தன்னைத் தானே திருமணம் செய்துகொண்டவர்!



உகாண்டாவை பூர்வீகமாகக் கொண்ட லூலு, ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக மாணவி. வயது 32 ஆனதால் அவரது பெற்றோர் சீக்கிரமாக கல்யாணம் செய்துகொள் என இடைவிடாமல் அட்வைஸ் பொழிந்தனர்.
ஒருகட்டத்தில் அட்வைஸ்களை ‘இனியும் பொறுக்கமுடியாது லூலு’ என கொதித்தெழுந்த மனக்குரலுக்கு செவிசாய்த்தவர் சுபமுகூர்த்தம் பார்த்து கல்யாண கவுன் அணிந்து மோதிரம் மாட்டி தன்னைத்தானே மணம் செய்துகொண்டார்!இப்படி தன்னைத்தானே மணம் செய்யும் பழக்கத்திற்கு சோலோகாமி என்று பெயர்.

கம்பாலாவிலுள்ள க்யூபாசா பாரில் திருமண நிகழ்வை தில்லாக நடத்தி பெற்றோருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார் லூலு. “எனக்கு படிப்புதான் முக்கியம். என் திருமண முடிவை பெற்றோருக்கு புரிய வைப்பேன்...” எனக் கூறிய லூலுவின் சோலோ கல்யாணத்திற்கு பெற்றோர் வரவில்லை!

 ரோனி