம் பிடிப்பதுதான் காரணம். ஆர்யா எப்படியும் ஜோக்குகளை அள்ளி வீசி, ஹன்சிகாவை நல்ல மனநிலைக்குத் திருப்பி விடுவார். ஆர்யாவா, சும்மாவா!