மகாத்மாவின் ஹெல்த் ரிப்போர்ட்!



காந்தியின் ஹெல்த் எப்படி இருந்தது என்பதைப் பற்றிய இந்திய மெடிக்கல் கவுன்சிலின் அறிக்கை ஒன்று இப்போது முதல் முறையாக பிரசுரம் கண்டுள்ளது. அதன் சுவாரஸ்யமான சில துளிகள் இங்கே…

*காந்தி மிகத் தீவிரமான நேச்சுரோபதி. அதாவது இயற்கை வைத்திய ஆர்வலர் என்கிறார் மருத்துவர் வி.கே.பால். 1939ம் ஆண்டு - அதாவது இறப்பதற்கு ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு - எடுத்த மருத்துவப் பரிசோதனையின்படி 46.7 கிலோ இருந்திருக்கிறார்.

*காந்தி என்றதும் கையில் தடியுடன் நூறு பேர் பின்தொடர குடுகுடுவென்று ஓடும் ஒரு கறுப்பு - வெள்ளை வீடியோதான் நமக்கு நினைவுக்கு வரும். இப்படி ஓடி ஓடி அவர் இந்தியா முழுதும் 79 ஆயிரம் கிலோமீட்டர்கள் சுற்றியுள்ளாராம். இது, உலகையே இரண்டு முறை சுற்றி
வருவதற்குச் சமம்!

*ஐந்தரை அடி உயரம் இருந்த மகாத்மாவின் பி.எம்.ஐ 17.1 ஆக இருந்திருக்கிறது. இப்போதைய அளவுகோலின்படி இது போதாமையான ஒல்லியான உடல்வாகு.

*ஓயாத அலைச்சல், அரசியல் அழுத்தங்கள் ஆகியவையே அகிம்சைக்கு பி.பியை எகிற வைத்திருக்க வேண்டும் என்கிறார்கள்
மருத்துவர்கள்.

*d1939 ம் ஆண்டின் ரத்தப் பரிசோதனைகள்படி ரத்தத்தில் சர்க்கரை அளவும் சற்று குறைவாக இருந்துள்ளது.

*சமச்சீரான உணவுகள், இயற்கையான சிகிச்சைகள், அசாதாரணமான நடை, டீ, காபி, ஆல்கஹால், புகையிலை போன்றவற்றைச் சீண்டாமல் இருந்தது போன்ற ஆரோக்கியமான வாழ்க்கை முறை அவரை முதுமையிலும் ஃபிட்டாக வைத்திருந்திருக்கிறது.

*காந்தியின் இதயம் இந்தியாவுக்காகத் துடித்தது என்று நமக்குத் தெரியும். ஆனால், அது இறக்கும் வரைக்கும் ஆரோக்கியமாகவே
இருந்திருக்கிறது.

*d1927ம் ஆண்டிலேயே அவருக்கு பி.பி அதிகமாக இருந்திருக்கிறது. 1939ல் 220/110 என்ற விகிதத்துக்கு எகிறி
யிருக்கிறது.

*மூன்று முறை அவரை மலேரியா தாக்கியிருக்கிறது. மூலத்துக்கான அறுவை சிகிச்சையும், அப்பெண்டிசைட்டிஸ் அறுவை சிகிச்சையும் செய்திருக்கிறார். திசுக்கள் அழற்சியும் அவரைப் படுத்தியிருக்கின்றன.

*ஆட்டுப்பாலும், நிலக்கடலையும் அவரின் ஃபேவரைட் என்று உலகுக்கே தெரியும். ஆனால், இதனால் அவர் உடலில் கொழுப்புச்சத்து எகிறி மரணம் வரை கூட சென்று வந்திருக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

*தன் வாழ்நாளின் கடைசி நாற்பது வருடங்களில் தினசரி 18 கிலோமீட்டர் நடந்திருக்கிறார் மகாத்மா.

இளங்கோ கிருஷ்ணன்