தெலங்கானாவின் பார்வை!



தெலங்கானாவில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாநில அரசு செய்யும் பல்வேறு வசதிகள் இந்தியளவில் கவனம் ஈர்த்துள்ளன.

பார்வையற்றோர்களுக்கான EPIC எனும் ப்ரெய்லி புகைப்பட அட்டையை தெலங்கானா அரசு தயாரித்து அசத்தியுள்ளது. “இந்தியாவிலேயே தெலங்கானா அரசு முதல்முறையாக பார்வையற்றோர்களுக்கு ப்ரெய்லி புகைப்பட அட்டைகளைத் தயாரித்து வழங்கவிருக்கிறது.

வாக்களிக்க வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வாகனப்போக்குவரத்து வசதியையும் அரசு அளிக்கவிருக்கிறது” என உற்சாகமாகப் பேசுகிறார் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை கமிஷனரான பி.சைலஜா.

தெலங்கானா மாநிலத்தில் 5 லட்சம் மாற்றுத்திறனாளிகளை அரசு அடையாளம் கண்டு வாக்களிக்கும் பூத்தில் அவர்களுக்கு வீல்சேர் உள்ளிட்ட வசதிகளை வழங்க ஆயத்தமாகியுள்ளது.  

ரோனி