தேர்தல் 2019-ஆண் குழந்தைக்கு ஜெயலலிதா என்று பெயர் சூட்டிய அமைச்சர்!



திருப்பூர் பாராளுமன்றத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக எம்.எஸ்.எம்.ஆனந்தன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து கோபி ஒன்றியப் பகுதியில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பிரசாரம் செய்தபோதுதான் இந்த சம்பவம் நடந்தது! 
பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் - பிரியா தம்பதியினர் தங்கள் குழந்தைக்கு பெயர் சூட்ட வேண்டும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனைக் கேட்டுக்கொண்டனர். அந்தக் குழந்தை 10 மாதம் ஆன ஆண் குழந்தை!  

இதை கவனிக்காத அமைச்சர், குழந்தைக்கு ‘ஜெயலலிதா’ என்று பெயர் சூட்டினார்!அதிர்ச்சி அடைந்த பெற்றோர், ‘எங்கள் குழந்தை பெண் குழந்தை அல்ல... ஆண் குழந்தை!’ என பரிதாபமாகச் சொன்னார்கள்.

அருகில் இருந்தவர்களும் அமைச்சரிடம் விவரத்தைக் கூற, உடனடியாக சமாளித்துக் கொண்ட கே.ஏ.செங்கோட்டையன், பிரசார வேனை நிறுத்திவிட்டு வாகனத்தில் இருந்து கீழே இறங்கி வந்தார். அவருடன் வேட்பாளர் மற்றும் எம்எல்ஏ ஆகியோரும் வந்தனர். அமைச்சர் குழந்தையை கையில் வாங்கி, ‘ராமச்சந்திரன்’ என்று மீண்டும் பெயர் சூட்டினார்.இதன்பிறகே தம்பதிகள் நிம்மதி அடைந்தனர்!

நெட்டிசன்