சுஜித்



அநீதியால் இறக்கும் குழந்தைகள்
உலகின் மனசாட்சியில் இன்னொரு ஆணியை அடிக்கிறார்கள்
ஹிரோஷிமாவில் பற்றி எரிந்தபடி ஓடிய சிறுமி
பிணமாகக் கரையொதுங்கிய ஓர் அகதிக் குழந்தை
ஆழ்துளைக் கிணற்றிலிருந்து சவமாக வெளியேறும் ஒரு சிறுவன்
ஒவ்வொருமுறையும் சிறிய மரணங்களில் பெரிய இருள் சூழ்கிறது
அச்சத்துடன் இறுக அணைக்கிறோம் நம் குழந்தைகளை

மனுஷ்ய புத்திரன்