கவிதை வனம்



நானானவன்

எங்கோ தூரத்தில் கேட்கும்
சிட்டுக்குருவியின்
கீச்சிடல் போலும்
எங்கோ தூரத்தில் ஒலிக்கும்
திரைப்பாடலின்
மெல்லிசை போலும்
எங்கோ எனக்குள்ளே
ஒலித்துக்கொண்டே
இருக்கிறாய்
எனக்குள் நானாய்
நீயே உயிர்த்திருக்கிறாய்.

- வித்யாசாகர்

புன்னைகைப்பூ

நள்ளிரவில்
ஒரு துயரக்
கனவு போல்
வந்து உன்
கதவு தட்டும்
நீ கவனியாது
விட்ட என்
புன்னகை ஒன்று
மெல்லிய வாட்டத்துடன்
தன்னை வெளிப்படுத்தும் அதுதான் மறுநாள்
காலையில்
உன் தோட்டத்தில்
ஒரு பூவாகியிருக்கும்
சூடிக்கொள் அதையேனும்.
- கா.கண்ணன்