படம் பார்க்கிறப்ப இது ஏன் தோணலை..?



முத்துப்பாண்டியைப் பார்த்தா ஊரே நடுங்கும். ஆனா, வேலு பக்கத்து ஏரியாவுக்கு ஜாகிங் போனாலே அந்த ஏரியாக்காரனுங்க அடிக்க வருவானுங்க.  
முத்துப் பாண்டி ஒரு பெரிய தொழிலதிபர.வேலு அரியர்ஸ் கூட கிளியர் பண்ணாம வேலை வெட்டி இல்லாம திரியுற ஆள். 

முத்துப்பாண்டி போலீஸையே புரட்டி எடுக்கிற ஆள்.
வேலு போலீஸைப் பார்த்தாலே பயத்துல ஓடுற ஆள். 

முத்துப்பாண்டியைக் கல்யாணம் பண்ணினா தனலட்சுமி வேலைக்கே போகாம மகாராணி மாதிரி வாழலாம்.வேலுவைக் கல்யாணம் பண்ணினா வேலைக்குப் போய் அவனுக்கும் உழைச்சுக் கொடுத்து, வீட்டு வேலைகளையும் பார்க்கணும். 
வேலுவால, தான் காதலிக்கிற தனலட்சுமிக்குஒரு பிரச்னைனு வந்தப்ப தன்மானத்தை விட்டு தன் கழுத்துல துண்டைப் போட்டு வேலு தரதரனு இழுத்துட்டு போறவரைக்கும் முத்துப்பாண்டி பொறுத்துக்கிட்டான். வேலு, தனக்கு முத்துப்பாண்டி அடியாட்களால ஒரு பிரச்னைனு வந்தப்ப தனலட்சுமி கழுத்துல கத்தியை வைச்சான்.

இப்படி உண்மையான காதல் இருக்கற முத்துப்பாண்டிக்கு ஆரம்பத்துலயே ஓகே சொல்லியிருந்தா தனலட்சுமி, தன் மூத்த அண்ணனை தொழிலதிபராக்கி, ரெண்டாவது அண்ணனுக்கு ஒரு ஹாஸ்பிடலும் கட்டிக் கொடுத்திருக்கலாம்.
 
முத்துப்பாண்டிக்கு வயசு அதிகமாக இருக்கறதால அவன் முன்னாடியே மண்டையைப் போட்டுடுவான். மொத்த சொத்தையும் ஆண்டு அனுபவிக்கலாம்.

ஆனா, லூசு தனலட்சுமிகளுக்கு முத்துப்பாண்டிகளால் கிடைக்கும் நன்மைகள் புரியறதில்ல. வேலை வெட்டிக்குப் போகாத வேலுகளைக் கல்யாணம் பண்ணிட்டு காலம் முழுக்க கண்ணீரும் கம்பலையுமா அலையறாங்க.கேட்டா அதுக்குப் பேரு காதலாம்!

முகமூடி