நியூஸ் வே





ஷ்தெலுங்கிலும் இந்தியிலும் அடுத்தடுத்து படங்கள்... படங்களுக்கான புரொமோஷன், விளம்பரப் படங்கள் என ஓய்வுக்கே நேரமில்லாமல் ஸ்ருதி ஹாசன் ஓடிக் கொண்டிருப்பதில் அதிகம் கவலைப்படுவது அவரது அம்மா சரிகாதான்! ‘‘ஒரு படம் முடிந்ததும் பத்து நாட்களாவது ஓய்வு எடுத்துக் கொண்டு என்னோடு இரு’’ என அன்புக் கட்டளை போட்டிருக்கிறார்.

ஷ்சத்தம் போடாமல் 45 நாட்களில் அருள்நிதியை வைத்து எடுத்த படத்தை முடித்துவிட்டார் சிம்புதேவன். ‘ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்’ என வித்தியாசமாகப் பெயரிட்டு இருக்கிறார் சிம்பு.

ஷ்மோகன்லால் தன் மகனை அறிமுகப்படுத்துகிறார். எந்த டைரக்டரிடம் நடிக்க வைக்கலாம் என
மம்முட்டியிடம் ஆலோசனை கேட்டு இருக்கிறார். இங்கே
எம்ஜிஆர், சிவாஜி மாதிரி அங்கே காணப்பட்டாலும் அவர்களிடையே இருப்பது விரோதமில்லாத அன்பு.


ஷ்‘ரமணா’ இந்தி ரீமேக்கில் அக்ஷய்குமார் ஜோடியாக நடிக்க மறுத்துவிட்டார். கால்ஷீட் இல்லை என்று சொன்னவர் ஒரு மலையாளப் படத்தை மட்டும் ஒப்புக்கொண்டார் என அமலா பால் பற்றி ஆயிரம் செய்திகள். ‘‘எல்லாமே பொய். ஜிம்பாப்வே கிரிக்கெட் உலகக் கோப்பையை ஜெயித்துவிட்டது என்று சொல்வது போன்ற ஆதாரம் இல்லாத வதந்திகள் இவை’’ என்கிறார் அமலா.

ஷ்மாலை நேரங்களில் குட்டி குட்டி சைஸில் சூடான மசால்வடை சாப்பிடுவது என்றால் வடிவேலுவுக்கு கொள்ளைப் பிரியமாம். மசால்வடை போடும் மாஸ்டர் ஆப்சென்ட் ஆகிவிட்டால் அப்செட் ஆகி விடுவாராம் வைகைப்புயல்.

ஷ்‘‘அடுத்து எங்கள் படத்தில் நடியுங்கள்’’ என பலபேர்
இந்தியில் கேட்டுக் கொண்டிருக்க, தொடர்ந்து தமிழ்ப் படங்களில் நடிக்கிறார் தனுஷ். ‘எனக்கென்று தனித்த ஸ்கிரிப்ட் அமைந்தால் மட்டுமே இந்திப்படம்’ என்பதில் உறுதியாக நிற்கிறார் அவர். பணத்திற்கு ஆசைப்படாமல் இருக்கும் தனுஷைப் பற்றி பத்திரிகையில் பேட்டி கொடுக்கிறார்கள் புரொட்யூசர்கள்.

ஷ்‘காதலில் சொதப்புவது எப்படி?’ இயக்குனர் பாலாஜி அடுத்த படத்திற்குத் தயாராகி விட்டார். மம்முட்டியின் மகன் சல்மான்-நஸ்ரியாதான் ஹீரோ-ஹீரோயின். தலைப்பு இன்னும் தயாராகவில்லை...

ஷ்தெலுங்கில் தனக்குப் பெருகி வரும் ஆதரவைப் பார்த்துவிட்டு, நேரடி தெலுங்குப்படத்தில் நடிக்க முடிவு செய்திருக்கிறார் ஆர்யா. அதற்காக முக்கியமான தெலுங்கு டைரக்டர்களிடம் கதை கேட்க ஆரம்பித்திருக்கிறார். ஆர்யாவின் தெலுங்கு என்ட்ரி மிகப்பெரிய பட்ஜெட்டில் அமையும் என்கிறார்கள்.

ஷ்ஹன்சிகாவின் அம்மா சிம்பு - ஹன்சிகா கல்யாணத்தை ஐந்து வருடத்திற்கு தள்ளிப் போட ஆசைப்படுகிறார். சிம்புவோ ஒரு வருடத்தில் நடக்க வேண்டும் என நினைக்கிறார். தங்கை இலக்கியா திருமணத்தோடு இந்தத் திருமணத்தையும் சேர்த்தே முடித்துவிடலாம் என நினைக்கிறார் டி.ஆர். ஹன்சிகா மனதிலி ருப்பதுதான் தெரியவில்லை!

சைலன்ஸ்!!
மேனன் இயக்குனருடன் முட்டிக்கொண்ட மியூசிக் டைரக்டர் மிகப்பெரிய சொகுசு பங்களா ஒன்றைக் கட்டி இருக்கிறார். பங்களா முழுக்க முழுக்க பளிங்கு போல வெள்ளை நிறத்தினால் ஆனது. ‘‘ஆனால் அவர் மனசு வெள்ளையா இல்லையே’’ என வருந்துகிறார்கள் மியூசிக்குக்கு நெருக்க
மானவர்கள். வீட்டை அழுக் காக்கி விடுவார்கள் என்று அவரது பெற்றோரை வாடகை வீட்டில் வைத்திருக்கிறாராம்.
குறிப்பிட்ட படங்களுக்கு ஷார்ப் டைமுக்கு வரும் வாசனை காமெடி நடிகர், இப்போதெல்லாம் இரண்டாவது கால்ஷீட்டுக்கு பயங்கரமாக சொதப்புகிறாராம். ஆனால் தன்னை அறிமுகம் செய்த நடிகர் படத்துக்கு மட்டும் சரியான டயத்தில் வருகிறாராம். இதனால் மற்ற ஹீரோக்கள் காண்டு ஆகிறார்கள். இப்போது அவர் படங்களையும் குறைத்துக்கொள்ள ஆரம்பித்திருப்பது பலருக்கும் சந்தேகத்தைக் கிளப்புகிறது!