9 கோள்களும் ரூ.5 ஆயிரம் கோடியும்!



-செய்தி பாத்தியாடா..?
- என்னவாம்..?
- சிலி நாட்டுல நம்ம நாட்டு மதிப்புல சுமாரா 5000 கோடி ரூபா செலவுல டெலஸ்கோப் இன்ஸ்டால் பண்றாங்களாம்...

- அப்படியா..?
- ஆமா... 14 ஐரோப்பிய நாடுகள் சேர்ந்து இத நிறுவுதாம்...
- அப்புறம்..?
- இதுக்கு மொத்தம் 5000 கோடி ரூபா செலவாகுமாம்...!
- அம்மாடியோவ்... அப்புறம்..?
- இது ஜெர்மனில இருக்கிற ஹப்பிள் டெலஸ்க்கோப்ப விட நவீனமா இருக்குமாம்...

- ஓ...
- அப்புறம் இதுக்கு அமைக்கிற கோபுரம் 3000 மீட்டர் உயரமிருக்குமாம்...
- அதாவது திருவான்மியூர் பஸ் ஸ்டாண்டுல இருந்து அடையார் பஸ் ஸ்டாண்ட் தூர உயரத்துக்கு கோபுரம் அமைக்கிறாங்க. அப்படித்தானே..?
- ஆமாம்... அப்புறம் இத கட்டுறதுக்கு  80000 டன் உலோகத்த யூஸ் பண்ணப் போறாங்களாம்...

- அடேங்கப்பா...
- இத 2026க்குள்ள கட்டி முடிச்சிடுவாங்களாம்... 
- அவ்ளோ நாள் ஆகுமா... சரி இதெல்லாம் எதுக்காம்..?
- இதென்னடா கேள்வி... இந்த ஸ்கோப் மூலமா சூரிய குடும்பத்தின் ஒன்பது கோள்களையும் தெளிவா பாக்கலாமாம்...

- என்ன..?
- இந்த ஸ்கோப் மூலமா சூரிய குடும்பத்தின் ஒன்பது கோள்களையும் தெளிவா பாக்கலாமாம்...
- முட்டாப் பயலுக...

என்னடா இப்படி சொல்லிட்ட..?
- பின்ன... இதுக்கு ஏன் 5000 கோடி ரூபாவ செலவ பண்ணிட்டு... பேசாம ஒரு டிக்கெட்ட போட்டு பிள்ளையார்பட்டிக்கு வரவேண்டியதுதானே...
- பிள்ளையார்பட்டிக்கு போயி..?
- அதான் பாடி வச்சிருக்காங்களே... ‘ஒன்பது கோளையும் ஒன்றாய் காண பிள்ளையார்பட்டி வரவேண்டும்’னு...
- .......
- என்னடா மொறைக்கிற..?
- ஒண்ணுமில்ல...
- டேய்... எதுக்குடா செருப்பை எடுத்து உன்னை நீயே அடிச்சுக்கற..? டேய்... டேய்...l

பொம்மையா முருகன்