சிக்ஸ் பேக் ஸ்டன்ட்!





ஷீரடி பாபாவின் புனித சரிதம் படிக்கப் படிக்க மன அமைதியும், மகிழ்ச்சியும் கிடைக்கிறது. குங்குமம் இதழை வாங்கியவுடன் புத்தகத்தை வணங்கிவிட்டு தொடரைப் படிக்கிறேன்.
- மலர்விழி பிரகாஷ், மயிலாடுதுறை.

இல்லாத இடுப்பழகி இலியானா ரமணா ரீ-மேக்கில் இல்லாதது பாலிவுட்டுக்கே பலத்த இழப்பு. அட, போட்டோவுலயே இப்படி ‘கண் மூடித்தனமா’ இருந்தா எப்படி இலியானா? கண்ணைத் திறந்தா கதவும் திறக்கும்!
- எம்.மிக்கேல்ராஜ், விருதுநகர்.

சனி பகவான் பற்றி இத்தனை விளக்கமாக சொல்லிய முனைவர் கே.பி.வித்யாதரனின் கட்டுரை முடிவுப் பகுதியாக இருந்தாலும் முக்கியமான பகுதியாக இருந்தது. சூரியன் பதிப்பகம் மூலம் ‘பிரச்னை தீர்க்கும் திருத்தலங்கள்’ தனிப்புத்தகத்தைப் புரட்ட ஆவலோடு உள்ளேன்!
- சிம்மவாஹினி, சென்னை-39; கன்யாரி, நாகர்கோவில்.

‘நானும் சில்க் படம் எடுக்கிறேன்’ - வேலு பிரபாகரனின் பேட்டி, படு பரபரப்பு. அவர் சொல்வதைப் பார்த்தால், சில்க்கின் மரணம் திகில் கதைகளையே மிஞ்சி விடும் போலிருக்கிறதே!
- ப.மூர்த்தி, பெங்களூரு-97

சொந்த வீட்டுக் கனவோடு, ரியல் எஸ்டேட் முதலைகளின் வாயில் வலது காலை எடுத்து வைத்து விடுகிறார்கள் நடுத்தர வர்க்கத்தினர். அவர்களைப் பாதுகாக்கவேனும் மத்திய அரசின் ஒழுங்குமுறை ஆணையம் அவசியம்... அவசரம்!
- எஸ்.கோபாலன், நங்கநல்லூர்.

பாம்பென்றால் படையும் நடுங்கும்... மல்லிகாவைக் கண்டால் பாம்பும் நடுங்கும். ஒரு படைக்குச் சமமான இந்த மல்லிகாவை பாம்பு ஆராய்ச்சிக்கு அரசு பயன்படுத்திக்கொள்ளலாமே?
- எஸ்.பிரசன்னகுமார், வேலூர்; சுகந்தாராம், சென்னை-59; சக்தி இளங்கோ, தஞ்சை.

ஐ.பி.எல் அணிகளின் எதிர்காலம் குறித்து கோழியூர் கோயிந்த சாமியின் பலன்கள் துல்லியமான கணிப்பு தலைவா! இதே ஜோரில் மனிதர் எங்கேயாவது ரூம் போட்டு ஜோசியம் பார்க்கத் தொடங்கினால், காசு கொட்டும் என்பது நிச்சயம்!
- எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.

கேரக்டரை உணர்ந்து, உள்வாங்கி நடிப்பது ஒரு ரகம்; அனுபவத்தைக் கொண்டு நடிப்பது இரண்டாவது ரகம். காதல் தோல்வி தந்த அனுபவமே நயன்தாராவின் டான்ஸ் ஜொலிக்கக் காரணம்!
- ஸாதியா அர்ஷத், குடியாத்தம்.

‘கோச்சடையான்’ ரஜினியின் சிக்ஸ் பேக் ஸ்டன்ட்டைப் பார்க்கவும் சொந்தக் குரல் பாடலைக் கேட்கவும் இப்போதே மனம் துடிக்கிறது. எதிர்பார்ப்பை எகிற வச்சுட்டீங்க பாஸ்!
-சி.பா.சந்தானகோபாலகிருஷ்ணன், மஞ்சக்குப்பம்.

சீனாவின் எல்லை மீறிய தொல்லையையும், அந்த டிராகன் தேசத்தால் போர் மூளும் அபாயம் உண்டு என்பதையும் உணர்த்திய கட்டுரை, எங்களை அதிர்ச்சியில் உறைய வைத்து விட்டது!
- சி.கார்த்திகேயன், சாத்தூர்.