சாதியை ஒழிக்க 7 மேரேஜ்!



குஜராத்திலுள்ள அஜிம்னா கிராமவாசியான அம்ருத் தேசாய், தன் மகளுக்கு திருமணம் செய்து வைக்க நினைத்தார். அத்துடன் தனக்கும் மேளம் கொட்ட ஏற்பாடு செய்தார்!

மருமகனும் மகளும் ஒருவித குழப்பத்தோடு தந்தையின் ஐடியாவுக்கு ஓகே சொன்னாலும் ஊர் கறாராக மறுத்துவிட்டது. ஏன் தெரியுமா? சாதி ஒழிப்புக்காக ஏழு தலித் பெண்களை ஒரே நேரத்தில் ஒரே மேடையில், தான் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தார்! முதலில் மறுத்த ஊர் மக்கள் பிறகு எப்படியோ சம்மதித்தனர். ‘‘நூற்றாண்டுகளாக சமூகத்தில் நிலவும் சாதி வெறியைக் களையவே இந்த ஏற்பாடு!’’ என்கிறார் அம்ருத் தேசாய்.    

ரோனி