Data corner
*2016 - 2019 இடையே இந்தியாவில் அகதிகளின் எண்ணிக்கை 17% அதிகரித்திருப்பதாக ஐநாவின் புள்ளிவிவரம் காட்டுகிறது. *கடந்த ஆண்டு இங்கிலாந்தில் கிட்டத்தட்ட 19,000 குழந்தைகள் பாலியல் சுரண்டலுக்கு ஆளாகியுள்ளனர்.
*குஜராத்தின் ராஜ்கோட், அகமதாபாத்தில் உள்ள 2 அரசு மருத்துவமனைகளில் கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் 219 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
*2018 - 19ம் ஆண்டில் மட்டும் இந்தியா 1.25 கோடி டன் அரிசியை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது.
*இந்தியாவில் உள்ள மினரல் வாட்டர் ஆலைகளில், 18% ஆலைகள் தமிழகத்தில்தான் உள்ளன.
*48 % இந்திய பெண்கள் குடும்பச் சூழ்நிலை காரணமாக பாதியிலேயே வேலையைவிட்டு விலகுகின்றனர்.
*இந்தியாவில் சாலையில் உயிரிழப்போரில் 15% பேர் பாதசாரிகள்; 2.4% பேர் சைக்கிளில் செல்பவர்கள்.
*அரசு அனுமதி அளித்த 6,881 நிலத்தடி நீர் உறிஞ்சி எடுக்கும் மையங்களில், 1,186 இடங்களில் அளவுக்கு அதிகமான தண்ணீர் எடுக்கப்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளன. இதில் 462 இடங்கள் தமிழகத்தில் உள்ளவை.
அன்னம் அரசு
|